Headlines

பாகிஸ்தானில் வெயில் பலிகளைத் தடுக்க பொதுவிடுமுறை

பாகிஸ்தானில் தொடரும் கடும் வெயில் காரணமாக இதுவரை 700 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கும் பின்னனியில், மேலதிக உயிர்பலிகளை தடுக்கும் நோக்கில் சிந்த் பிராந்திய அரசாங்கம் இன்று (24) புதன்கிழமை கராச்சியில் பொதுவிடுமுறை அறிவித்திருக்கிறது. பொதுமக்கள் வெயிலில் வெளியில் உலவாமல் தத்தம் வீடுகளுக்குள் இருந்தபடி தம்மை இந்த வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. தகிக்கும் வெயிலோடு மோசமான மின்வெட்டும் சேர்ந்துகொள்வதால், மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க…

Read More

ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம்

ஒலிம்பிக் (2016) போட்­டிக்­கான பல்­வேறு மைதா­னங்கள் இன்னும் தயா­ரா­காமல் உள்­ளன. உலக விளை­யாட்டு திரு­விழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்­டுக்கு ஒரு­மு­றை நடக்கின்றது. கடை­சி­யாக 2012இல் இங்­கி­லாந்தில் இப்­போட்டி நடந்­தது. அடுத்து 2016இல் 31ஆவது ஒலிம்பிக் போட்டி பிரே­சிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்­க­வுள்­ளது. இதற்­காக மொத்தம் 14 புதிய மைதா­னங்களை கட்­டு­வது, புதுப்­பிப்­பது என, ரூ.120 ஆயி­ரத்து 518 கோடி வரை பிரேசில் அரசு செல­வி­டு­கி­றது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 13 மாதங்கள் மட்டுமே மீத­முள்ள நிலையில்…

Read More

அநாதைகளுடன் இரண்டற கலந்த அற்புதமான தலைவர் (படங்கள் இணைப்பு)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹமட் பின் ர்ஷீட் அல் மக்தூம் அவர்களால் சுமார் 156 மில்லியன் திர்ஹம் செலவில் அநாதைகளுக்கென அமைக்கப்பட்ட “Family Village” இன்று திறந்து வைக்கப்பட்ட பின்னர் அங்குள்ள அநாதை சிறார்களுடன் மிக அன்பாக அன்னி யோன்னியமாக பழகும் காட்சியே இது…..

Read More

சு.க.வை பிரபாகரன் காப்பாற்றியிருந்தார்

புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்கும் சிறு மற்றும் சிறு­பான் மைக் கட்­சி­க­ளுக்கும் இடையில் வித்­தி­யா­ச­மான கருத்து வேறுபாடுகள் இருக்­கின்­றன. எனவே பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து சமூகப் பிர­தி­நி­தி­க­ளி­ன தும் மக்­க­ளி­னதும் கருத்­துக்­களை அறிய வேண்­டிய தேவை ஜனா­தி­ப­திக்கு இருப்­ப­தா­லேயே 20ஆவது திருத்தம் தொடர்பில் விவாதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. என்று பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யா­னது எஸ். டப்ளியூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் ஸ்தாபிக்­கப்­பட்­ட­தாகும். அக்­கட்­சி­யா­னது பல சந்­தர்ப்­பங்­களில் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க…

Read More

இலங்கையில் மெகி நூடில்ஸ் தடை?

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மொனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மகி நூடில்ஸ் உள்ள சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை சுங்க திணைக்களத்திடம்  நுகர்வோர் அதிகார சபை நேற்று கோரியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மகி நூடில்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

20; சிறிய கட்சிகளை அழிக்கும்

தேர்தல் தொடர்பான 20ஆவது திருத்தத்துக்கு ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த திருத்தமானது, நாட்டில் உள்ள சிறிய ஜனநாயக கட்சிகளை அழிக்கும் செயற்பாடு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நாட்டில் உள்ள சிறிய கட்சிகளுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இந்நிலையில் புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், அந்தக் கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போய்விடும். இதனை ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் உணர்வார்கள் என்று கெக்கிராவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்….

