Headlines

யூத தீவிரவாதி.. மயிர் கானேவின் பேரன் மயிர் எடின்ஜர்

மேற்குக் கரையில் வீடுகள் மீது தீமூட்டி பலஸ்தீன குழ ந்தை ஒன்று கொல்லப்பட்ட நிலையில் கடும்போக்கு யூத குழுவென்றின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பலஸ்தீன எதிர்ப்பு அமைப் பான காச் என்ற குழுவை நிறுவிய மயிர் கானே என்பவ ரின் பேரரான மயிர் எடின்ஜர் என்பவரே கைதுசெய்யப்பட்டதாக இஸ்ரேல் உளவுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மயிர் கானே 1990 ஆம் ஆண்டு நியயோர்க்கில் வைத்து கொலை செய் யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யூத கடும்போக்கு அமைப்பில் மயிர் எடின்ஜர் மேற்கொள்ளும் செயற்…

Read More

தேர்தலுக்காக இதுவரை 49லட்சம் வாக்குச்சீட்டுக்கள் விநியோகம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, இதுவரை 49இலட்சம் வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் செய்து முடிவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எஞ்சிய வாக்குச்சீட்டுக்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் விநியோகம் செய்து முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விஷேட தினங்களாக கடந்த 2ஆம் திகதி அறிவிக்கப்பட்ட அதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதியும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விஷேட தினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தமது வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத…

Read More

அமெரிக்க அதிபராக இஸ்லாமியரே பதிவியேற்க வேண்டும் என 60 சதவீதம் பேர் விருப்பம்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் யார் அதிபராக வரவேண்டும் என்று காலப் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் அமெரிக்காவின் அடுத்த அதிபராக இஸ்லாமியர் வரவேண்டும் என்று 60 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். யூதர்களால் நடத்தப்பட்டு முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்கு…

Read More

ஒரே நேரத்தில் 2500 பேர் இஸ்லாத்தை தழுவினர்

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே….!! ஆஃப்ரிக்காவில் ஒரே நேரத்தில் 2500 பேர் இஸ்லாத்தை தழுவினர்….!! இறைவனின் மாபெரும் கிருபையினால் ஆஃப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் ஒரே நேரத்தில் 2500 பேர் உலகம் போற்றும் மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் தலித் மக்களை கீழ் சாதி என்று மிக இழிவாக நடத்திய காரணத்தினால் மீனாட்சிபுரம் கிராமமே இஸ்லாத்தை ஏற்று ரஹ்மத் நகராக மாறியது போல்… உலகம் போற்றும் பாப் இசை பாடகர்களாக இருந்து தாம்…

Read More

ராஜபக்ச­ குடும்பத்தினரை சிறையில் போட்டிருக்கலாம் – ரணில்

மஹிந்த ராஜபக்ச­ ஆட்சிக்காலத்தைப் போல தானும் செயற்பட்டிருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜபக்­ச குடும்ப அங்கத்தவர்களை சிறையில் போட்டிருக்கலாம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாம் ராஜபக்­சவைப் போன்று மக்களைத் தண்டிக்கமாட்டோம். இல்லாவிட்டால் இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் போட்டிருக்கலாம். நாம் சட்டத்துக்கமையவே செயற்படுகிறோம். விசாரணை செய்ய எமக்கு பொறிமுறையயான்று தேவைப்படுகிறது. ஏனெனில், இந்த மோசடிகள் மூளையைப் பயன்படுத்திச் செய்யப்பட்டுள்ளன என்றும் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள இணைய தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் ரணில் மேற்…

Read More

அமைச்சர் றிஷாதின் உரிமைக்குரலை நசுக்க இனவாதிகள் தீவிர முயற்சி

செப்டம்பர் 16ல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பாணை ! வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுத்து, முஸ்லிம்களின் பூர்வீக பூமியிலிருந்து அவர்களை விரட்டியடிக்க இனவாதிகள் இடைவிடாத தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருவதை உறுதிப் படுத்தும் வகையில் “ பரிசர யுக்திகேந்ரய” எனும் அமைப்பின் மூலம் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதனடிப்படையில் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக உரிமைக்குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள்மீது பிரதானமாக குற்றம் சுமத்தப் பட்டு எதிர் வரும் செப்…

