Headlines

உலகம் முழுவதும் ஒரே நாளில் ஹஜ்ஜூப் பெருநாள்

சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ராஜாக்கனி, யுனிவர்சல் பதிப்பகத்தின் உரிமையாளர் ஷாஜகான் ஆகியோர் கூறியதாவது:இஸ்லாமிய ஆண்டின் துல்கஜ் மாதத்தின் 10–ம் நாளில் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. வானில் தெரியும் பிறையை பொறுறுத்து ஹஜ்ஜூப் பெருனாள் தினம் முடிவு செய்யப்படும்.இந்த ஆண்டுக்கான பிறை கடந்த 15–ந்தேதி தொடங்கியது. அதாவது 14–ந்தேதி இரவு தெரிந்த பிறையின் அடிப்படையில் மறுநாள் தீர்மானிக்கப்பட்டது. வழக்கமாக வளைகுடா நாடுகளில் முதலிலும், அதை தொடர்ந்து ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும்…

Read More

ஐ.நா. அறிக்கைக்கு நாமல் கண்­டனம்

இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித குலத்­திற்­கெ­தி­ரான குற்­றங்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட வேண்டும் என்று ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் வலி­யு­றுத்­தி­யி­ருப்­பதை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ கண்­டித்­துள்ளார். ஐ.நா. அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். அறிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது; ஐ.நா. அறிக்கையில் கலப்பு விசேட நீதி மன்றத்தை அமைத்து இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சர்வதேச நீதி…

Read More

கட்டாரில் இலங்கை முஸ்லிம்களின், ஹஜ் பெருநாள் ஏற்பாடு

வழமை போன்று இம்முறையும் கட்டாரில் வசிக்கும் இலங்கையருக்கான ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், தமிழ் மொழியிலான கொத்பாப் பிரசங்கமும் கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கட்டாரில் இயங்கி வரும் இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் தாய் அமைப்பாக செயற்பட்டு வரும் ஸ்ரீ லங்கா மஜ்லிஸ் கதார் அமைப்பு (SLMQ) செய்துள்ளது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு பெருநாள் தொழுகை தொழுவிக்கப்பட இருப்பதால் கட்டார் வாழ் இலங்கை…

Read More

கோத்தபாயவுக்கு தொடரும் சோகம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், இன்று  மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது. பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோத்தபாய இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கையில், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை சீருடைகளை மாற்றி ஈடுபடுத்தியமை தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ரக்ன லங்கா பாதுகாப்பு ஊழியர்களை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பாகவும், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இச்சம்பவம் குறித்து கோத்தபாயவிடம் ஏற்கனவே…

Read More

5 பில்லியன் டொலர் செலவில் தலைமன்னாருக்குப் பாலம்

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுடன், நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமைமாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 22 கிலோ…

Read More

புலனாய்வு துறை அதிகாரி மரணம்

கம்பஹா, கொட்டதெனியாவில் படுகொலை செய்யப்பட்ட 5வயது சிறுமியான செயா சந்தவமியின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கடமைக்காக சென்றிருந்த பொலிஸ் விசேட பணியகத்தின் (புலனாய்வு பிரிவு) கான்ஸ்டபிள், மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து மரணமடைந்துள்ளார். நெஞ்சு வலி காரணமாகவே அவர், மரணமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவருடைய சடலம் திவுலுப்பிட்டிய ஹோரகஹமுல்ல வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

மஹிந்த ராஜபக்ஷ அநியாயம் செய்திருந்தால் நடவடிக்கை: ராஜித்த

யுத்தக் காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலான நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரை பின்பற்றியவர்கள் அந்த நீதிமன்றத்தின் முன்னால் சாட்சியளிக்கவேண்டும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி, கட்டளையிடும் அதிகாரி மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட யாரோ அநியாயம் செய்திருந்தால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். என்னுடைய அனுபவத்தின் பிரகாரம் யுத்தம் ஒரு குற்றமாகும். அதன் பிரகாரம் யுத்தத்துக்காக யாராவது ஒருவர் கட்டளையிட்டிருந்தால்…

Read More

முன்னாள் பிரதமரின் மகன் பதவிப் பிரமாணம் – மு.பிரதமர் மற்றும் மைத்திரி பங்கேற்பு

– ஜே.எம்.ஹபீஸ் – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சராக முன்னாள் பிரதமரின் மகன் அனுராதா ஜயரத்தன பதவிப் பிரமாணம் செய்த பின் (17.9.2015) மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சிற்கு விஜயம் செய்து கடமைகளைப் பொறுப்பேற்றார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா, முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன, விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கா, கடற்றெதழில் நிரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதி அமைச்சரின் துணைவியார்…

Read More

ராஜித + கயந்த அமைச்சரவை, பேச்சாளர்களாக நியமனம்

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகிய இருவரும் அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது (17) நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

14 வயது இலங்கை மாணவன், விமானத்தை கண்டுபிடித்து சாதனை (படங்கள்)

பானந்துகம – அகுரஸ்ஸ  பகுதியைச் சேர்ந்த  திஸல் இன்துல (14 வயது) விமானம் ஒன்றை அமைத்து சாதனை படைத்துள்ளான். கொடபிடிய தேசிய பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனாகும். இவரது முயற்சியால் ரிமோட்டினால் பறக்கும் ஆகாய விமானம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மேலும் தற்போது ஒருவர் அமர்ந்து செல்லக்கூடிய விமானம் ஒன்றை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார். குறித்த மாணவன் எதிர்காலத்தில் பொறியியலாளராக வரவேண்டும் என ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மாத்தறை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு மொரவக்க, கொட்டபொல பிரதேசத்தில் நபர் ஒருவரை கூரிய ஆயுத்தில் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 72 மற்றும் 64 வயதுடைய இருவருக்கே  இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மண் மேடு சரிந்து விழுந்ததில் மாணவன் பலி : நாவலப்பிட்டியில் ​சம்பவம்

– க.கிஷாந்தன் –  நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மாணவனொருவன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 4இல் கல்வி பயிலும் 09 வயதுடைய திருச்சந்திரன் கோஷிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த மாணவன் பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்மேடுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத…

Read More