Headlines

தாஜுடீன் தொடர்பாக நீதிமன்றில் அறிக்கை!

ரகர் வீரர் வசிம் தாஜுடீன் விபத்துக்குள்ளான வாகனம், தமது நிறுவனம் விற்பனை செய்யவில்லை என கார் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. குறித்த வாகனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனமே இவ்வாறு நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸிடம் அறிக்கை சமர்ப்பித்ததோடு, இவ் வாகன மாதிரி தங்கள் நிறுவனத்தின் ஊடாக நேரடியாக கொள்வனவு செய்ய முடியொதென குறிப்பிட்டுள்ளனர். உள்ளூர் இறக்குமதியாளர்கள் ஊடாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியில் இவ் வாகன…

Read More

ஹுனுபிட்டிய பள்ளிவாசலில் சமயக் கடமைகளை தொடரலாம் : நீதிமன்றம் அனுமதியளிப்பு

திப்­பிட்­டி­கொட, ஹுனு­பிட்­டிய மொஹி­யத்தீன் பள்­ளி­வா­சலில் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த அனைத்து சமயக் கட­மை­க­ளையும் இடை­யூ­றுகள் எது­வு­மின்றி நடத்­து­வ­தற்கு கட­வத்தை நீதிவான் நீதி­மன்ற நீதவான் நேற்று உத்­த­ரவு வழங்­கி­ய­துடன் கிரி­பத்­கொட பொலி­ஸினால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்­கினை நிரா­க­ரித்தார். இதனால் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த சமய கட­மை­க­ளுக்கு சட்­ட­ரீ­தி­யாக அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. ஹுனு­பிட்­டிய மொஹி­யதீன் பள்­ளி­வா­சலின் மேல்­மாடி சட்ட விரோ­த­மாக நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் இது ஒரு மத்­ர­ஸா­வே­யன்றி பள்­ளி­வாசல் அல்ல. அதனால் சமயக் கடை­மை­களைத் தொடர முடி­யா­தெ­னவும் இது…

Read More

நண்பன் ஓட்டிவந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் – பரபர வீடியோ

அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களால் சாலை விபத்துகள் பெருகிவரும் சவுதி அரேபியாவில் நண்பன் ஓட்டிவந்த கார் மோதி பல அடி தூரத்துக்கு பள்ளி மாணவன் தூக்கி வீசப்படும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சவுதியின் தெற்கேயுள்ள ஜஸான் மாகாணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், அங்குள்ள மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து செல்லும் அந்த மாணவன் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வேகமாக காரை ஓட்டிவரும் அவனது நண்பன் காரை அவன்மீது மோதிவிடுகிறது. அடிபட்ட வேகத்தில் மாணவன் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு,…

Read More

அதிபர் பதவி ஓய்வுக்கு பின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஒபாமா திட்டம்

தற்போது அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற 2017–ம் ஆண்டு முடிவடைகிறது. அதன் பின்னர் எதிர்காலத்தில் அவர் மேற்கொள்ளும் பணி குறித்து தற்போது பல யூகங்கள் எழ தொடங்கி விட்டன. இந்த நிலையில் அவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கொலம்பியா பல்கலைக் கழக தலைவர் லீ பொலிக் கர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது…

Read More

இந்தியா புறப்படுகிறார் பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்கரமசிங்க, இம்மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் விஜயத்திற்கான திகதி குறித்து தற்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், எதிர்க்கட்சி தலைவர் நியமனம் மற்றும் அமைச்சரவைக்கு அதிக உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய நாடாளுமன்ற அங்கீகாரம் ஆகியன பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இவ்விஜயம் அமையுமென தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த அரசாங்கத்தை பெரிதும் எதிர்த்த இந்தியா, தற்போதைய மைத்திரி அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. சீனாவுடனான இராஜதந்திர உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பிரதமரின் இந்திய விஜயம் முக்கியத்துவம்…

