Headlines

மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது: தேர்தல்கள் திணைக்களம்

உயர்தரப் பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்களை பாதிக்காத வண்ணம் கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும் என தேர்தல்கள் திணைக்கம் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையே  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட்சியின் ஆதரவாளர்களும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பரீட்சை தாள்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்;கள் தமது…

Read More

எனக்கு தபால் மூலம் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்

–    அஸ்ஜத் – எதிர்வரும் 17 ஆம் திகதி இடம் பெறும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் முதன்மைய வேட்பாளராக இலக்கம் 1 இல் போட்டியிடும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு இன்று அரச அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குகளை அளித்தமைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தபால் வாக்குகளை பாவித்த வன்னி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தனது நன்றியினை தெரிவித்த அவர் நீங்கள் உங்களது மனசாட்சிக்கு அமைய எவ்வித…

Read More

புதிய பொருளாதார திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளோம் -ஹா்ச

– அஸ்ரப் ஏ சமத் – இந்த நாட்டின் 40 இலட்ச சாதாரண குடும்பங்களும் தங்கள் பொருளாதாரத்தினை வெற்றி கொள்வதற்காக புதிய பொருளாதார செயற்திட்டத்தினை அறிமுகப்படுத்துள்ள உள்ளதாக பிரதியமைச்சா் காலநிதி ஹா்ச டி சில்வா தெரிவித்தாா். அவா் மேலும் கருத்து தெரிவிக்கையில் – அறிவை அடிப்படையாகக் கொண்ட போட்டிமிக்க சமுக சந்தைப் பொருளாதார முறை ஒன்றின் மூலம் உலக சந்தையை வென்று சூழலினையும் பாதுகாத்துக் கொள்வதுடன் அரசியல் சமுக. மற்றும் பொருளாதார சமத்துவத்தினைக் கொண்ட நல்லாட்சி ஒன்றினை…

Read More

மூதுார் மக்கள் மு.கா.வுக்கு  அளிக்கின்ற வாக்கு கடலுக்குள் போடும் உப்பைப் போன்றது

மூதுார் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அளிக்கின்ற வாக்கு கடலுக்குள் போடும் உப்பை போன்றது,இதற்கு அல்லாஹ்விடத்தில் பதில் கூற நேரிடும் என்று அ.இ.மா.கட்சியின் தேசிய தலைவர் றிசாத் தெரிவிப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு தமது உயிரையும்,உதிரத்தையும் தியாகம் செய்த மூதுார் மக்களுக்கு அந்த கட்சி எதையும் செய்யவில்லை,இம்மக்கள் அபிவிருத்தியின்றி அல்லலுறுகின்றனர் என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த தேர்தலிலும் நீங்கள் அவர்களுக்கு வாக்களிப்பீர்கள் என்றால் அதன்…

Read More

ஆபாச இணையதளங்கள் அதிரடி முடக்கம்

ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்திய மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்துஇந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச தளங்கள்ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்நிலையில், இத்தகைய தளங்களை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில்ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை இன்னும் நடந்துவருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், திடீரென…

Read More

குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் பொதுபலசேனா ஈடுபட்டு வருகின்றது – முஜிபுர் ரஹ்மான்

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பிவரும் பொது பல சேனா அமைப்பினரை தொடர்ச்சியாக கண்கானிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தி, குறிப்பாக முஸ்லிம்களையும் அல் குர்ஆனையும் கொச்சைப்படுத்தி உரையாற்றியுள்ள பொதுபல சேனா அமைப்பின் அநுராதபுர மாவட்ட வேட்பாளர் சுசந்த ரன்முத்து குமாரணசிங்க என்ற வேட்பாளர் அது…

Read More

றிஷாதை ஆதரிக்க திரண்ட மூதூர் மக்கள்

இலங்கை அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டு வந்த மூதுார் தொகுதி இன்று அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவைராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் கைமாறி போகின்ற நிலையினை காணமுடிந்தது.நேற்று மூதுாரில் எற்பாடு செய்யப்பட்டிருந்த ஜக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கலந்து கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் பிரவேத்துடன்,ஸ்ரீலங்கா…

Read More

ISIS இஸ்லாத்திற்கு எதிரானது – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) அறிவிப்பு

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS இயக்கத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் இணைந்து மரணித்த செய்தி வெளியாகியுள்ள இச்சந்தர்பத்தில், இலங்கை முஸ்லிம்களும், இஸ்லாமிய மார்க்கமும் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றன என்ற தோரனையில் இனவாதிகள் பேசியும், எழுதியும் வருகின்றார்கள். இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன்…

Read More

அம்பாறை மாவட்டத்தில் மினி சூறாவளியினால் பல வீடுகள் சேதம்

– பைஷல் இஸ்மாயில் – அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் திங்கட்கிழமை (03) சற்று முன்னர் இடம்பெற்ற காற்றுடன் கூடிய மழையினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பலத்த காற்றினால் அட்டாளைச்சேனையில் பல வீடுகளும், மரங்களும், வாகனங்களும் சேதங்களுக்குள்ளாகியதுடன் சற்று நேரம் அட்டாளைச்சேனை – கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்களும் தடைப்பட்டு காணப்பட்டது. அத்துடன் பல வீடுகளின் மின்சார வயர்களும், மின்மானிகளும் அறுந்தும், உடைந்தும் காணப்படுவதால் மின்சாரமும் தடைப்பட்டு காணப்படுகின்றது.

Read More

“இஸ்லாமிய நோக்கில் நம்பிக்கைத் துரோகம்” – என்.எம். அமீன்

– முகம்மட் பஹாத் – எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுக்கும் விஷேட அறிக்கை… ஜனநாயக நாடான எமது நாட்டில் பல்வேறுபட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. தாம் விரும்பும் வேட்பாளளர்களைத் தெரிவு செய்வது அவரவர் உரிமையாகும். ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேநேரம் வாக்களிப்பதில் அசிரத்தையாக நடந்து கொள்ளவும் கூடாது. வாக்களிப்பது ஓரு ஜனநாயக உரிமை மட்டுமன்றி, இஸ்லாமிய நோக்கில் அது…

Read More

பொதுபலசேனா உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு

பொது ஜன பெரமுனவின் (பொதுபலசேனா) உறுப்பினருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் இன்று முறைப்பாடு செய்யப்பட்டது. இனவாதக் கருத்துக்களை ஊடகங்கள் மூலம் பரப்புவதை தடுக்குமுகமாக இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது ஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்ட வேட்பாளர் சுசந்த குமாரசிங்கவுக்கு எதிராக சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் தலைமையிலான ஆர்.ஆர்.ரி சட்டத்தரணிகள் அமைப்பு இம்முறைப்பாட்டை செய்துள்ளது.

Read More

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்ககப்பட்ட மக்களுக்கு உதவுமாறு றிஷாத் பதியுதீன் வேண்டுகோள்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பெளிசியிடம் கிழக்கில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை செய்யுமாறு-அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள். தற்போது கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தீடீர் சூறாவளியால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடத்தில் வேண்டியுள்ளார். இன்று காலை முதல் கிழக்கில் காணப்படும் சீரற்ற கால நிலையினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் தங்களது அமைச்சின்…

Read More