Headlines

மூன்று உயிர்களை எடுத்த பாரிய தீவிபத்து.. உடனடியாக ஸ்தலத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாத்

மருதானை எல்பின்ஸ்ட்டன் பிரதேசத்தின் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.இந்த தீ விபத்தினால் மூவர் பலியானதாக பொலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இடம் பெற்று ஒரு சில நிமிடங்களுக்குள் அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பாதிப்புக்குள்ளான கடைத் தொகுதியினை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலீஸ் உயர் அதிகாரிகளிடத்தில் கேட்டுக்கொண்டார். இதே வேளை இந்த பிரதேசத்தில் தீ…

Read More

அனைவருக்கும் மேலாக ஶ்ரீசுக உரிமை எனக்கே உண்டு

அனைவருக்கும் மேலாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உரிமை தனக்கே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா – யக்கல வாராந்த சந்தையை திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் ஒரு பிரிவையே வாக்காளர்கள் நிராகரித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் இன்று (25) திங்கட்கிழமை காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என ஜப்பான் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கே சைத்தாமா என்ற பகுதியில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் கட்டிடங்கள் சிறிது ஆட்டம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் இதுவரையில் இல்லை. கடல் அடியில் 51 கிலோ மீற்றர் ஆழத்தில்…

Read More

வித்தியாவின் கொலை தொடர்பிலான மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானது : மாதுலுவாவே சோபித தேரர்

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலை சம்­பவம் தொடர்பில் மக்­களின் கோபமும் கொந்­த­ளிப்பும் நியா­ய­மா­னதே. பாட­சாலை சிறு­மியை பாலியல் கொடு­மைக்கு உள்­ளாக்கி கொலை செய்த நபர்­களை மக்கள் தண்­டிக்க துடிப்­ப­தையும் ஆக்­ரோஷப்­ப­டு­வ­தையும் நாம் குறை­கூற முடி­யாது என சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வரும் கோட்டே நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார். மக்கள் தமது கோபத்தை வெளிப்­ப­டுத்த சட்­டத்தை கையில் எடுக்­க­வேண்டாம் என்றும் சட்டம் தன் கட­மையை சரி­யாக செய்­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். புங்­கு­டு­தீவு மாணவி…

Read More

புடாபெஸ்ட் பிரகடனத்தில் இலங்கைக்கு அங்கத்துவம்

புடாபெஸ்ட் சைபர் குற்றம் தொடர்பான பிரகடனத்தில் அங்கத்துவம் பெறும் முதலாவது தெற்காசிய வலய நாடு என்ற பெயரை இலங்கை பெற்றுள்ளது. இதற்கான தகுதியை இலங்கை பெற்றுள்ளதாகவும் சட்ட ஆவணத்தை ஐரோப்பிய கவுன்ஸிலுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப (ICTA) சட்டப் பணிப்பாளர் ஜயந்த பெனாண்டோ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கவுன்ஸில் செயலாளர் நாயகம் இந்த உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததற்கு அமைய குறுகிய காலத்தில் சட்ட ஆவணம் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கைக்கு…

Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு ஜுன் முதலாம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது. இதன்படி, அனுராதபுரம் மத்திய மாகாண வித்தியாலயம், வலிசிங்க ஹரிச்சந்திர கல்லூரி, சாஹிரா கல்லூரி (அநுராதபுரம்), மிஹிந்தல மகா வித்தியாலயம், தந்திரமலை ஞானவிமலா வித்தியாலயம் நிவன்த-கச்சதிய கல்லூரி, சுவர்ணபாலி மகளிர் கல்லூரி, ஸ்ராவஸ்திபுர திஸ்ஸ மற்றும் தேவாநம்பியதிஸ்ஸபுர வித்தியாலயம், உட்பட 12 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மருதானையில் உள்ள ஹோட்டலில் தீ; மூவர் எரிந்து மரணம்

