Headlines

பேஷன் ஷோக்களுக்கு சவுதி அரேபியாவில் தடை

சவுதி அரேபியாவில் பேஷன் ஷோக்கள் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமீப காலமாக சவுதி அரசின் வர்த்தக அமைப்பிடம் உரிய அனுமதி பெறாமல் நிறுவனங்களும் வடிவமைப்பாளர்களும் தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தவும், விற்பனையை பெருக்கவும் பேஷன் ஷோக்களை நடத்துவதாக புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த முடிவு நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் பாதித்துள்ளது மட்டும் அல்லாமல் பேஷன் ஷோக்களில் பூனை நடைபோட்ட சவுதி ஆண் மாடல்களை கடுமையான வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது….

Read More

துபாய், ரியாத், டோக்யோ உட்பட உலகின் பல நகரங்களை பின்தள்ளி உலகின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகராக கொழும்பு முதலிடம்

இலங்கையின் தலைநகர் கொழும்பு, உலகின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரமாக இடம்பிடித்துள்ளது. மாஸ்டர்காட் நிறுவனத்தினால் மேற்கொள்ளபட்ட ஆய்வின் முடிவிலே கொழும்பு முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகில் உள்ள அனைத்து நகரங்களும் ஆராயப்பட்டு கடந்த ஆறு வருடங்களில் ஆசியாவில் 7 நகரங்கள் top 10 இல் இடம்பிடித்துள்ளது. அதில் 21% வளர்ச்சி வேகத்துடன் கொழும்பு சீன தலைநகரத்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை அடைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு குறிப்பிட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பொது அமெரிக்காவின் Houston நகர்…

Read More

வில்பத்து விவகாரம்; 02 இலட்சம் கையெழுத்துக்களைப் பெறுதல் உட்பட பல விடயங்களில் இணக்கப்பாடு

அஸ்ரப் ஏ சமத் வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லீம்களை மீளக் குடியேற்ற வேண்டும் என்று மேல், கிழக்கு மத்திய மாகாணசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இணக்கம் வடக்கு முஸ்லீம்களை மீள் குடியேற்றும் விடயத்தில் நேற்று (04) இரவு அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தலைமையில் வெள்ளவத்தை மெரைன் ரைவ் ஹோட்டலில் அனைத்து கட்சிகளின் முஸ்லீம் பிரநிதிகள் கூட்டமொன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் அங்கம் வகிக்கும் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வடக்கு…

Read More

பர்மாவில் கடத்தப்பட்ட 16 வயது ஹாசராவின் கதறல்

அபுசெய்க் முஹம்மத் பத்துபேர் சேர்ந்து ஹாசரா ,வயது 16 என்ற பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். அந்த பெண் சந்தித்த நேரில் பார்த்த கொடுமைகள் கடல்பயணம் முதல் முகாம்கள் வரை பார்க்கலாம் … கடத்தப்பட்ட பெண் மேற்கு பர்மாவை சேர்ந்தவள். 14 பெண்களோடு அவள் ஆபத்தான கப்பலில் பலநாட்கள் பயணிக்கிறாள் . அந்த மரக்கப்பலில் 95 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளோடு பயணம் தொடர்கின்றது . குலைந்த அரிசியும் ,100 மில்லிதண்ணீரும் மட்டுமே உணவாக தரப்பட்டது நான் முதலில்…

Read More

தாஹிராவுக்கு நீதி கிடைத்தது; அமெரிக்க விமானப் பணிப்பெண் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு! (அல்லாஹு அக்பர்)

முஸ்லிம் பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின்போது அவர் முஸ்லிம் என்பதால் மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் இந்த சம்பவத்திற்கு காரணமான தங்கள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ’சியாட்டில் அமெரிக்கா’வின் பணிப்பெண், பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் தாஹிரா அகமத், கடந்த வாரம் சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தார். பயணத்தின்போது விமானப் பணிப்பெண்ணிடம்…

Read More

ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு 50% வெளிநாட்டவர்கள் வெளியேற விருப்பம் – ஆய்வில் தகவல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 50% பேர் அந்நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக சமூக ஆய்வு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த சனத்தொகையில் 20% பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து அங்கு சென்று குடியேறியவர்கள் தான்.ஆனால், தற்போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எமிரேட்ஸில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 50% பேர் வேறு நாடுகளுக்கு இடம்பெயரும் ஆசையில் இருக்கின்றார்களாம்….

