Headlines

முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது : ருவன் விஜயவர்த்தன

நாட்டில் நிலைகொண்டுள்ள முப்படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சியினர் பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அவ்வாறானதொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து படைவீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும்,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தேர்தலை முன்னிட்டு ,எதிர்க்கட்சியினரால் வழமையாக முன்னெடுக்கப்படும் பொய்ப் பரப்புரைகளை கேட்டு பொதுமக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்று…

Read More

கல்முனை வடக்கு இளைஞர் அமையம் ACMC யை ஆதரிக்க தீர்மானம்

(அப்துல் சுகைர் லத்தீப்) கல்முனை வடக்கு இளைஞர் அமையம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பூரணமாக ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கும் அதன் வேட்பாடளர்களின் வெற்றி வாய்ப்புக்காகவும் வெளிப்படையாக களமிறங்கி செயற்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கல்முனை வடக்கு இளைஞர் அமையத்தின் தலைவர் ஏ.எச்.எம் பூமுதீன் தலைமையில் நடைபெற்ற விஷேட தேர்தல் கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் கிராம சேவகர் பிரிவு…

Read More

நாசகார சக்திகளுக்கு எதிராக நாம் துணிந்து பேசினோம்

பாரம்பரியமாக இருந்த எமது காணிகளை அபகரித்து கொண்டு அதனை மக்களுக்கு கொடுக்காமல் இருந்த போது அதனை பெற்றுக்கொடுக்க முடியாத அரசியல் தலைமைகள் இந்த மாவட்டத்திலும் இருந்ததை பார்க்கின்றேன் என்று கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் திருமலையில் உள்ள கருமலையூற்று பள்ளிவாசலினை பாதுகாப்பு தரப்பு ஆக்கிரமித்து வைத்திருந்த போது அதனை கூட மீட்டுக் கொடுக்க முடியாத பாராளுமன்ற பிரதி நிதித்துவம் இந்த மாவட்டத்தில் இருந்ததாகவும் கூறினார். திருகோணமலை மாவட்டத்தில் ஜக்கிய தேசிய…

Read More

தாஜுதீனின் சடலம் தோண்டி எடுப்பு!

-Al Mashoora- மகிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சி காலத்தில் (2012) திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ரக்பி விழையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் சடலம் மேலதிக விசாரணைக்காக (02.08.2015) தெகிவளை மைய்யவாடியில் தோண்டி எடுக்கப் பட்டது.

Read More

இத்தேர்தலுக்குப் பின்னர் வேறுபட்ட அரசியல் நெருக்கடிகைளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம் – இஸ்மாயில்

எம்.சி.அன்சார் ஆண்டாண்டு காலமாக அரசியல் செய்துவரும் எமது முஸ்லிம் தலைமைகள் சமூக, பொருளாதார நலனில் அக்கறைகொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் குறைகளை நிவர்த்திப்பதற்கான பல வாய்ப்புக்களை அவர்கள் கொண்டிருந்தபோதிலும் அதன் பலனை மக்கள் அனுபவிக்கவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நாம் பொதுத்தேர்தல் ஒன்றினை எதிர் நோக்கியுள்ளோம். இத்தேர்தல் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இத்தேர்தலுக்குப் பின்னர் வேறுபட்ட அரசியல் நெருக்கடிகைளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். எதிர்வருகின்ற தேர்தலிலே முஸ்லிம் மக்களுக்காக எப்போதும் தைரியமாக குரல்கொடுக்கும் அகில இலங்கை…

Read More

அணிவகுப்போம் அறப்போருக்கு!

A.S.M.இர்ஷாத் அணிவகுப்போம் அறப்போருக்கு… ஏற்றமிகு சமுதாயமா? ஏமாறும் சமூகமா? வெற்றிகரச் செயலா? வெற்றுப் பேச்சா? ஏற்றமிகு வன்னி மாவட்டத்தின் கண்ணியம் மிக்க முஸ்லிம் வாக்காளர்களே… உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக! உக்கிரமும், நெருக்கடிகளும் மிக்க இக்கட்டான சூழ்நிலையில் திக்குத் தெரியாது வாக்குச் சாவடி நோக்கி விரையும் உடன் பிறப்புக்களே ! கொஞ்சம் நில்லுங்கள்! பாதையைவிட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது. பட்டுப்போகும் மரத்திலிருந்து நிழலோ பழமோ கிடைக்காது. உரிமை காக்கும் துணிவை அரணாக கொண்டு முஸ்லிம் சமூதாயத்தில் மறுமலர்ச்சியை…

