Headlines

அமெரிக்கா சென்றால் மின்சாரக் கதிரையில் அமர வேண்டி ஏற்படலாம் – கோத்தாபய

தற்போது பேசப்படும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் சட்டவிரோதமானது அல்ல எனவும், அது அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ரக்னா லங்கா நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கோத்தாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவன்காட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த…

Read More

பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா

ஏ.எஸ்.எம்.ஜாவித் கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா கடந்த 12ஆம் திகதி வெள்ளவத்தை கூரோ விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் கலாநிதி ஜஹர்ஜான் மன்சூர் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும் கௌரவ அதிதிகளாக வீ கெயா கியுமனிற்றி தலைவர் பிரின்சஸ் மரியா அமொர், ஹமீட் அல்-ஹூஸைனியா கல்லூரி அதிபர் ரி.எம். நசுமுதீன், முன்னாள் கல்விப் பகுதி பணிப்பாளர் சறூக்கான், பாடசாலையின்…

Read More

நாவலயில் மனித கை மீட்பு

நாவல பகுதியிலுள்ள நீர் நிலையொன்றிலிருந்து மனித கையொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்வம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை தெமட்டகொட பகுதியில் உள்ள நீர் நிலையொன்றிலிருந்து மனித கால்கள் இரண்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

தெமட்டகொடையில் மீட்கப்பட்ட கால்கள் யாருடையது? : தகவல்களை மறைக்கும் பெண்ணுக்கு விளக்கமறியல்

தெமட்­ட­கொடை – சிறி­தம்ம மாவத்­தையில் உள்ள வடிகான் ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்ட மனிதக் கால்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பொலி­ஸா­ரினால் விரி­வு ­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அந்த கால்கள் காணப்­பட்ட இடத்தில் இருந்த தட­யங்­களை வைத்து பொலிஸ் மோப்ப நாயின் உத­வி­யுடன் பெண்­ணொ­ருவர் கைது செய்­யப்­பட்ட நிலையில் சம்­பவம் தொடர்பில் தக­வல்­களை மறைக்கும் குற்றச்சாட்­டுக்­காக அவரை நேற்று நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்தி எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டது. கடந்த சனிக்­கி­ழமை தெமட்­ட­கொடை –…

Read More

எம் மனதில் ஒருகாலமும் தமிழர்களுக்கு எதிரான மனோநிலை இருந்ததில்லை

தமிழ் மக்­க­ளுக்கு நாங்கள் ஒரு­போதும் எதி­ரா­ன­வர்கள் அல்லர். பயங்­க­ர­வா­த­மா­னது எம் இரு சமு­தா­யத்­தி­ன­ரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்­ற­தா­லேயே அதனை தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்கு நாம் முயற்­சித்தோம். பௌத்த பிக்­குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமி­ழ­ருக்­கெ­தி­ரான மனோ­நிலை இருந்­த­தில்லை, என்று ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவரும் பாராளு­மன்ற உறுப்­பினருமான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார். யாழ்.வீர­சிங்கம் மண்­ட­பத்தில்  இடம்­பெற்ற சிங்­கள பௌத்த கலா­சார விழாவில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர்…

Read More

கோத்­த­பாய சுப்பர் மேன் இல்லை

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மட்­டுமே ‘சுப்பர் மான்’ என்­றில்லை என்­பதை நாம் நிரூபித்­துள்ளோம் என தெரி­வித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், தனது அமைச்சில் நடை­பெற்ற ஊழல் மோச­டிகள் குறித்து உள்­ளக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். உலக குடிநீர் தினத்தை முன்­னிட்டு நடை­பெ­ற­வுள்ள தேசிய நிகழ்வு குறித்த ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நகர அபி­வி­ருத்தி மற்றும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சின் ஏற்­பாட்டில் நேற்­றைய தினம் அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது….

