Headlines

துபாயில் 330 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபையில் இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், நேபாள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு பணி புரிகின்றனர். அவர்களில் கடந்த ரமலான் மாதத்தில் 330 பேர் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றனர். துபாய் முஸ்லிம் நாடாக இருந்தாலும் பிற மதத்தினருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. துபாயில் இந்துக்கள் வழிபட ஏற்கனவே இரண்டு கோவில் உள்ளது, தற்போது அபுதாபியிலும் கோவில் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  உலகிலேயே மிகப்பெரிய முருகன் கோவில் முஸ்லிம் நாடான…

Read More

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலகின் மிக சிறந்த இராணுவ தளபதியாவார் – அமெரிக்கா

அமெரிக்காவை சார்ந்த ரிச்சர்ஸ் என்பவர் உலகில் சிறந்த இராணுவ தளபதிகள் பற்றிய ஓரு ஆய்வை மேர் கொண்டார் இவர் அமெரிக்காவின் அரசு பணிகள் பலவற்றில் பணியாற்றியவர். அமெரிக்க உளவு நிறுவனத்தின் தலைமையகத்திலும் பணியாற்றியவர் 40 க்கும் அதிகமான நுல்களை எழுதியவர் இவர் இராணுவ தளபதிகள் பற்றி மேர் கொண்ட ஆய்வில், உலகின் மிகசிறந்த இராணுவ தளபதியாக நமது உயிருக்கு உயிரான உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களை அறிவித்தள்ளார். முஹம்மது நபி அவர்களை உலகம் ஒரு ஆண்மிக தலைவராக தான் பார்க்கிறது….

Read More

Coca-Cola வுக்கு எதிராக இலங்கை அரசு அதிரடி

பல்தேசிய நிறுவனமான Coca-Cola நிறுவனத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. கடுவலை பிரதேசத்திலுள்ள Coca-Cola நிறுவன தொழிற்சாலையின் சுரங்க எண்ணெய் விநியோகக் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அதிகார சபை Coca-Cola நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்துள்ளது. அத்துடன் சுமார் ஒரு பில்லியன் ரூபா வரையில் அபராதமும் விதித்துள்ளது. சுற்றுச்சூழல் அதிகார சபையின் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையினால் குழப்பமடைந்துள்ள…

Read More

ரஷ்ய தலை நகர் மாஸ்கோவில் நடமாடும் இறை இல்லம்!

ரஷ்யாவின் தலை நகர் மாஸ்கோவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் இறை இல்லங்களுக்கு அங்கு பற்றாகுறை ஏர்பட்டுள்ளது. இந்த குறையை போக்குவதர்காக ரஷ்ய முஸ்லிம்கள் நடமாடும் இறை இல்லங்களை உருவாக்கியுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நடமாடும் இறை இல்லங்களை கொண்டு நிறுத்துவதின் மூலம் இஸ்லாமியர்களின் வணக்க வழிபாடுகளுக்கு உதவும் முடியும் என்பதால் இந்த திட்டத்தை மேலும் பரவலாக்க ரஷ்ய முஸ்லிம்கள் திட்டங்களை வகுத்து வருகின்றனர். நடமாடும் இறை இல்லத்தை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்

Read More

துணிச்சல் நிறைந்த பாலஸ்தீன சகோதரி!

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்துல் முகத்தஸிர்குள் நுழைவதர்கு தடை விதித்த இஸ்றேலின் தடையை மீறி அந்த புனித இல்லத்திற்குள் நுழைந்த இஸ்லாமிய சகோதிரியை கைது செய்து இஸ்ரேல் இராணுவத்தினர் அழைத்து செல்லும் காட்சியை தான் படம் விளக்குகிறது எந்த அச்சமும் இல்லாமல் துணிச்சலோடு புன்னகையுடன் இஸ்றேல் காவல் நாய்களுக்கு இடையே நடந்து செல்லும் இந்த சகோதிரியின் துணிச்சல் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியதாகும் அந்த சகோதிரி மட்டும் அல்ல இலங்கை போன்ற நாடுகளில் வாழும் இஸ்லாமிய பெண்களும் தங்களது அச்சத்தை…

Read More

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவராக செயற்படுமாறு சங்கக்காரவிடம் ஜனாதிபதி பரிந்துரை