Read More

நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகளைப் பெறும் அரசியல் கலாச்சாரம் என்னிடம் இல்லை

தேர்தல் காலங்களில் மட்டும் மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி அவர்களின் நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வங்குரோத்து அரசியல் கலாசாரம் தன்னிட மில்லையென அமைச்சரும் வன்னி மாவட்ட வேட்பாளருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது, நான் என்றுமே மக்கள் பணியாளனாகவே இருந்து வருகின்றேன். அரசியலுக்காக மட்டும் மக்களிடம் வருவதில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின்…

Read More

அ.இ.ம.கா. கல்முனை அலுவலகத்துக்கு தீவைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக் குடியில் திறந்திருந்த தமது அலுவலகத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் விஷமிகள் தீவைத்துள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பாகப் போட்டியிடும் கலீலுர்றஹ்மான் என்பவரின் அலுவலகமே தீ வைக்கப்பட்டதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. இந்தத் தீ பரவாமல் சமயோசிதமாக அணைக்கப்பட்டதாகவும் அலுவலகத்தில் இருந்த தேர்தல் விளம்பர சுவரொட்டிகள், மற்றும் பிரசுரங்கள் கட்டிடத்தின் சிறிதளவான பகுதி…

Read More

மாகாண சபைகள் கலைப்பு – 2016 ஜூனில் தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தற்போதுள்ள மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. கிழக்கு மாகாண சபை உட்பட ஏனைய அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படவுள்து. அதன்படி 2016 மே மாதம் கலைக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஏழாம் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(sm)

Read More

ரவியின் மற்றுமொரு ஆதரவாளர் பலி!

கொழும்பு, கொட்டாஞ்சேனை புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், இன்று திங்கட்கிழமை(03) அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிரோஷன் சம்பத் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். புளத்சிங்ஹள நிரோஷன் சம்பத் என அழைக்கப்படும் இவர் 36 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பத்தில் காயமடைந்த மேலும் ஐந்து பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(31)…

Read More

கட்சி என்பது கிப்லாவோ, குர்ஆனோ அல்ல – அமீர் அலி

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – கட்சி என்பது கிப்லாவோ குர்ஆனோ அல்ல அது ஒரு சங்கம்,அது  சமூகத்திற்காக இருக்க வேண்டும்,அரசியலுக்காக தான் கட்சி இருக்க வேண்டுமே தவிர மக்களை அடக்கி வைப்பதற்காக அந்த கட்சிகள் இருக்காது என தெரிவித்துள்ள சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்எஸ்.அமீர் அலி இந்த கட்சிகளை தமது விசுவாசமாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து சமூகத்திற்கு தேவைப்படுகின்ற போது விடுபாடாத நிலைய ஏற்படும் என்றால் அதில் ஏதோ தவறு இருப்பதாகவும்…

Read More

கம்பஹா மாவட்டமும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்

இன்று தேர்தல்களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனேகர் தாம் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவெடுத்திருப்பர். இம்முடிவுகளின் தொகுப்பே இனி வரும் ஐந்தாண்டுகளுக்கு எம்மை ஆளப்போகிறது. இவை சாதாரண முடிவுகளல்ல எம்மை ஆளப்போகும் எமது தலையெழுத்துக்களின் பிரதிகள். கம்பஹாவில் A.H.M நவ்ஷாத் மற்றும் சிலர் போட்டியிடுகின்றனர். எமது வாக்கு ஒரு அந்நியருக்குப் போவதால் தனிப்பட்ட இலாபங்கள் தவிர்ந்து சமூகத்திற்கான பிரயோசனங்கள் மிகக் குறைவே. கம்பஹாவைப் பொறுத்தவரை ஒரு முஸ்லீம்பாராளுமன்றபிரதிநிதித்துவம் இன்றைய சூழ்நிலையில் அசாத்தியமே. இருப்பினும் A.H.M நவ்ஷாதிற்கு இடும்…

Read More