Read More

நபியின் பள்ளியில் தந்தை தொழ வேண்டும் என்பதர்காக நடக்க முடியாத அவரை சுமந்து செல்லும் மகன் !

வயோதிகத்தை அடையும் தாய் தந்தையரை அலட்சியம் செய்து புறக்கணிக்ககுடியவர்கள் அதிகரித்து வரும் இந்த கால கட்டத்தில் நடக்க முடியாத தனது வயது முதிர்ந்த தந்தையை நபியின் பள்ளியில் தொழும் வாய்ப்பை உருவாக்கி கொடுப்தர்காக மகன் சுமந்து செல்லும் காட்சியை தான் நீங்கள் பார்கின்றீர்கள் ஒவ்வொரு மகனும் தாய்தந்ததையர் விசயத்தில் இது போன்ற கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டால் நாட்டில் முதியோர் இல்லங்களுக்கு அவசியமே இல்லை.

Read More

முஸ்லிம்களின் வெறுப்பும், பொதுபல சேனாவால் தோற்ற மஹிந்தவும்.. காதர் ஹாஜியாரிடம் அஸ்கிரிய பீட மஹாநாயக்கர் கூறியவை

மஹா சங்கத்தினர் அரசியலில் தலையிடுவது சிறந்ததல்ல. அவர்கள் சிறந்த ஆலோசனைகளையும் அறிவுறைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முன்னுதாரணமாக திகழவேண்டும்’ என கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தெரிவித்தார். ‘கடந்த ஆட்சியின் போது பொதுபல சேனாவின் செயற்பாடுகள் காரணமாக அவ்வரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வெறுப்பு கொண்டிருந்தனர். அதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் தேர்தலில் தோல்வியடைய செய்தனர்’ எனவும் அவர் தெரிவித்தார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான ஏ.ஆர்.எம்.ஏ.காதர்,…

Read More

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற பொதுபலசேனா தேர்தலில்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபலசேனாவும் போட்டியிடும் என அதன் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரர்   நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்  இதனைத் தெரிவித்தார். மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை இதன் மூலம் அடைந்து கொள்வதும் பெளத்த மதத்தினைப் பாதுகாப்பதுமே தம் இயக்ககம்  தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

கடந்த ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு அமெரிக்க பிரஜையிடம் இருந்த போது எவரும் வாய் திறக்கவில்லை.. இப்போது மத்திய வங்கி ஆளுனருக்கு எதிராக குற்றம் சுமத்த வேண்டாம்

நாட்டின் பாதுகாப்பு கடந்த ஆட்சியில் அமெரிக்க பிரஜையான கோத்தாபயவுக்கும், வெளிநாட்டுசேவை அவுஸ்திரேலிய பிரஜை பாலித கொஹணவுக்கும் வழக்கப்பட்டபோது வாய் திறக்காதவர்கள் மத்திய வங்கி ஆளுநராக வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நியமிக்கப்பட்டதாக கேள்வியெழுப்புவதில் எந்தளவு நியாயமானது. வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு மத்திய வழங்கி ஆளுநர் பதவி வழங்க சட்டத்தில் எந்தத் தடையும் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அர்ஜுன மகேந்திரன் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டும் தொகையைவிட 270 மடங்கு அதிக தொகை கடந்த ஆட்சியில் மோசடி…

Read More

பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் ஜூன் மாதத்தில் ஒரு வினாடி அதிகம்

பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு வினாடி நீண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டிஸ்கவர் இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரமானது ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு 00:00:00 என்று மாறுவதற்கு பதிலாக 23:59:60 இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சியானது வழக்கத்தை விட ஒரு வினாடி குறைவதால் இது ஏற்படுகிறது. இதனால் பூமியில் உள்ள கடிகாரங்களில் நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும். கூடுதல் வினாடி அல்லது லீப் வினாடி…

Read More

திஸ்ஸ மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாகத் தெரிவித்து திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அத்துடன், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More