Headlines

அந்தரத்தில் பிறந்த ஆயிஷா… – மனதை உருக்கும் உண்மைக் கதை!

அந்த விமானம் உயரே, இன்னும் உயரே சென்றது. இருபக்கமும் சாய்ந்து, நேராகி சமநிலையில் பறந்தது. திடீரென ஒரு பெண் அலறும் சத்தம். அனைவரும் திரும்பிப் பார்க்க, மேடிட்ட வயிற்றுடன் ஒரு பெண் விமானத்தில் உருண்டு, புரண்டு அழுதார். அனைவரும் பதற, அடுத்து உள்ள விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கதைபோல இருந்தாலும், இது 18 வருடத்துக்கு முன்பு குவைத்தில்…

Read More

சச்சின் தெண்டுல்கர் இலங்கை வருகை

உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் யுனிசெப் நிறுவனத்தின் வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் சிறுபராயத்தினரின் சுகாதாரப் பழக்கவழங்களை மேம்படுத்தல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த வைபவம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய அனுசரணையில் நேற்று ஆரம்பமானது. இந்த வைபவத்தில் சச்சின் தெண்டுல்கருடன், இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும் கலந்து கொண்டிருந்தார். யுனிசெப் அமைப்பின் சுகாதார மேம்பாட்டுத்திட்டத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவராக சச்சின்…

Read More

இந்த ஆண்டின் இறுதிக்குள் மருந்துகள் விலை குறையும்

இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்து வகைகளின் விலைகள் 50 சதவீதத்தால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று  சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன  தெரிவித்துள்ளார். புதிய மருத்து வகைகள் சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் அதிகளவிலான மருந்துகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய சட்டத்துக்கு அமைய மருந்துகளை விலை கொடுத்து வாங்குவோரைப் பாதுகாப்பது தொடர்பாக அதிகாரசபை ஒன்று நிறுவப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சில மருந்துவகைகளில் 200 தொடக்கம் 300…

Read More

தென்னாபிரிக்கா பயணமாகிறது அரச உயர் குழு

இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையின் ஒரு அங்கமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய இலங்கை அரசின்  உயர்மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது. தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர், அமைக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவே அரசின் உயர் மட்டக்குழு அங்கு செல்லவுள்ளது. இலங்கையில் உருவாக்கப்படவுள்ள இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில், மதத் தலைவர் களைக் கொண்ட ஒரு…

Read More

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக, யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

நாட்டில் அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண முஸ்லிம்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16)  ஜும்ஆ தொழுகையின் பின்னர் அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தடுக்கபட்ட வேண்டும், துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராககூடாது போன்ற கோரிக்கைகளை முனவைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே இதற்கான திர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read More

மஸ்ஜிதுல் அக்­ஸாவை மீட்­டெடுப்பது குறித்து, அஸ்வர் விடுத்துள்ள அறிக்கை

பலஸ்­தீன மஸ்ஜிதுல் அக்­ஸாவை மீட்­ப­தற்கு எமது பாரா­ளு­மன்­றத்தில் அவ­சர கவ­ன­யீர்ப்புப் பிரே­ரணை ஒன்று கொண்­டு­வர வேண்டும். அத்­துடன் அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளிலும் துஆப் பிரார்த்­த­னைகளை மேற்­கொள்ள உலமா சபை நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரி­வித்­துள்ளார். பலஸ்­தீ­னத்தில் இஸ்ரேல் மேற்­கொண்­டு­வரும் ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக அஸ்வர் வெளி­யிட்­டுள்ள  அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 60 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மேற்­கு­லக வல்­ல­ர­சு­களின் ஆத­ர­வுடன் பலஸ்­தீனில் இஸ்ரேல் மேற்­கொள்ளும் காட்டு தர்பார் தற்­போது…

Read More

கடிதங்களை விநியோகிக்காத மதுரங்குளி தபால்காரர் கைது

மக்களுக்கு விநியோகிப்பதற்குரிய ஒரு தொகை கடிதங்களை உரியவர்களுக்கு விநியோகிக்காது பௌத்த விகாரை ஒன்றின் அலுமாரியில் மறைத்திருந்த தபால்காரர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.  மதுரங்குளி தபால் நிலையத்தில் பணியாற்றும் மதுரங்குளி மஹகும்புக்கடவல பிரதேசத்சைத் சேர்ந்த தபால்காரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார். நேற்று   திங்கட்கிழமை குறித்த சந்தேக நபராக தபால்காரர் மக்களுக்கு விநியோகிப்பதற்கான ஒரு தொகை கடிதங்களை எடுத்துக் கொண்டு வெளியேறிய பின்னர் அவற்றை பௌத்த விகாரை ஒன்றின் புத்தக அலுமாரியில் மறைத்து…

Read More

பெண் ஒருவரை தாக்கி கட்டிவைத்து விட்டு நகைகள் கொள்ளை

ஏறாவூரில் இளம் குடும்பப் பெண் ஒருவரை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் மிச்நகர் பகுதியைச் சேர்ந்த இப் பெண்ணின் கணவனான கே.எம்.எம்.லாபிர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்துள்ளார். இவரின் மனைவியான முகம்மது இஸ்மாயில் சித்தி பரினா (38 வயது)  என்பவரே தாக்குதலுக்கு இலக்கானவராவர். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் நேற்று  பிற்பகல் 4.00 மணியளவில் வீட்டில் இருக்கும் போது மோட்டார் சைக்கிள் ஒன்றில்…

Read More

ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் இவர் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

24 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்படடுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

தனியார் வங்கியில் கொள்ளை : தம்புள்ளையில் சம்பவம்

தம்புள்ளை நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் கைக்குண்டை காட்டி ஊழியர்களை மிரட்டி 8 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சந்தேக நபர் வங்கி ஊழியர் ஒருவரையும் கடத்தி கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதுடன் பின்னர் குறித்த ஊழியர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

குழப்பத்தின் உச்சத்தில் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிடுகின்ற கருத்துக்களின் மூலம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை தகவல்கள் வெளியாகும் நிலை உருவாகியுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தன்னை காட்டிகொடுப்பதற்கு தன்னுடன் இருந்தவர்களே செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிய அனைத்தும் சந்தேகத்திற்குரியவைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ச தவறு செய்யாதவர் என்றால் எதற்கு காட்டிகொடுப்பிற்கு பயப்பட வேண்டும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதுவரையில்…

Read More