Headlines

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களும் எதிர்வரும் மே மாதம் 3 , 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. வெசாக் போய தினங்களை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read More

பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினராக முகம்மது அலி றயிசுதீன்…

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனால் பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினராக சமூக சேவையாளரும்,வர்த்தகருமான முகம்மது அலி றயிசுதீன் (ஸலபி) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மன்னார் கொன்டச்சியை பிறப்பிடமாக கொண்டவர். அவருக்கான நியமன கடிதத்தை கைத்தொழி்ல் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீனால் வழங்கப்பட்டது

Read More

ஜூன் மாத இறு­திக்குள் தேர்­தலை நடத்தி உறு­தி­யான அரசை உரு­வாக்­க­ வேண்டும்

ஜூன் மாத இறு­திக்குள் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்தி உறு­தி­யான அர­சாங்­கத்தை உரு­வாக்­க­வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இலங்கை தொடர்­பான அறிக்கை செப்­டெம்பர் மாதம் வெளியி­டப்­ப­ட­வுள்­ள­தனால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று பாரா­ளு­மன்­றக்­கட்­டடத் தொகு­தியில் ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கூட்டம் இடம் பெற்­றது. இங்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மங்­கள சம­ர­வீர இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்:-…

Read More

நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிப்பு

முழுமைபெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்ற சபைக்குள் இரவொன்றைக் களிப்பதன் மூலம் நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட கறையாகும் என தேசிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியது.

Read More

தலைப்பு அவசியமில்லை… (கவிதை)

கொடுத்தவைகளுக்கும் – இனி கொடுக்கப்போகும் அருளுக்கும்; முட்டிக்கொண்டு.. கண்ணீர் தளும்புகிறது; செவிகளின் சோணைகள் சிலிர்த்தப்படி – கை ரோமங்கள் கண்ணீரில் நனைத்து; மேற்கொண்டுப் பேசமுடியாமல் துடிக்கிறது என் உதடு! நன்றிக்கெட்டவனாக நாளும் நடைப்போடுகிறேன்; முடித்த அமல்களில் எனக்கு நானே மனம் திருப்திக்கொள்கிறேன்; புன்னகைப் பூக்கவேண்டிய சகோதரத்தின் சதைகளைக் கடித்து; இரத்தக் கறையுடன் என் பற்களில் பளிச்சிட்டப்படி இரட்டை முகத்துடன் உலாவருகிறேன்.. பாவமென்று அறிந்தும் என் பாதங்களை அதில் நுழைக்கிறேன்; தனிமையின் சூழலில் நல்லவனெனும் பகட்டு ஆடையை கழட்டி…

Read More

இஸ்ரேலின் தூக்கத்தைக் கெடுத்த குந்தர் கிராஸ்!

அ.செய்யது அலீ இஸ்ரேலை எதிர்ப்பதில் குந்தர் கிராஸ் உறுதியாக இருந்தார். யூத அராஜக தேசத்தின் கொடூரமான வன்முறைகளை அவர் கடுமையான பாஷையில் விமர்சித்தார். 2012-ஆம் ஆண்டு வெளியான வாட் மஸ்ட் பி ஸைட் என்ற கவிதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக காழ்ப்புணர்வுடன் பேசி வந்த இஸ்ரேலுக்கு கிராஸின் கவிதை பலத்த அடியை கொடுத்தது.இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைய குந்தர் கிராஸுக்கு தடை விதிக்கப்பட்டது. ‘அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறி மற்றைய நாட்டுகளை தாக்குவதற்கான…

Read More

புகைப்பிடிப்பதை விட சென்ட் அடித்துகொள்வதே உடலுக்கு கேடு விளைவிக்கும்! அதிர்ச்சி தகவல்

வாசனைகளுக்கு பழகிவிட்டது நவீன மூக்கு. காலையில் கண் விழிப்பதில் தொடங்கி இரவு இமை மூடும் வரை நம்மை சுற்றி வாசனையாக இருப்பதை போல பார்த்துக் கொள்கிறோம். முன்பெல்லாம் பெட்ரூமுக்கு மட்டும்தான் ரூம் ஃப்ரெஷ்னர். இப்போது காரில்கூட ஃப்ரெஷ்னர் அடித்துவிட்டுதான் வண்டியை ஸ்டார்ட் செய்கிறோம். டூத்பேஸ்டில் தொடங்கி, இரவில் வாய் கொப்பளிக்கும் மவுத்வாஷ் வரை ஒரு நாளைக்கு குறைந்தது பதினைந்து மணி நேரமாவது வாசனையாக இருக்கிறோம். சில பேருக்கு தூக்கத்தில்கூட ஏதோ வாசனையை நுகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்….

Read More

சவூதி வாழ் சொந்தங்களுக்கு ஓர் அறிவித்தல்!

எம். ஹூஸைன்கனி, ரியாத். சவூதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் மனைவி மற்றும் பிள்ளைகளின் கைரேகை பதிவுகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள தகவல் தாங்கள் அறிந்ததே. தற்போது அது துரிதப் படுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் (பெண்களும் குழைந்தைகளும்) பாஸ்போர்ட் (ஜவஸாத்) அலுவலகம் சென்று கூட்ட நெரிசலில் தவிப்பதாக தகவல் அறிந்தோம். சவூதி பாஸ்போர்ட் துறையினரால் நாடு முழுதும் ஷாப்பிங் மால் உட்பட நகரின் பல்வேறு இடங்களில் கைரேகைப் பதிவு செய்யும் இடங்கள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. பெண்களும், குழந்தைகளும் அங்கு சென்று…

Read More

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, காலி, களுத்துறை, மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. மண்மேடுகள் சரிந்து வீழ்வதற்கும், மண்சரிவுகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான வானிலை காரணமாக…

Read More

அபாயாவில் வலம் வந்த ஆண் சவூதியில் கைது

புனித நகரமான மக்காவில் உள்ள ஜாரனா மஸ்ஜிதில் இஸ்லாமிய பெண்களின் பாரம்பரிய உடையான ‘அபயா’ வை அணிந்து கொண்டு வலம் வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மஸ்ஜிதிற்கு வந்திருக்கும் பெண்களில் ஒருவர் அடிக்கடி கழிவறைக்கு செல்வதாகவும் விசித்திரமாக நடந்து கொள்வதாகவும் மஸ்ஜிதில் உள்ள சிலர் பொலிஸில் புகாரளித்தனர். இதையடுத்து அந்தப் பெண்ணைக் கண்காணித்த பொலிஸார் அவர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்றதைக் கவனித்தனர். அவரை பின் தொடர்ந்து சென்ற போது அவர் ஹபாயாவை அணிந்துக் கொண்டிருப்பதைக்…

Read More

சதோச பணிப்பாளர் சபை உறுப்பினராக சப்ராஸ் ஹம்சா நியமனம்; நியமன கடிதத்தை அமைச்சர் றிஷாத் வழங்கி வைத்தார்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனால் இலங்கை சதோச பணிப்பாளர் சபை உறுப்பினராக சப்ராஸ் ஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்,அவருக்கான நியமன கடிதத்தை அமைச்சர் றிஷாத் வழங்கி வைத்தார்.

Read More

ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பு வெளியிடப் போகும் -“மஹிந்த ராஜபக்ஸ ஊழல்” நூல்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களை நூல் வடிவல் ஆவணப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த தகவல் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பிற்கு அண்மைக் காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்இ ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நூல் வெளியிடப்பட உள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இந்த…

Read More