Headlines

கத்தாரில் தலைப்பிறை தென்பட்டது, நாளை நோன்பு

கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ வசீம் அக்ரம் வளைக்குடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் ஹிஜ்ரி 1436 க்கான புனித ரமழான் மாதத் தலைப்பிறை தென்பட்டது. இதனடிப்படையில் (18-06-2015) நாளை வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்குமாறு கத்தார் இஸ்லாமிய அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இன்றைய நாட்களில் 40 பாகை செல்சியஸில் வெப்பநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஒரு அங்குலமேனும் அரச காணிகளை நான் பெற்றிருக்கவில்லை – அமைச்சர் றிஷாத்

– அபூ அஸ்ஜத் – நான் வில்பத்து காட்டுக்குள் 600 ஏக்கர் வாழைத்தோட்டம் வைத்திருப்பதாக பொய்களை அவிழ்த்துவிட்டு அரைவேக்காட்டுத்தன அரசியல் செய்பவர்கள் அதனை நிரூபித்துக்காட்டுமாறு சவால்விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அல்லாஹ்வின் மீது சத்தியமாகக் ஒரு கூறுகின்றேன்,ஒரு அங்குலமேனும் அரச காணிகளை நான் மன்னாரிலோ,வவுனியாவிலோ,முல்லைத்தீவிலோ பெற்றிருக்கவில்லை ,என பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் கூறினார். முசலி பிரதேச கல்வி மேம்பாட்டுக்கும்,வளர்ச்சிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பங்களிப்பு அத்தோடு…

Read More

KFC கோழிக்கு பதிலாக KFC எலி?

உணவு விஷயத்தில் நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது, எந்தவித துரித உணவும் பாதுகாப்பானது இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. சமீபத்தில் கே.எப்.சி.-யில் கோழிக்கு பதிலாக வறுத்த எலி பரிமாறப்பட்டதாக பேஸ்புக்கில் வைரலாக ஒரு படம் பரவி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கே.எப்.சி. உணவகத்தில் வறுத்த கோழி கேட்டுள்ளார் டேவோர்ஸ் டிக்ஸன் என்பவர். ஆனால் அவருக்கு வந்த கோழியோ நன்றாக வறுக்கப்பட்ட எலியை போன்று இருந்துள்ளது. இது பற்றி உணவகத்தின் மேலாளரிடம் தான் விளக்கம்…

Read More

இந்த பதவிகள் சமுகத்தை பாதுகாக்கவே – றிஷாத் பதியுதீன்

முஹம்மத் சனாஸ் இன்று என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று செயற்படும் நபர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.நான் அணிந்திருக்கும் இந்த பதவிகள் என்கின்ற அணிகலன் மக்களை பாதுகாக்கவே,எமது இந்த மக்களின் தேவைகள் பூர்த்தியாக்கப்படும் எனில் இதனை கழட்டிவிட நான் தயாராக இருக்கின்றேன்.அதே போல் இந்த மக்களுக்கு கவசமாக செயற்படக் கூடியவர்கள் தலைமை தாங்க தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான…

Read More

‘கொள்ளையர்களுடன் போராட்டம் நடைபெறுகிறது’ – சஜித்

நல்லாட்சிக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் தற்போது போராட்டம் நடைபெற்று வருவதாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கு ஆதரவான அரசாங்கத்திற்கும், நிவாரண எதிர் கொள்ளையர்களுக்கும் இடையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. மக்களுக்கு சேவையாற்றி வரும் நல்லாட்சி அரசாங்கத்தையா, தேசத் துரோகிகளையா ஆதரிப்பது என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ஆட்சி நடத்திய காலத்தில் வறிய மக்களுக்கு இரக்கம் கட்டப்பட்டதா? அவ்வாறு இரக்கம் காட்டியிருந்தால் ஏன் புதிய அரசாங்கம் வறியவர்களுக்கு சேiவாயற்றும் போது அதனை தடுக்க…

Read More

‘விதவையான சந்திரிக்கா, மீண்டும் திருமணம் முடிக்கக்கூடாது’ – ஞானசாரர்

-ஏ எம் எம் முஸம்மில்- பொதுபல சேனா அமைப்பின் செயலாளார் ஞானசார தேரர் 16-06-2015 ஊடக சந்திப்பில் கூறியவற்றை தொடர்ந்து கேளுங்கள்.. பண்டாரநாயக்கர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்களில்லை. இவர்கள் இந்திய வம்சாவளியை கொண்டவர்கள் (PRONOUNCE AS PANDARA NAYAGAM – NOT BANDARA NAYAKA ). இந்த பண்டார நாயக்கர்கள் சுமார் மூன்று பரம்பரைகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தார்கள். இவர்கள் தமிழர்கள். அதனால்தான், நாங்கள் பிரபாகரனுக்கு ஏதாவது சொன்னால் சந்திரிக்காவுக்கு கோபம் வருகின்றது. ஆகவேதான், நங்கள்…

Read More

ரமழான் நோன்பு: ஐரோப்பாவில் 19 மணி நேரங்கள்!