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவராக குமார் சங்கக்காரவை செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இன்று தனது இறுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இந்தியாவுடன் இடம்பெற்று முடிந்த இப்போட்டியின் இறுதியில் பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்கக்காரவை பிரித்தியானியாவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்படுமாறு அழைப்பு விடுத்தார். “குமார் சங்கக்கார விருப்பப்படுவாரோ தெரியாது எனினும் எனது வேண்டுகோளை முன்வைக்கிறேன். அவர் பிரித்தானியாவுக்கான…

Read More

சொத்து விப­ரங்­களை வெளியி­டாத வேட்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல்

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லின்­போது சொத்து விப­ரங்­களை வெளியி­டாத வேட்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்ய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக தேர்­தல்கள் ஆணை­யாளர் தெரி­வித்தார் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்கல் செய்த பின்னர், சொத்து விப­ரங்­களை வெளியி­டு­மாறு சகல வேட்­பா­ளர்­க­ளுக்கும் தேர்தல் செய­ல­கத்­தினால் அறி­வு­றுத்­தப்­பட்­டது. சொத்து விப­ரங்­களை வெளியி­டாத எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் வேட்­பாளர் அடை­யாள அட்டை வழங்­கப்­பட மாட்­டாது என்று தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய அறி­வித்­தி­ருந்தார். வேட்­பாளர் அட்டை இல்­லாத வேட்­பா­ளர்கள் தேர்­தல்கள் திணைக்­க­ளத்தால் வழங்­கப்­படும் எந்­த­வொரு…

Read More

ரணில் பிரதமராகியமை நாட்டுக்கு கிடைத்த அதிஷ்டம்: மல்வத்து பீடாதிபதி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரையும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரையும் சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமான லக்ஷ்மன் கிரியெல்லஇ ரவூப் ஹக்கீம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். ரணில்…

Read More

சங்காவுக்கு கௌரவமான பிரியாவிடை: ரணில் தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சங்கக்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதன் பிரகாரம் பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெறும் இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியை கண்டுகளிக்க  இன்று வருகை தரவுள்ளார். பின்னர் பிரதமரின் தலைமையில் சங்கக்காரவுக்கு கௌரவமான பிரியாவிடை அளிக்கப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சங்கக்கார இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12, 400 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 14, 234 ஓட்டங்களும்,…

Read More

கோத்தபாயவிடம் விசாரணை ஆரம்பம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் இவ்விசாரணையானது தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த விசாரணைகளின் நிமித்தம் கோட்டா காலை 10 மணியளவில் அங்கு சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான வாக்குமூலத்தை பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

புத்தளத்திற்கு தேசியப்பட்டில் ஆசனம் கிடைத்தது பெரும் வரப்பிரசாதமே

– ரஸீன் ரஸ்மின் – பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேசியப்பட்டியல் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாகவே காணப்படுகிறது. முன்னார் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியல் மூலம் சந்தர்ப்பம் வழங்க மாட்டாது என தேசிய அரசியலில் பேசப்பட்டு வந்ததை யாவரும் அறியாமலிருந்திருக்க மாட்டீர்கள். ஆனால், தேர்தல் முடிந்த நிலையில், தோற்றுப் போனவர்களுக்கு மீண்டும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி, தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களை விட தோற்றுப் போனவர்கள் தமக்கு நெருக்கமான ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு…

Read More

சவூதியில் முதல் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை!

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்த சவுதி அரேபியாவில், முதன் முறையாக, நகராட்சி தேர்தலில், பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, வருகிற டிசம்பர் 12-ம் தேதி, நடைபெறவுள்ள சவுதியின் மூன்றாவது நகராட்சி தேர்தலில், முதல் முறையாக பெண்களும் பங்களிக்க உள்ளனர். இதற்காக, மெக்கா மற்றும் மதினாவில், பெண் வாக்காளர் விவரங்களை பதிவு செய்யும் பணி, கடந்த வாரம் தொடங்கியது. இந்நகரங்களில், முதன் முதலாக, பெண் வாக்காளர்களாக, சபினாஸ் அபு அல்-ஷாமத் மற்றும் ஜமால்…

Read More