Headlines

சென்னையில் மீண்டும் கச்சேரியை தொடங்கிய மழை

சென்னையில் நேற்று பின்னிரவில் இருந்து லேசாக வெளுக்கத் தொடங்கிய வானம், இன்று பிற்பகலில் இருந்து மேகப்போர்வையை போர்த்திக் கொண்டது. சுமார் ஒருவாரத்துக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருவதையும், பஸ், ரெயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து ஆங்காங்கே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, எழும்பூர், மைலாப்பூர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடர்த்தியான…

Read More

செலவைக் குறைத்ததால் 1400 மில்லியன் எஞ்சியது

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெளிவூட்டினார். அங்கு அவர் தெரிவித்ததாவது; 2014 ஆம் ஆண்டு வைபவங்கள் மற்றும் கூட்டங்களுக்காக 335 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு 34 மில்லியனே ஜனாதிபதி செயலகத்தின் செலவாகும். 301 மில்லியன் குறைவடைந்துள்ளது. மரணங்களின் போது அனுதாபம் தெரிவிப்பதற்காக 2014 ஆம் ஆண்டு 15 மில்லியன் செலவிடப்பட்டுள்ள அதேவேளை, 2015 ஆம் ஆண்டு 3…

Read More

தவறை ஒப்புக் கொண்ட மஹிந்த!

இலங்கையின் ஜனாதிபதியாக தாம் பதவி வகித்த காலத்தில் தவறுகள் இடம்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது ஒப்புக்கொண்டுள்ளார். தன்னால் இழைக்கப்பட்ட தவறுகளை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகஉறுப்பினர்கள் இழைத்துவிடக்கூடாது என்றும் மகிந்த ராஜபக்ச அறிவுரை வழங்கினார். முன்னான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். நல்லிணக்கம் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் கேட்கும் எல்லாவற்றையும் கொடுப்பதல்ல. அதேபோல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில்…

Read More

ஓய்ந்தது பேய் மழை: வழமைக்கு திரும்புகின்றது சென்னை

சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீரில் தத்தளித்து வந்த சென்னையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதுடன் பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வருகிறது.  செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், மழை ஓய்ந்துள்ளதாலும் பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடந்த 2 நாட்களாக சைதாப்பேட்டை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், அடையாற்றில்…

Read More

வாகன விபத்தில் சிறுமி பலி : யாழில் சம்பவம்

யாழ். – வேலணை பகுதியில் கடற்படையினர் கெப் ரக வாகனத்தில்  மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் 10 வயது சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

முதற்தடவையாக பாராளுமன்றில் உரையாற்றும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச முதற்தடவையாக நாடாளுமன்றில் தற்சமயம் உரை நிகழ்த்துகிறார். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்திலே அவர் உரை நிகழ்த்துகிறார்.

Read More

விமான நிலையங்களில் வழிகாட்டும் ரோபோ

தற்காலத்தில், ரோபோ எனப்படும் எந்திர மனிதனின் சேவைகள் பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை தொடர்ந்து, விமான நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறும் பயணிகளுக்கு வழி காட்ட உதவும் ரோபோ ஒன்றை இங்கிலாந்து நிபுணர்கள் தயாரித்துள்ளனர். விமான நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறும் பயணிகளிடம் நட்பு ரீதியில் பழகி அவர்களை ஒரு வாசலில் இருந்து மற்றொரு வாசலுக்கு அழைத்து செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ பரிசோதனை இங்கிலாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்டது….

Read More

கிரிக்கெட் தேர்தலில் பிரதித் தலைவர் பதவிக்கு அர்ஜுண

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காகவே அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கிரிக்கெட் தேர்தல் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதோடு அமைச்சர் அர்ஜுண ரணதுங்க வேட்புமனு தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் முன்னாள் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உபாலி தர்மதாஸவும் கலந்துகொண்டுள்ளார். தலைமைத்துவதற்கு போட்டியிடுமாறு அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அதனை…

Read More

நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி கைது

நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி 25 இலட்சம்  ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சவூதியில் இலங்கை பெண்ணுக்கு இன்று மரண தண்டனை – சுமந்திரன் எம்.பி.

முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று (04) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சவூதியில் 50பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள போதும் இலங்கைப் பெண்ணின் பெயர் அதில் இருக்கவில்லை என்று நேற்று வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் துறை…

Read More

கோத்தபாயவிடம் மீண்டும் வாக்குமூலம்

ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில்  ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, கோத்தபாய சென்றார் இதேவேளை நேற்றும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த கோத்தபாய, வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஊவா மாகாண சபை அமைச்சராக உபாலி டெல்டன் சமரவீர சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண சபையின் விவசாய, நீர்ப்பாசன, காணி, கால்நடை உற்பத்தி, நன்னீர் மீன் வளர்ப்பு அமைச்சராக உபாலி டெல்டன் சமரவீர பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நேற்று பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான சமரவீர ஊவா மாகாண சபை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் 15 வருடங்கள் ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுள்ளார்.

Read More