Headlines

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம்: கறுப்பு நிற கார் மீட்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளுமெண்டல் பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் கறுப்பு நிற ஹைப்ரிட் கார் ஒன்று புளுமெண்டல் பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. புளுமெண்டல் பகுதியில் உள்ள கட்டிடமொன்றின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது. எனினும் காரின் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இலக்கத்தகடற்ற கறுப்பு நிற ஹைப்ரிட் கார் மற்றும் வெள்ளை வேன் ஆகியவற்றில் வந்த…

Read More

தவ்ஹீத் ஜமாத்திற்கு மரண அச்சுறுத்தல்

-ஊடகப் பிரிவு – SLTJ- மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களை ஜும்மா தொழுகை நடத்த விடாமல் ஜமாதே இஸ்லாமி ஆதரவாளர்கள் இன்றும் அராஜகம். மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் செய்து வரும் பிரச்சாரங்களுக்கு எதிராக ஜமாதே இஸ்லாமியினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர். கடந்த 07.02.2014 அன்று ஜமாதே இஸ்லாமி காடையர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் மர்கஸை தாக்கி, அங்கிருந்தவர்களுக்கு அடித்து, புனித குர்ஆன் பிரதிகளையும், தஃவா சாதனங்களையும் தீ வைத்து எறித்தார்கள். அதனைத் தொடந்து…

Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது

கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில், பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமாகியுள்ளார்.அதேவேளை, மேலும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Read More

ACMC புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருகிறது

இந்த நாட்டு அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருவதாகவும்,சகல சமூகங்களின் உரிமைகள் எவ்வித அப்பழுக்கற்ற முறையில் அனுபவிப்பதற்கு தேவைாயன அடித்தளத்தினை இட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணயின் முதன்மை வேட்பாளரும்.அமைச்சருமான றிசாத் பதியுதீன் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக வரவுள்ளார் என்றும் கூறினார். வவுனியா மதவாச்சி வீதியில் அமைந்துள்ள ஜக்கிய தேசிய முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு…

Read More

‘வீசி’ தோற்பார் என்றால் வழக்குத் தாக்கல் எதற்கு?

சம்மாந்துறை ஆசிக் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் தோற்பார் எனக் கூறும் முகா – அவரை பாராளுன்றம் செல்ல அனுமதிக்கக் கூடாது என வழக்குத் தாக்கல் செய்துள்ளமை எதற்காக? நியாயக பூர்வமான இந்தக் கேள்வி அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மக்கள் மத்தியிலும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களில் உள்ளவர்கள் மத்தியிலும் நேற்று முதல் எழுப்பப்பட்டு வருகின்றது. உபவேந்தர் இஸ்மாயில் அவரது பதவியை இராஜிநாமா செய்யாமல் வேட்பாளராக குதித்துள்ளார்….

Read More

ரவியின் ஆதவாளர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் சித்தி நஸீமா

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மாதம்பிட்டியில் வசிக்கக் கூடிய சித்தி நசீமா42 என தெரியவருகின்றது கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து காயமடைந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இருவர்…

Read More

வன்னி மாவட்டத்திலும் அதிகப்படியான ஆசனங்களையும் பெற்று பாரிய அபிவிருத்திகளை செய்வோம் -பிரதமர்

இலங்கையில் உள்ள எட்டு மாகாணங்களிலும் ஜக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவது உறுதியாகும் என தெரிவித்துள்ள ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இந்த வெற்றியோடு வன்னி மாவட்டத்திலும் அதிகப்படியான ஆசனங்களையும் பெற்று பாரிய அபிவிருத்திகளை செய்வோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். வவுனியா வைரவப் புளியங்குளம் யங்ஸ் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம் பெற்ற ஜக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்…

Read More