மருதானை கலீல் தனியார் வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ஹோட்டலில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீயினால் அந்தஹோட்டலில் அகப்பட்ட மூன்று பேர்  எரிந்து இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களின் உடல்கள் தற்போது தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பெயர் விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. இத்தீயினால் முன்னர் செயற்பட்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பழைய கட்டிடம் முற்றாக எரிந்துள்ளடன்  மருதானையில் பாரிய போக்குவரத்தும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Read More

விமான நிலையத்தில் அதிகரித்துள்ள கைதுகள்.. இது ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு வருகை தருவோரின் கவனத்திற்கு

-Razana Manaf- சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சின் Dubai சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சில பயணிகள் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது செய்யப்ட்ட பயணிகள் அனைவரும் உலகின் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிட்டு காட்டவேண்டிய விடயம். விமான நிலைய அதிகாரிகள் இவர்களின் பயண பொதியை சோதனையிட்ட போது விலங்குகளின் தோல்கள், விலங்குகளின் எலும்புகள், இறந்த விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட சில உடற்பாகங்கள், மனிதனின் உரோமம், இரத்த குப்பி, சில வகை மரத்தினுடைய இலைகள்,…

Read More

சவூதி அரேபியா குண்டு வெடிப்பில் தொடர்புடைய பலர் கைது : மன்னர் சல்மான் அறிவிப்பு…..!!

சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி சவூதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது…. குண்டுவெடிப்பு சம்பந்தமாக வெடிகுண்டு நிபுணர்களின் ஆய்வுகளை வைத்து காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அதிரடி வேட்டையில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, குண்டுவெடிப்பிற்கு திட்டம் தீட்டியவர்கள், பின்னணியில் இருப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் அடையாளம் காட்டப்படுவார்கள். இறைவனோ,…

Read More

பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் பதிவு

கொழும்பு மாநகர சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளினதும் சிற்றுண்டிச்சாலைகளை உத்தியோகபூர்வமான பதிவு செய்யும் நடவடிக்கை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவ அதிகாரி ருவன் விஜேமுனி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். சில பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச் சாலைகள் முறையான சுகாதார தன்மைகளை கொண்டிருக்கவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read More

இஸ்லாம் அழகானது அதை பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்க முனைபவர்கள் அதர்கு உரிய தண்டனையில் இருந்து தப்பமுடியாது சவுதி மன்னர் சல்மான் சூழுரை!

வெள்ளியன்று சவுதி அரேபியாவின் தம்மாம் அருகே உண்டான கதீஹ் நகரில் வெள்ளி கிழமை ஜீம்ஆ தொழுகையின் போது தற்கொலை குண்டு தாரி தாக்குதலை அரங்கேற்றினான் இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உட்பட பலர்கள் உயிர் இழந்தது மிக பெரிய சோகத்தை உருவாக்கியது இந்த குண்டு வெடிப்பு தொடர்ப்பானா விசாரணையை விரைவு படுத்திய சவுதியின் உளவுதுறை மற்றும் காவல் துறையினர் சம்பவத்தோடு தொடர்ப்புடைய பலர்களை கைது செய்துள்ளனர் இது தொடர்ப்பாக சவுதி மன்னர் சல்மான் நேற்று குறிப்பிடும் போது…

Read More

நீதிமன்றத்தின் மீதான தாக்குதல்; விசாரணைகளுக்காக 15 பேர் கொண்ட சி.ஐ.டி குழு யாழ் விரைவு!

யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தை (சிஐடி) சேர்ந்த 15 பேர் கொண்ட குழு யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் அமைதியின்மையை தோற்றுவிப்பதற்காக ஏதேனும் தேசவிரோத சக்திகள் இந்த சம்பவத்தின் பின்னணியிலிருந்து செயற்படுகிறதா என்பதனை மையப்படுத்தியதாகவே இதன் விசாரணைகள் அமையுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணைகளின் முதல் கட்டமாக, நீதிமன்ற கட்டடத் தொகுதியின் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தனிநபர்களின்…

Read More