Headlines

மஹிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் : இன்றைய தினம் விசாரணை

ஊழியர் சேம இலாப நிதியம், ஊழியர் நம்­பிக்கை நிதியம் ஆகி­ய­வற்றில் இருந்த பொது மக்­களின் 1150 கோடி ரூபாவை தெரிந்­து­கொண்டே மோசடி செய்­த­தாக குற்றஞ்சாட்டி முன்னாள் நிதி­ய­மைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்­ரா­லுக்கும் எதி­ராக வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. சட்­டத்­த­ரணி கெலும் குமார சிங்­க­வினால் நேற்று தாக்கல் செய்­யப்­பட்ட இந்த விசேட வழக்கை இன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தாக கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான்…

Read More

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே அமையும் – அமைச்சர் றிஷாத்

மக்கள் எதிர்­பார்க்கும் நன்­மை­களை வழங்கக் கூடிய புதிய அர­சாங்­க­மொன்றை ஐக்­கிய தேசிய முன்­னணிக் கட்சி அமைக்கும் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தேசியத் தலை­வரும், அமைச்­சரும், வேட்­பா­ள­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார். வவு­னியா சாளம்­பைக்­கு­ளத்தில் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில், ஜன­வரி 8ஆம் திகதி பெறப்­பட்ட வெற்­றியும் அதன் மூலம் மக்கள் எதிர்­பார்க்கும் நன்­மை­க­ளையும் வழங்கக் கூடிய புதிய…

Read More

ஹக்கீம் என்னை அச்சுறுத்தியிருப்பது என்னை கொல்வதற்கான சதித்திட்டமாகும் -.இஸ்மாயில்

வீசி இஸ்மாயில் தேர்தலில் வெற்றி பெற்றால் எனது கதை அறுப்பேன் அவரை பாராளுமன்ற கதிரையில் அமர விட்மாட்டேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அச்சுறுத்தியிருப்பது என்னை கொல்வதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என எனது ஆதரவாளர்கள் அச்சமடைந்துள்ளனர் நானும் அச்சமடைந்துள்ளேன் என தென்கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் உப வேந்தரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்தார். சாய்ந்தமருதில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை…

Read More

கல்முனைக்குடியில் YLS ஹமீட் ஆற்றிய உரை

கூனிக்குருகி வீடுகளுக்குள் முடங்குகின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவமாக இல்லாமல் எமது கட்சி மூலம் கிடைக்கின்ற தேசியப்பட்டியல் கிடைக்கின்ற இந்த கல்முனை பிரதிநிதித்துவம் இன்ஷா அல்லாஹ் மறைந்த தலைவரின் பிறகு மீண்டும் முஸ்லிம்கள் சார்பில் பாராளுமன்றில் முழங்க இருக்கின்ற ஒரு பிரதிநிதித்துவமாக இருக்கும் என்ற வாக்குறுதியை வழங்குகின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். கல்முனைக்குடி பிரதான வீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 7 ஆம் இலக்க வேட்பாளர்…

Read More

ACMCயின் திகாமடுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று மாலை (13-08-2015)சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல்; தலைமையில் நடைபெற்ற இந்த இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடலில் முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்அமீர் அலி. முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளீட்ட பெரும் தொகையான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

Read More

SLMC உறுப்பினர் ACMCயில் இணைவு

முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆலங்குளம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பி.ரி.கரீம் தனது ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸனி; திகாமடுல்ல மாவட்ட மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமாகிய சிராஸ் மீராசாஹிபுடன் இணைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் அமைப்பாளர் எ.பி.முனாஸின் ஏற்பாட்டில் மேற்படி இணைவு நடைபெற்றது

