அமெரிக்கா சென்றால் மின்சாரக் கதிரையில் அமர வேண்டி ஏற்படலாம் – கோத்தாபய
தற்போது பேசப்படும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் சட்டவிரோதமானது அல்ல எனவும், அது அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ரக்னா லங்கா நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கோத்தாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவன்காட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த…
