கத்தாரில் தலைப்பிறை தென்பட்டது, நாளை நோன்பு
கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ வசீம் அக்ரம் வளைக்குடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் ஹிஜ்ரி 1436 க்கான புனித ரமழான் மாதத் தலைப்பிறை தென்பட்டது. இதனடிப்படையில் (18-06-2015) நாளை வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்குமாறு கத்தார் இஸ்லாமிய அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இன்றைய நாட்களில் 40 பாகை செல்சியஸில் வெப்பநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