Read More

உங்களுக்கு பிரதமர் பதவி இல்லை! மஹிந்தவுக்கு மைத்திரி அதிரடி அறிவிப்பு

சிலவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள 5 பக்க கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பகுதிகள் பின்வருமாறு உள்ளன! “நீங்கள் என்னுடன் ஒத்துழைத்து செயற்பட எதிர்பார்ப்பதாக கூறும் செய்தியொன்றை அண்மையில் ஊடகங்கள் வௌியிட்டிருந்தன. உங்களுக்கு அவ்வாறான எதிர்பார்ப்பு இருக்குமாயின் அது தொடர்பில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய சில…

Read More

மயிலின் வெற்றி இரட்டிப்பானது ஹக்கீமின் காதறுப்பு விழா இன்று

– ஏ.எச்.எம்.பூமுதீன் – மருதமுனை – மயில் வேட்பாளர் வீசி இஸ்மாயிலுக்கு எதிராக முகா தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வீசி இஸ்மாயிலை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் அப்பதவியிலிருந்து விலக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி முகா வினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதியரசர் குழுவினரால் முகா வின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்திற்க்கு…

Read More

வெள்ளைவேன் தான் வந்தது:வெலே சுதா வாக்குமூலம்

துமிந்த சில்வா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நான் அவரின் கீழ் பணியாற்றினேன். அச்சந்தர்ப்பத்தில், தேர்தல் பிரசாரத்துக்காக என்னிடம் 20 இலட்சம் ரூபாவை கேட்டார். அந்த பணத்தை கொடுத்தேன். நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதன் பின்னர் என்னுடைய வீட்டுக்கு வெள்ளைவேனும் பொலிஸமே எந்தநேரமும் வந்தது என்று வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமார, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாக்குமூலமளித்தார். சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே…

Read More

ஜனா­தி­பதி மைத்­திரி – பிர­தமர் ரணில் இணைந்த ஆட்சியே வேண்டும்

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மதிக்­காது அதனை தூக்­கி­யெ­றிய வேண்டும் எனக் கூறும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தகு­தி­யில்­லை­யெனத் தெரி­வித்த சிறுவர் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரும், கொழும்பு மாவட்­ட ஐ.தே.முன்­ன­ணி வேட்­பா­ள­ரு­மான ரோஸி சேனா நாயக்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணைந்த ஆட்­சியே சிறப்­பான புரிந்­து­ணர்வு ஆட்­சி­யென்றும் தெரி­வித்தார். கொழும்பில் ஐ.தே.கட்­சியின் தேர்தல் பிர­சார அலு­வ­ல­கத்தில் நேற்றுமுன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும்போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும்…

Read More

மரணித்த சிசுவை எலிகள் கடித்தன : யாழ்.போதனா வைத்தியசாலையில் சம்பவம்

யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் பரி­சோ­த­னைக்­காக வைக்­கப்­பட்டு இருந்த குழந்­தையின் முகத்தை எலிகள் கடித்த சம்­ப­வ­மொன்று  யாழ்.போதனா வைத்­தி­ய­சாலையில் இடம்­பெற்­றது. இதனால் அச் சட­லத்தை பொறுப்­பேற்க பெற்றோர் மறுத்­துள்­ளனர். இச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, உடுவில் பகு­தியில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை ஒன்று மூச்­சுத்­தி­ணறி இறந்­துள்­ளது. குழந்­தையின் உடலை பிரேத பரி­சோ­தனை செய்­வ­தற்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் சடலம் வைக்­கப்­பட்டு இருந்த நிலையில் எலிகள் குழந்­தையின் முகத்தை கடித்து குத­றி­யுள்­ளன. இந்­நி­லையில்…

Read More

பொதுபல சேனா, ராவண பலய அமைப்புகள் தற்போது இல்லை – ராஜித

பொது பல சேனா, ராவண பலய ஆகிய அமைப்புகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது செயற்பட்டதெனவும் தற்போது அவற்றில் ஒன்றேனும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொது பல சேனா அமைப்பினாலேயே ஏனைய அமைப்புகளுக்கும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது, தற்போது ராஜபக்சர்கள் அதிகாரத்தில் இல்லை என்பதனால் அவ் அமைப்புகளும் நாட்டில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரி மாதம்…

Read More