Read More

ஒரு இலட்சத்து 30.000 சவூதி ரியால்களை, கடத்திச்செல்ல முயன்றவர் கைது

சட்டவிரோதமான முறையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் சவூதி ரியால்களை கடத்திச் செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க பிரிவு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். குறித்த நபர், நேற்றிரவு யூ.எல் 281 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தா நகர் நோக்கி புறப்பட இருந்ததாக லெஸ்லி காமினி தெரிவித்தார். தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 54 வயதுடைய ஒருவரே…

Read More

வத்தளை, மபோலையில் முஸ்லிமொருவர் வெட்டிக் கொலை

வத்தளை, மபோலை நகரிலுள்ள இறைச்சிக்கடை ஒன்றின் உரிமையாளரான அரபாத் எனும் முஸ்லிம் நபர் அடையாளம் தெரியாத குழுவினரால் இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மகனுடன் பள்ளிவாசலுக்கு சென்று முச்சக்கரவண்டியில் திரும்பிக்கொண்டிருந்த வேளையிலே அவர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 46 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் சடலம் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் வந்ததாக கூறப்படும் சிலர் குறித்த வர்த்தகரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை…

Read More

நான் சிறந்த வைத்தியரிடம் மருந்து எடுக்கின்றேன்,நீங்களும் நல்லதொரு வைத்தியரிடம் பரிசோதித்து மருந்து எடுங்கள்

நான் சிறந்த வைத்தியரிடம் மருந்து எடுக்கின்றேன்,நீங்களும் நல்லதொரு வைத்தியரிடம் பரிசோதித்து மருந்து எடுங்கள் என்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு ஆலோசனை கூறினார். முல்லைத்தீவு ஹிஜ்ரா புரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேற்கண்டவாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். வடமாகாண சபை உறுப்பினர் ஜனுாபர் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர்களான விஜின்தன்,எஹியான்,வீ.ஜயதிலக ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும்…

Read More

இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் 4 இலட்சம் ரூபா கடன்காரா்களாக உள்ளனா் -சஜித்

– அஸ்ரப் ஏ சமத் – அண்மையில் அமைச்சரவையில் ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தல விமான நிலையத்தில் உள்ள கட்டிடத்தினை ஹம்பாந்தோட்டை விவசாயிகளின் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு பாவிப்பதற்கு ஒரு அமைச்சா் அமைச்சரவை பத்திரம் தயாரித்திருந்தாா்.. ஆனால் அதனை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள வில்லை. இது தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த அபிவிருத்திகள். இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் 4 இலட்சம் ரூபா கடன் காரா்களாக உள்ளனா். என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவிப்பு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாழும்…

Read More

நான் கல்வி அமைச்சரானால்..! அல்ஹாபில் எம்.ஆர்.எம். முனவ்வர்.!!

இன்று (5.8.2015) இடம் பெற்ற 8ஆம் தர இரண்டாம் தவணைப் பரீட்சை தமிழ் மொழி வினாத் தாளில் கேட்கப்பட்ட வினாவுக்கு மாணவனொருவன் எழுதிய விடை என்னை வெகுவாக கவர்ந்தது. “இலவசக் கல்வி சகலருக்கும் கிடைக்க வழி செய்வேன். கல்வியின் தரத்தை உயர்த்துவேன். புதிதாக பாடசாலைகளை உருவாக்குவேன். பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக் கொடுப்பேன். ஆசிரியர், அதிபர் சம்பளங்களை கூட்டுவேன். தேவையான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்குவேன். தொழில் நுட்ப கல்வியை விஸ்தரிப்பேன். பல்கலைக் கழகங்களை உருவாக்குவேன். பல்கலைக் கழகத்துக்கு அனுமதிக்கப்படும்…

Read More

ஜெனிவாவை எதிர்கொள்ள விசேட பொறிமுறை வரும்

இலங்கை விவகாரம் தொடர்பான ஜெனிவா அறிக்கைக்கு எமது அர­சாங்கம் வெற்­றி­க­ர­மான முறையில் முகங்­கொ­டுக்­கும்.தேசிய நல்­லி­ணக்கம் தொடர்பில் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் விசேட பொறி­மு­றை­யொன்றை ஆரம்­பிப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றிந்து அதற்­கான உரிய தீர்­வினை முன்­வைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் முஸ்லிம் கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து செயற்பட்டு நாட்டை முன்­ந­கர்த்தி செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார். என்னை தோற்­க­டிப்­ப­தற்கு 2005 இல் பிர­பா­க­ர­னுடன் மஹிந்த ராஜ­பக் ஷ உடன் ப­டிக்கை செய்­து கொண்­ட­மையின்…

Read More