Headlines

பண்டைய ஸ்பார்ட்டன் மாளிகை கண்டுபிடிப்பு

கற்காலத்துக்கு அடுத்த காலகட்டத்தில், மக்கள் வெண்கல உபகரணங்களை பயன்படுத்த தொடங்கிய காலத்தில் அழிந்துபோன ஸ்பார்ட்டாவின் மிசிநேயியன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மாளிகை கண்டறியப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்கத்தின் கலாச்சாரமான ஸ்பார்ட்டாவின் மிசிநேயியன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மாளிகையின் மிஞ்சியிருந்த பகுதிகளை கிரீஸ் நாட்டு அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். கிரீஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஸீரோகாம்பி என்ற பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பிரபலமாக இந்தக் கலாச்சாரம் கருதப்படுகிறது. பத்து அறைகள் கொண்ட இந்த மாளிகை அயியோஸ் வேசிலேயியோஸ்…

Read More

மோடி -­சந்­தி­ரிகா சந்­திப்பு

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க இன்று வியா­ழக்­கி­ழமை இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியை புது­டில்­லியில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். புது­டில்­லியில் இன்று இந்து, பௌத்த மாநாடு நடை­பெ­று­கின்­றது. இதில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க கலந்து கொள்­கின்றார். இந்த மாநாட்டில் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியும் பங்­கேற்­க­வுள்­ள­துடன் இரு­வரும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சந்­திப்பின் போது இலங்­கையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் மாற்றம் குறித்து முக்கியமாகப் பேசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

‘தமது பொருட்களுக்கு தேடலில் கூகிள் முன்னிடம் தருகிறது’

பிரபல கூகிள் நிறுவனம் , இணையத்தில் தனக்கு இருக்கும் முதன்மை இடத்தை பயன்படுத்தி, இணையத்தில் விளம்பர தேடல்களில் துஷ்பிரயோகம் செய்வதாக இந்திய தொழில் போட்டிகளுக்கான ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. ‘தமது பொருட்களுக்கு தேடலில் கூகிள் முன்னிடம் தருகிறது’ கூகிள் நிறுவனத்தை 3 வருடங்களாக கண்காணித்துவந்த அந்த ஆணையத்தின் புலனாய்வாளர்கள், தனது தேடுதலுக்கான தளத்தில் விற்பனைச் சேவைகள் போன்ற தமது தயாரிப்புகளுக்கு இணையற்ற முக்கியத்துவத்தை வழங்குவதாக கூறியுள்ளனர். இதனால் மக்களுக்கு பெருமளவில் பொருத்தமான தகவல்கள் மறுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தமது…

Read More

லோகோவை மாற்றிய கூகுள்

பிரபல இணையதளங்களுக்கான தேடு இயந்திரங்களில் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ‘கூகுள்’ தனது முகப்பு பக்கத்தில் உள்ள அடையாளப் பெயரின் எழுத்துக்களில் சிறிய மாற்றத்தை செய்துள்ளது. இத்தனை காலமாக பெயர்கள் மற்றும் சம்பவங்களை தேடுபொறியில் டைப் செய்து விபரங்களை பயனாளிகள் பெற்றுவந்த நிலையில், வெறும் புகைப்படங்களை வைத்தே அதற்கான சம்பவங்கள் பற்றிய தகவல்களை பெறும் புதிய தேடுமுறைகளை அறிமுகப்படுத்துவுள்ளதாக சமீபத்தில் அறிவித்த ‘கூகுள்’, அனைத்தையும் காலமாற்றத்துக்கு ஏற்ப நவீனமயமாக்கும் முயற்சியில் தனது முகப்பு பக்கத்தில் உள்ள அடையாளப் பெயரின் எழுத்துக்களில்…

Read More

அமைச்சர்களின் எண்ணிக்கை: அனுமதி வழங்கினார் சபாநாயகர்

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை கோரும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார். அந்தவகையில் அமைச்சர்கள் 48 பேரும் பிரதியமைச்சர்கள் 45 பேரும் நியமிக்கப்படுவர்.

Read More

எதிர்க் கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி வாழ்த்து

8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் எதிர்க் கட்சித் தலைவருக்கான வாழ்த்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இனிமேல் பாராளுமன்றில் இனவாத கருத்து வெளியிடுவது தடை

நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் எவ்வித கருத்துக்களையும் உறுப்பினர்கள் வெளியிட அனுமதிக்கப்பட மாட்டாது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. எட்டாம் நாடாளுமன்றின் உறுப்பினர்கள், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் உரைகளை ஆற்ற இடமளிக்கக் கூடாது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனையை, சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Read More

யார் இந்த சம்பந்தன்..?

இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை இரா.சம்பந்தன் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 82 வயதான சம்பந்தன் பற்றிய சில தகவல்கள். •    1933ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி இராஜவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் பிறந்தார். •    சம்பந்தன் கல்ஓயா திட்டத்தின் களஞ்சிய பொறுப்பதிகாரியான ஏ.இராஜவரோதயத்தின் மகனேயாகும் •    சம்பந்தன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார், குருணாகல் புனித அன்னம்மாள், திருகோணமலை…

Read More

புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்தலாம்

புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கை விரல் அடையாளம் மற்றும் டிஜிடல் புகைப்படத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய கடவூச் சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளார் நாயகம் எம்.என் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார் . ஒரே நாளில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்கு 3500 ரூபாவும் சாதாரண முறையில் பெற்றுக் கொள்வதற்கு 1500 ரூபாவும் பெற்றுக் கொள்வதாகவும் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார் ….

Read More

தேசிய அரசாங்கம் + அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் அமைச்சரவையில் அதிகரிப்பு மேற்கொள்ளவென பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் ஆரோக்கியமான வாத விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை சவாலுக்கு உட்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டார். 19வது திருத்தச் சட்டத்தின்படி தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்றில் அதிக ஆசனத்தை பெறும் கட்சி, பாராளுன்றில் உள்ள ஏனைய சுயாதீன குழுக்களுடன் இணைந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து அமைக்கும் அரசாங்கம் என…

Read More

உழல் அற்ற ஒரு நாட்டை காண்பதே, எனது குறிக்கோள் – பதவி விலகிய JVP எம்.பி.

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியினால் தனக்கு எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ். மாயாதுன்ன தெரிவித்துள்ளார். தன் மீது நம்பிக்கை வைத்து தன்னால், முன்னெடுக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர கட்சிக்குள் வெளியில் இருந்த தனக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான…

Read More

மத்தல விமான நிலையம், நெற் களஞ்சியமானமை – பாராளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை

மத்தல சர்வதேச விமான நிலைய களஞ்சிய சாலைகளில் நெல் களஞ்சியப்படுத்தப்படுதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத்தல விமான நிலைய களஞ்சிய சாலைகளில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கு எடுத்த செயற்பாடு மற்றும் நெல் அறுவடை தொடர்பில் விவாதிப்பதற்கு நேரத்தை ஒதுக்கி தருமாறு எதிர்க்கட்சிகள் கோரிநின்றன. இதன்போது எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்தல விமான நிலையத்தின் களஞ்சிய சாலையில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கு எடுத்த தீர்மானம் மற்றும் மத்தல விமான நிலையம் தொடர்பில் இரண்டு விவாதங்களை நடத்துவதற்கு இடமளிக்க…

Read More