Headlines

பாரம்பரியமாக வில்பத்தை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி சாய்ந்தமருதில் கவனஈர்ப்புப் போராட்டம்

-எம்.வை.அமீர் – வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றக் கோரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் அவர்களது செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தும் 2015-05-29ல் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி கவனஈர்ப்புப் போராட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச அகில…

Read More

மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றி ஊடகங்களில் சொல்லப்டாத சில உண்மைகள்

மியன்மார் முஸ்லிம்கள் சுமார் 800 முதல் 1000 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள் . அவர்கள் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தற்போதும்முள்ளது . ஆனால் அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதென்பது உண்மைதான் அதற்காக ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியன்மார் இனவாத அரசுடன் போராடவில்லை ஆனால் மியன்மார் அரசியல் இனவாதிகள் அவர்களின் உயிரைக் கொன்று வருவருகிறார்கள் . அன்மையில் நாங்கள் face book இல் நாம் பார்த்து பரிமாரிய மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொடுமைப்படுத்துவது போன்ற photos கள் அனைத்தும்…

Read More

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ; பர்மா கொடியும் எரிப்பு (Photo)

அஸ்ரப் ஏ சமத் ஜக்கிய சமாதாண இயக்கம் ஏற்பாடு செய்த பர்மாவில் வாழும் முஸ்லீம்களுக்கான அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று ஜூம்ஆத் தொழுகைக்குப் பின் கொழும்பு தெவட்டகா பள்ளியில் இருந்து ஆரம்பித்து ரொஸ்மிட் பிளேசில் உள்ள மியன்மார் ;தூதுவரடிடம் கண்டன அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சர் றிஷாத் பதியுதீன், மேல்மாகாண சபை உறுப்பிணர்கள் முஜிபு ரஹ்மான், பைருஸ் ஹாஜி, தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி ஆகியேர்ர் ஊர்வலமாகச் சென்று தூதுவரிடம் கண்டன அறிக்கையும் அப்பாவி மக்களை…

Read More

புத்தளத்தில் மியன்மார் முஸ்லிம்களுக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களுடன் பிக்குகளும் களத்தில் குதிப்பு

முஹ்ஷி மியன்மார் முஸ்லிம்கள் மீது மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனப் படுகொலைகளை வன்மையாக கண்டித்தும், இலங்கை அரசும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகமும் உடனடியாக இதில் தலையிட்டு அவற்றை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியும் புத்தளம் நகரில் இன்று (29.05.2015) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதில் சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Read More

பர்மாவில் முஸ்லிம் படுகொலைகள் நிறுத்தப்படாவிட்டால் – தேசியரீ தியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம் – றிஷாத் பதியுதீன்

மியன்மாரில் நடைபெறும் அரக்கர்களின் கொடூர தாக்கதல்களினால் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா சபை தூங்குகிறது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்பாவி முஸ்லிம்கள் மீது மியன்மாரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காடைத்தனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரிசாத், ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும்போதே மேற்படி குற்றச்சாட்டினை தெரிவித்தார். “மியன்மாரிலுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களும் அரக்கர்களும் கொடூரமான முறையில்…

Read More

பர்மா முஸ்லிம்களுக்காக சவுதி அரேபியா செய்தது என்ன? செய்தி நிறுவன தலைவர் அதாவுல்லா விளக்கம்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரவாதிகள் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதை உலகறியும் பர்மாவின் அராகான் பகுதி முஸ்லிம்களை பெரும்பாண்மையாக கொண்ட பகுதியாகும் புத்தர்களின் உலக தலைமைபீடமாக உள்ள பர்மாவின் ஒரு பகுதியில் முஸ்லிம்கள் பெருபாண்மையாக இருப்பதை பர்மாவை சார்ந்த புத்த தீவிரவாதிகள் விரும்பவில்லை எதிர்காலத்தில் அராகான் பகுதி தனி இஸ்லாமிய குடியரசாக உருவாகி விடும் என்ற அச்சத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விட படுகிறது தீவிரவாதிகளின் இந்த பயங்கரவாத…

Read More

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பிரச்சினையில் சூச்சியின் தலையீடு தேவை: தலாய் லாமா