Read More

மக்களின் கோபங்களையும் சபையில் பிரதிபலிப்போம்

தமிழ் முற்­போக்கு முன்­ன­ணியின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு வந்­துள்ள ஆறுபேரைக் கொண்ட நாம் எமது மக்­களின் மகிழ்ச்­சி­யையும் துன்ப துய­ரங்­க­ளையும் கண்ணீர் சிந்தும்விட­யங்­க­ளையும் இந்தப் பாரா­ளுமன்­றத்தில் வெளிப்­ப­டுத்து­வதைப் போன்றே எமது மக்­களின் கோபங்­க­ளையும் சபையில் பிர­தி­ப­லிப்போம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மனோ கணேசன் தெரி­வித்தார். புதிய பாரா­ளு­மன்­றத்தின் நேற்­றைய சம்­பி­ர­தாய நிகழ்வின் போது கட்சித் தலை­வர்கள் உரைகள் இடம்­பெற்­றன.இதில் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி சார்பில் அதன் தலைவர் என்ற வகையில் உரை­யாற்­று­கை­யி­லேயே மனோ கணேசன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மனோ கணேசன் இங்கு மேலும்…

Read More

வத்தளை பள்ளிவாயலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை, திப்பிட்டிகொட பள்ளிவாசலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (01) மஹர நீதிமன்த்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. குறித்த பள்ளிவாசலினால் பொதுமக்களுக்கு தொல்லை எனத் தெரிவித்து இந்தப் பள்ளிவாசலுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கிரிபத்கொட பொலிஸாரினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து பள்ளிவாசலில் தொழுகை மேற்கொள்வதற்கும் நிர்மாணத்திற்கும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆர்.ஆர்.டி சட்ட ஆலோசனை அமைப்பு, இந்த வழக்கிற்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களாக போராடியதுடன் இந்த பள்ளிவாசல் முஸ்லிம்…

Read More

புதிய அமைச்சரவை, வெள்ளிக்கிழமை பதவியேற்கும் – ரவி

புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக ஐ.தே.கவின் பிரதித் தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 45 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாக அது அமையும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியதோடு இதில், ஐ.தே.க.வுக்கு 33 அமைச்சரவை அமைச்சுகளும் , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 12 அமைச்சரவை அமைச்சுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு மேலதிகமாக பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் அன்றைய தினம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

Read More

கம்மன்பிலவின் கருத்தால் சபையில் கடும் சர்ச்சை

நாட்டை பிரிக்க ஆயுத முனையில் முடி­யாது போனதால் அர­சியல் ரீதி­யாக அதனை முன்­னெ­டுக்க ஆயுதக் குழுக்­களின் அர­சியல் பிர­திநி­திகள் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக உதய கம்­மன்­பில எம்.பி. நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரிவித்ததால் முதல் நாள் சபை அமர்­வி­லேயே சர்ச்சை தலை­தூக்­கி­யது. இவ்­வாறு சபையில் ஆயு­தங்கள் தொடர்­பாக உரை­யாற்ற முடி­யாது என உதய கம்­மன்­பில எம்.பி.யின் உரைக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது எதிர்ப்பை வெளி­யிட்டார். எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின்முத­லா­வது சபை அமர்வு, சபா­நா­ய­க­ராக தெரி­வான கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் நேற்று இடம் பெற்­றது. இதன்…

Read More

கோத்தா, துமிந்த, தன­சிறி, உபாலி உள்­ளிட்ட 9 பேருக்கு ஜனா­தி­பதி ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடி­கார, தெஹி­வளை – கல்­கிஸை மாந­கர மேயர் தன­சிறி அம­ர­துங்க உள்­ளிட்ட ஒன்­பது பேர் நாளையும் நாளை மறு தினமும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வி­னரால் விஷேட விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மஹிந்த ராஜ­பக் ஷவின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வ­னத்தின் ஊழி­யர்­களை ஈடு­ப­டுத்­தி­ய­மை­ உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில்…

Read More

போருக்குப் பின்னரான இலங்கையில் நல்லதொரு மாற்றம் : ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி

போருக்குப் பின்னரான ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாய் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினால், நாட்டில் ஜனநாயகமும், சமாதானமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐந்தாவது தடவையாக் கொழும்பில் நேற்று  ஆரம்பமாகிய சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச பாதுகாப்பு மாநாடானது ‘பூகோள அச்சுறுத்தல்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தேசிய…

Read More

நீண்ட இடைவெளியின் பின்னர் நாடாளுமன்றில் தம்பதிகள்

மூன்று தசாப்த கால இடைவெளியின் பின்னர் இலங்கை நாடாளுமன்றிற்கு கணவனும் மனைவியும் செல்லும் முதல் சந்தர்ப்பம் இன்று பதிவாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட தயா கமகே மற்றும் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட அனோமா கமகே ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். வர்த்தகரான தயா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தயா கமகே இதற்கு முன்னதாக கிழக்கு மாகாண சபையின்…

Read More