இம்றை ரமழான், சென்ற வருடம் போன்றே அனேகமான நாடுகளில் கோடைகாலத்தில் எதிர்நோக்கி வருவதால் நீண்ட நேரம் நோன்பு நோற்க வேண்டிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தவகையில் ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகளில் 18-19 மணி நேரங்கள்அங்குள்ள மக்கள் நோன்பு நோற்கின்றனர். அதிகாலை 02:30 தொடக்கம் மாலை 9:45 வரைக்கும், இன்னும் சில இடங்களில் அதிகாலை 3 மணியிலிருந்து மாலை 9:30 மணிவரைக்கும், இன்னும் சில பிரதேசங்களில் இதனைவிட சில மணி நேரங்கள் அதிகமாக அல்லது குறைவாக நோன்பை நோற்கின்றனர். இந்தவகையில் ஐரோப்பிய…

Read More

உதவி செய்வதன் மூலம் இன்பம் காண்பவர் அமைச்சர் றிஷாத் – துல்கர் நயீம்

உதவி செய்வதன் மூலம் இன்பம் காண்பவர் அமைச்சர் றிஷாத் ; சட்டத்தரணி துல்கர் நயீம் (முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர்) ஜே.எப்.காமிலா பேகம் கடந்த சனிக்கிழமை பொலன்னறுவை சி.டி.எஸ் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் கிழக்குமாகான சபை உறுப்பினரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய சட்டத்தரணி துல்கர் நயீம் மேற்படி கருத்தை தெரிவித்தார். சுங்காவில் முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர்N.A.A.நாசர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இங்கு மேலும்…

Read More

வளைகுடாவில் நாளை முதல் ரமழான் நோன்பு!

சவூதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று, இரவு சவூதியில் எந்த பகுதிகளிலும் ரமழான்  பிறை தென்படாததால் ஷஃபான் பிறை 30 என கணக்கிடப் பட்டு, நாளை வியாழன் ரமழான்  முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் இதற்கிடையே நேற்று ரமழான்  பிறை தென்பட்டால் உடன் தகவல் தர வேண்டும் என்று சவூதி வாழ் மக்களுக்கு சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தரம் ஒன்றிற்கான அனுமதியில் அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமில்லை!

அடுத்த வருடம் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை அனுமதிக்கும்போது அரசியல்வாதிகள் தாம் விருப்பிய பிள்ளைகளின் பெயர்பட்டியல்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய மற்றும் மாகாண மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பலர் கடந்த காலத்தில் தம்முடன் நெருங்கிப் பழகுவோரின் பிள்ளைகளை சட்டவிரோதமாக பாடசாலைகளில் சேர்த்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதனால் உரிய தகைமைகளை பூர்த்தி செய்யாத பிள்ளைகளும் பாடசாலைகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலைகளில் தரம் ஒன்றில்…

Read More

ஹஜ் ஏற்பாடுகளை அரசாங்கம் பொறுப்பேற்பதே தீர்வுக்கு வழி – அமைச்சர் பௌசி

‘ஹஜ்’ கோட்டா பகிர்வில் ஊழல்கள் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறி தொடர்ந்து நீதி­மன்­றத்தை நாடு­வது சமூ­கத்­துக்கு அவப் பெய­ரையே ஏற்­ப­டுத்தும். இதைத்­த­டுப்­ப­தற்கு ஒரே வழி ஹஜ் ஏற்­பா­டு­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­ப­தாகும் என அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சரும் முன்னாள் ஹஜ் குழுவின் இணைத்­த­லை­வ­ரு­மான ஏ.எச்.எம் பௌசி தெரி­வித்தார். இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வில் அநீ­தி­யி­ழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் நீதி­மன்றம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்த பொறி­மு­றைக்­கேற்ப கோட்ட பகி­ரப்­ப­ட­வில்லை எனத்­தெ­ரி­வித்து அதற்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு விதிக்கக் கோரி மூன்று முகவர் நிலைய உரி­மை­யா­ளர்கள் உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்­கொன்று தாக்கல் செய்­ய­துள்­ளமை…

Read More

ரமழான் தலைப்பிறை தொடர்பான மாநாடு இன்று

ரமழான் மாதத்தை தீர்மானிக்கும் விஷேட மாநாடு இன்று 17 ஆம் திகதி புதன் கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளியில் இடம் பெறவுள்ளது. இன்றைய தினம் மாலை நேரம் 6.27 மணி முதல் ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்குமாறும் இலங்கையின் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களோடு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளி நிர்வாகம் அனைத்து இலங்கை. முஸ்லிம்களயும் கேட்டுக்கொள்கிறது. தொலைபேசி இலக்கங்கள் – 0112432110 0115234044…

Read More