Read More

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கொள்கை தயாரிப்பு

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கொள்கையொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி நட்டாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். சிறுவரின் பாதுகாப்பு பொறுப்பு குறித்தும் தற்போது ஆலோசித்து வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

வித்தியா படுகொலை ; பதட்டம் குறித்தும் அறிக்கை தயார்

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் குறித்த பகுதியில் இடம்பெற்ற பதற்ற நிலமைகள்  தொடர்பிலான விசாரணை அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம்  கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 13 ஆம் திகதி  காணாமல் போன வித்தியா 14 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து புங்குடுதீவில் பதற்ற நிலை நீடித்தது. இது குறித்த அறிக்கையினை பெற விசேட குழுவொன்று பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டிருந்தது. மேலும் படுகொலையுடன்  தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில்…

Read More

வெள்ளை மாளிகையை அலங்கரித்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ! (படங்கள் இணைப்பு)

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை நேற்றய தினம் நோன்பாளிகளால் நிரம்பி வழிந்தது முஸ்லிம்களை கவுறவபடுத்தும் விதத்தில் நோண்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றிர்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்கவில் உள்ள முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் முக்கிய முஸ்லிம் தொழில் அதிபர்களும் அரசு அதிகாரிகளும் அழைக்க பட்டிருந்தனர் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ஒபாமா கூறும்போது தங்கள் ஆண்மீக உணர்வுகளை முஸ்லிம்கள் புதுப்பித்து கொள்ளும் இந்த நல்ல நேரத்தில் நாம்…

Read More

2020 ஒலிம்பிக்ஸில் புதிய விளையாட்டுகள்?

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கூடுதல் விளையாட்டுகளாக, புதிதாக சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ள விளையாட்டுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட தேர்வுகள் நடைபெற்ற பிறகு எந்தெந்த விளையாட்டு அந்த ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் என்பது மேலும் தெளிவாகும். அவ்வகையில் தற்போது எட்டு விளையாட்டுகள் முதல்கட்டப் பரிசீலனையில் தேர்வாகியுள்ளன. முதல்கட்ட பரிசீலனையில் பேஸ்பால்/சாஃப்ட்பால், பௌலிங், கராத்தே, ரோலர் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட் க்ளைம்பிங், ஸ்குவாஷ், சர்ஃபிங், வூஷூ ஆகிவை தேர்வாகியுள்ளன. ஸ்னூக்கருக்கு இடமில்லை அதேவேளை ஸ்னுக்கர்…

Read More

மஹிந்த அரசு  நோன்பு காலங்களில் கிறீஸ் பூதங்களை ஏவி முஸ்லிம்களை அச்சுறுத்தியது!

‘கடந்த நோன்பு காலங்களில் மஹிந்த அரசாங்கம் கிறீஸ் பூதங்களை ஏவி விட்டு முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளை சீர்குலைத்து அச்சுறுத்தியதை எவரும் மறந்து விட முடியாது’ என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார இணைப்பு செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்துள்ளார். ‘மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்காக வீதிகளில் இறங்கி மண்டியிடுவதானது அவருடைய பதவி மோகத்தையே காட்டுகிறது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சாய்ந்தமருதில் பேரிச்சம்பழம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

Read More

சவூதி – ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து

வரலாற்றில் முதல்முறையாக சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே அணுசக்தி துறையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்ற வாரம் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த சர்வதேச பொருளாதார வாரியத்தின் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் அணுசக்தி துறையில் பல்வேறு பிரிவுகளில் இணைந்து செயல்பட உள்ளது. குறிப்பாக, அணு உலைகளை உருவாக்குவது, அணுசக்தி எரிபொருளை மறுசுழற்சி செய்வது உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்பட உள்ளது. மேலும், கதிரியக்க ஆபத்துகள் நிறைந்த அணுக்கழிவுகளின் பிரச்சனைகளை சந்திப்பதிலும் இருநாடுகளும்…

Read More