Read More

சிவனொளிபாத மலை ஏறி மரணமடைந்த சிங்கபூர்காரர்

சிவனொளிபாத மலையில் ஏறிய, 55 வயதான சிங்கபூர் பிரஜையொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சிங்கபூர் பிரஜைகள் அடங்கிய குழுவுடன் சிவனொளிபாதமலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏறியபோதே இந்திகட்டுபான பகுதியில் வைத்தே அவர் மரணடைந்துள்ளார். இதுதொடர்பில் சிங்கபூர் தூதுவராலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நேட்டோ வீரர்களின் பயிற்சிக்குப் பதிலடியாக ரஷ்ய வடக்குக் கடற்படை முழு எச்சரிக்கையில்!

சமீபத்தில் அமெரிக்காவும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய எல்லையில்  தொடர் இராணுவப் பயிற்சியை ஆரம்பித்ததை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தனது வடக்கு கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறும் ஆர்டிக் வலயத்தில் பயிற்சியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார். இப்பயிற்சியானது வழக்கமான பயிற்சியே என்றும் இதற்கும் சர்வதேசத்தின் சூழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ரஷ்யத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஸ்புட்னிக் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரஷ்யக் கப்பற்…

Read More

முஸ்லிம் கலை, இலக்கியங்களை ஆய்வு செய்ய முற்படுபவர்களுக்கு..!

– கலாபூசணம் ஜே.எம்.ஹாபீஸ் – கலைஞர்கள், படைப்பாளிகள், அறிஞர்கள், தத்துவவியலாளர்கள் எனப் போற்றப்படும்  மேதைகள் காலத்தால் அழியாதவர்கள். அவர்களது படைப்புக்கள் என்றும் நிலைத்து வாழ்பவை. அதனிலும் சிறப்பு யாதெனில் அவர்களது சிந்தனைக் கருத்துக்கள் உலகம் உள்ளவரை நிலையா தர்மமாகப் பிரகாசித்து பலருக்கு அறிவொளியூட்டிவருவதாகும். அந்த அடிப்படையில் சுமார் 200 வருடங்களுக்குற்பட்ட காலத்தில் தற்போதைய நிலை  போன்று ஊடகங்கள் இருக்க வில்லை. அச்சு ஊடகங்கள் கூட மிக அரிதான காலம். அப்படியான ஒரு காலக்கட்டத்தில் அறிஞர் சித்திலெவ்வை என்றும்,…

Read More

மலேசியாவில் நடுவானில் 2 விமானங்கள் மோதி வெடித்து சிதறியது

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமான கண்காட்சி நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாட்டு விமானங்களும் கப்பல்களும் கலந்து கொள்கின்றன.இதற்காக பல்வேறு நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் லங்காவி தீவுக்கு வந்துள்ளன. இந்தோனேஷியாவை சேர்ந்த 2 அதிநவீன விமானங்கள் நேற்று மாலை நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது ஒரு விமானத்தின் இறக்கையில் மற்றொரு விமானம் மோதியதால், இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்து…

Read More

அத்துமீறும் எவரையும் சுடுவதற்கு இலங்கை கடற்படைக்கு உரிமை உள்ளது: மீண்டும் பிரதமர் திட்டவட்டம்

இலங்கைக் கடலில் அத்துமீறும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை கடற்படை வீரர்களுக்கு உரிமை உள்ளது என அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் உறுதிபட கூறியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு (NDTV) அவர் அளித்த பேட்டியில், “இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை கடற்படை வீரர்களுக்கு உரிமை உள்ளது. இதில் ஒன்றும் புதிது இல்லை” என்று கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் மோடி இலங்கைப் பயணம்…

Read More

ஓட்டமாவடி தேசிய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா நிகழ்வு

– அனா – மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி தேசிய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா நிகழ்வு (16.05.2015) கல்லூரி பிரதன மண்டபத்தில் இடம் பெற்றது. 2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் திறமையாக சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Read More