மியன்மாரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு உதவுவதற்கும், சுமூக நிலைமையை ஏற்படுத்துவதற்கும் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சியால் முடியும் என்று திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம் ஏற்கெனவே மியான்மர் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சியிடம் கடந்த காலங்களில் பேசியிருப்பதாகவும், அவரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பெரிதும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் இதனை தலாய் லாமா தெரிவித்துள்ளார். மேலும்…

Read More

உரிமைகளை வென்றெடுப்பதற்கு ACMCயில் இணைவதற்கான விண்ணப்படிவம் வழங்கும் நிகழ்வு

அகமட் எஸ். முகைடீன் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பயணத்தில்  கைகோற்பதற்கான கட்சியின் அங்கத்துவ விண்ணப்பப் படிவம் வினியோகிக்கும் நிகழ்வு குறித்த கட்சியின்  பிரதி தேசிய அமைப்பாளரான கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரது சாய்ந்தமருது வாசஸ் தலத்தில் நேற்று (28/05/2015) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்துவ விண்ணப்பப் படிவமானது சிராஸ் மீராசாஹிபினால் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது  ஶ்ரீறிலங்கா முஸ்லிம்…

Read More

வெளிநாடுகளில் இருந்து, இலங்கையின் அரச வங்கிகளில் 400 லட்சம் ரூபா பண மோசடி

போலியாக தயாரிக்கப்பட்ட கடனட்டைகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து இலங்கையின் அரச வங்கிகளில் போலி வங்கி கணக்குகள் மூலம் 400 லட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் குற்றத்தடுப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு நேற்று அறிவித்தல் விடுத்துள்ளது. இவ்வாறு மோசடி செய்தவர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

Read More

பர்மா முஸ்லிம்களுக்காக இன்று நடபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களும் கலந்து கொள்ள வேண்டும் – மனோ கோரிக்கை

அஸ்ரப் ஏ சமத் இன்று கொழும்பு வாழ் முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் கொழும்பில் நடாத்தும் பர்மா வாழ் முஸ்லீம்களது கொலை செய்யப்படுவதை கண்டன அமைதிப் பேரணியில் தமிழர்களாகிய நீங்களும் இணைந்து கொள்ளல் வேண்டும். நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில் புங்குடுதீவு வித்தியாவின் அஞ்சலி நிகழ்வில் ஜனநாயக முன்னணித் தலைவர் மனோ கனேசன் கோரிக்கை விடுத்தார். வித்தியாவின் கொலையில் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் இணைந்து கண்டித்து அமைதிப் பேரணியில் இனைந்தது போன்று முஸ்லீம்கள் பர்மாவில் அநியாயமாகக் கொலைசெய்யப்படுவதையிட்டு…

Read More

பட்டினியால் வாடும் மக்களின் தொகை குறைந்துள்ளது : ஐ. நா

உலகளவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 800 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது . இது தொடர்பில் தமது அறிக்கையினை நேற்று ntspapl;Ls;s ஐ.நா அமைப்பு மேலும் தெரிவித்திருப்பதாவது,  கணக்கிடப்பட்ட இம்மக்களின் தொகை சரியாக 795 மில்லியன் அளவாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு 09 பேருக்கும் ஒருவர் வீதம் என உலகளாவிய ரீதியில் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். உலகின் மக்கள் தொகை பெருகி, மோதல்கள்…

Read More

2015 உலகில் சிறந்த விடுதிகளில் இலங்கை விடுதி

சுற்றுலா பயணிகளுக்கு 2015ம் ஆண்டில் வசிக்கக் கூடிய சிறந்த விடுதிகள் பட்டியலில் இலங்கை விடுதி ஒன்றும் இடம்பிடித்துள்ளது. wherecoolthingshappen.com என்ற சுற்றுலா பயணிகளுக்கிடையில் பிரபல இணையத்தளமான இப்பட்டியலை வெளியிட்டிருந்தன. இலங்கையின் சிறந்த விடுதியான 98 Acres என்ற விடுதியினை குறித்த இணையத்தளம் பெயரிட்டிருந்தன.

Read More