Headlines

அகில இலங்கை ரீதியாக பாத்திமா சிம்தா செய்த சாதனை இது

– சுலைமான் றாபி – இலங்கையின் 4 வது அபகஸ் மன எண்கணிதப்  போட்டியில் நிந்தவூரைச்சேர்ந்த மாணவி செல்வி எம். என். பாத்திமா சிம்தா  அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தினைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார். நிந்தவூர் அல்-மஸ்லம் வித்தியாலயத்தில் தரம் 01இல் கல்வி கற்கும்  இம்மாணவி நேற்று (27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வயது அடிப்படையில் இடம் பெற்ற UCMAS, அபகஸ்  போட்டியில் வெற்றி பெற்று முதலாவது…

Read More

செவ்வாயில் ஓடுகிறது தண்ணீர்… உறுதிப்படுத்தியது நாசா

செவ்வாய் கிரகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் திரவ நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதனால் அங்கு மனிதர்கள் வசிக்கக் கூடிய சூழ்நிலை குறித்த சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் முடுக்கி விடவுள்ளனர். மார்ஸ் ரீகனயனஸன்ஸ் ஆர்பிட்டர் (எம்.ஆர்.ஓ) மூலம் கிடைத்துள்ள தகவல்களை ஆய்வு செய்து பார்த்து இந்த முடிவுக்கு நாசா வந்துள்ளது. முன்பு எப்படி அபரிமிதமாக அங்கு தண்ணீர் இருந்ததோ அதேபோல இப்போதும் அங்கு தண்ணீர் இருப்பதாக கூறுகிறது நாசா. செவ்வாயில் உள்ள மலைப்…

Read More

பிரபல நரம்பியல் நிபர் Dr. ஹப்ஸா மபாஸ் அவர்களிடம் வைத்தியம் செய்ய வேண்டுமா?

சென்றவாரம் பிரபல நரம்பியல் நிபுணர் Dr. ஹப்ஸா மபாஸ் அவர்கள் காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தியது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்ட்டவர்களின் உறவினர்கள் பலர் இவரிடம் வைத்தியம் பெறுவதற்காண தேவை தமக்கும் உள்ளதெனவும். சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை செய்யும் பொருட்டு Dr. ஹப்ஸா மபாஸ் அவர்கள் தம் சிகிச்சை நேரங்களை அறிவித்துள்ளார்கள். அதன்படி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நோயாளிகள் சிகிச்சை பெறலாம்….

Read More

“தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்களுக்கு, இனிமேல் பொலிஸ் பதிவு கட்டாயம்”

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் பதிவு முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இந்த உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் ஒர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றுவோர் மற்றும் குடியிருப்பவர்கள் தங்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற…

Read More

ஒபாமாவை சந்தித்தார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அரச தலைவர்களுக்காக  ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பகல் போசன விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். இந்த விருந்துபசாரத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.

Read More

வெளிநாடு வாழ் தொழிலாளர் சகோதரர்களே !

– எம்.வை.அமீர் – இனி நமக்காக நாமே பேசுவோம். வெளிநாடுகளில் பணி புரியும் அப்பாவி இலங்கை ஏழைத் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி சிந்தித்தவர் எவருமில்லை. மத்திய கிழக்கில் மாத்திரம் சுமார் ஏறத்தாள 15 லட்சம் இலங்கை தொழிலாளர்கள் இருக்கின்றனர். மாறி மாறி எத்தனை ஆட்சிகள் தோன்றினாலும் எந்தவொரு அரசாங்கமும் எமது விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததுமில்லை . எனவே நாம் வாக்களிக்கும் வசதியைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே , அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ, இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகளை மையமாகக்கொண்டு,…

Read More

25 ஆயிரம் வீடுளை சீமெந்தினால் பூசி பூரணப்படுத்த நிதி ஒதுக்கீடு

– அஸ்ரப் ஏ சமத் – ஜக்கிய நாடுகள் அமையத்தினால் வருடா வருடம் அக்டோபா் 5 ஆம் திகதியில் பிரகடனப்படுத்தியுள்ள உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு வீடமைப்பு அமைச்சு நாடுபூராவும் வீடுகளை நிர்மாணித்து சீமெந்தினால் தமது வீடுகளின் சுவா்களை பூசிக் கொள்ள முடியாமல் உள்ள 25 ஆயிரம் வீடுளை சீமெந்தினால் பூசி பூரணப்படுத்துவதற்கென கடந்த வாரம் 250 மில்லியன் ருபா நிதியை அமைச்சரவை அங்கிகரித்துள்ளன. என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்  (28)ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில்…

Read More

சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் – முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் மீண்டும் அநீதி!

சட்டக் கல்லூரி அனுமதி – 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர். சட்டக் கல்லூரி அனுமதியில் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தமிழ் பேசும் பரீட்சார்த்திகளுக்கு திட்டமிடப்பட்ட புறக்கணிப்பு, அநீதி இடம்பெறுகின்றது என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றது. இவை சம்பந்தமாக பரீட்சார்த்திகள்…

Read More

முஸ்லிம்கள் மீதான யுத்த குற்றங்கள் கவனத்தில் கொள்ளப்படுமா?

– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் – இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை போருக்குப் பின்னரான இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளது என அண்மையில் இராணுவ வெற்றி குறித்த ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தினார். உண்மையில் கடந்த மூன்று தசாப்த கால இனப்பிரச்சினை வரலாற்றில் பாதிப்புக்குள்ளான சகல சமூகங்களுக்கும் உரிய நீதியை நியாயத்தை பெற்றுக் கொடுப்பதிலேயே யதார்த்தபூர்வமான இன நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். LLRC கற்றுக்…

Read More

புலிகள் பொறுப்பு சொல்ல வேண்டும் – பிரதமர்

இன்று இலங்கை மக்கள் சுதந்திரமடைந்துள்ளனர். போர்க்குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்தல் மற்றும் பொருளாதாரத் தடை ஆகிய பீதிகளிலிருந்து மக்களை அரசாங்கம் மீட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறான செயல்களுக்கு பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுப்பு சொல்ல வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு வழக்குத் தொடர்வது என்றும் சிவில் சட்டம் அல்லது இராணுவ சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வது என்ற நிலை அன்று இருந்தது. அப்போது இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும், அமெரிக்கா போன்ற…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் வழங்கியுள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழத்துச் செய்தி

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரிமிக்க சமூகமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இஸ்லாம் மார்க்கம் மனித சமூகத்தின் விமோசனத்திற்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் படியும் எமக்கு போதித்துவருவவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்றைய தியாமிகு திருநாளில் நாம் விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படும் வகையில் எமது வாழ்வின் பணிகளை அமைத்துக்கொள்ளுமாறு பெருநாள் வாழத்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பொருநாளையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இந்த பெருநாள்…

Read More

போலி ஜின் வைத்தியர்களுக்கு பதிலடி! (video)

வசந்தம் TV யில் நேற்றிரவு நடைபெற்ற முகமூடி நிகழ்சியில் பிரபல உளவியல் நிபுணர் மௌலவி அப்துல் ஹமீத் ஷரயி அவர்கள் கலந்துகொண்ட  நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியில் மக்களை ஏமாற்றும் போலி மந்திரவாதிகளின் வித்தைகள், ஜின் வைத்தியம் என்று ஊரை ஏமாற்றும் போலி தந்திரவாதிகளின் தந்திரங்கள் என்பன உடைத்துக் காட்டப்பட்டது.

Read More