Headlines

சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் ஏப்ரலில்

2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7  ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.   2013 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முறை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள், மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மதிப்பீட்டுப் பணிகள் இரண்டு வார காலம்…

Read More

கைப்பையுடன் கண்டெடுத்த பெறுமதியான பொருட்களை உரியவரை தேடி ஒப்படைத்த வண்டித் தொழிலாளி எஸ்.எம்.பரீத்.. இலங்கையில் தான்

தோப்பூர் சந்தைக்கு அருகில் வைத்து காணாமல் போன கைப் பையிலிருந்த பெறுமதியான பொருட்களை கண்டெடுத்து உரியவரிடம் மாட்டு வண்டில் தொழிலாளி ஒருவர் ஒப்படைத்தச் சம்பவ ஒன்று இன்று செவ்வாய் கிழமை தோப்பூர் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. -தோப்பூர் நிருபர் நஹீம் முஹம்மட் புஹாரி- தோப்பூர் பொதுச் சந்தையில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்ற போது அவரின் கை பையிலுந்த 7500 ரூபா பணம்,கையடக்க தொலைபேசி1,வங்கியில் அடகு வைத்த இரண்டு அடகு…

Read More

மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகள் கைது

மலேசிய எதிர்க்கட்சி எம்.பி.யும், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகளுமான நுருல் இசாவை மலேசிய போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 34. கடந்த வாரம், தனது தந்தைக்கு எதிரான அப்பீல் கோர்ட்டின் தீர்ப்பை பாராளுமன்றத்தில் விமர்சித்து பேசியதற்காக தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, பாராளுமன்றத்தின் உரிமையில் குறுக்கிடும் செயல் என்று அவருடைய வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார்.

Read More

அரிசி இறக்குமதியை முற்றாக தடை – உணவு பாதுகாப்பு அமைச்சு

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதனை முற்றாக தடைசெய்யவுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவைகளும் காணப்படவில்லை என அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் அதிகளவிலான பணத்தை செலவிட்டு, வெளிநாடுகளில் இருந்து அளவுக்கதிகமாக அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம் உள்நாட்டு செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நன்மைக் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காமினி ஜயவிக்கிரம பெரேரா கூறினார்.

Read More

இம்முறை ஏறாவூரில் நான் நேரடியாக களமிறங்கி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன் -அமீர் அலி

ஏ.எச்.ஏ.ஹுஸைன் எதிர்வரும் அரசியல் சூழல் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்துக்கும் குறிப்பாக, முஸ்லிம்களுக்கு அநேக இழப்புக்களை தருகின்ற ஒன்றாக அமையலாம் என்று சமூர்த்தி அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தி கல்வி வலயத்திலுள்ள அமீரலி வித்தியாலய வருடாந்த மெய்வல்லுநர் போட்டி, திங்கட்கிழமை (16) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தொகுதிவாரி தேர்தல் முறைமையின் கீழ், அவசரமான ஒரு தேர்தல் அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றபோது, அது…

Read More

அமெரிக்கா சென்றால் மின்சாரக் கதிரையில் அமர வேண்டி ஏற்படலாம் – கோத்தாபய

தற்போது பேசப்படும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் சட்டவிரோதமானது அல்ல எனவும், அது அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ரக்னா லங்கா நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கோத்தாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவன்காட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த…

Read More

பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா

ஏ.எஸ்.எம்.ஜாவித் கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா கடந்த 12ஆம் திகதி வெள்ளவத்தை கூரோ விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் கலாநிதி ஜஹர்ஜான் மன்சூர் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும் கௌரவ அதிதிகளாக வீ கெயா கியுமனிற்றி தலைவர் பிரின்சஸ் மரியா அமொர், ஹமீட் அல்-ஹூஸைனியா கல்லூரி அதிபர் ரி.எம். நசுமுதீன், முன்னாள் கல்விப் பகுதி பணிப்பாளர் சறூக்கான், பாடசாலையின்…

Read More

நாவலயில் மனித கை மீட்பு

நாவல பகுதியிலுள்ள நீர் நிலையொன்றிலிருந்து மனித கையொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்வம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை தெமட்டகொட பகுதியில் உள்ள நீர் நிலையொன்றிலிருந்து மனித கால்கள் இரண்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

தெமட்டகொடையில் மீட்கப்பட்ட கால்கள் யாருடையது? : தகவல்களை மறைக்கும் பெண்ணுக்கு விளக்கமறியல்

தெமட்­ட­கொடை – சிறி­தம்ம மாவத்­தையில் உள்ள வடிகான் ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்ட மனிதக் கால்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பொலி­ஸா­ரினால் விரி­வு ­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அந்த கால்கள் காணப்­பட்ட இடத்தில் இருந்த தட­யங்­களை வைத்து பொலிஸ் மோப்ப நாயின் உத­வி­யுடன் பெண்­ணொ­ருவர் கைது செய்­யப்­பட்ட நிலையில் சம்­பவம் தொடர்பில் தக­வல்­களை மறைக்கும் குற்றச்சாட்­டுக்­காக அவரை நேற்று நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்தி எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டது. கடந்த சனிக்­கி­ழமை தெமட்­ட­கொடை –…

Read More

எம் மனதில் ஒருகாலமும் தமிழர்களுக்கு எதிரான மனோநிலை இருந்ததில்லை

தமிழ் மக்­க­ளுக்கு நாங்கள் ஒரு­போதும் எதி­ரா­ன­வர்கள் அல்லர். பயங்­க­ர­வா­த­மா­னது எம் இரு சமு­தா­யத்­தி­ன­ரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்­ற­தா­லேயே அதனை தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்கு நாம் முயற்­சித்தோம். பௌத்த பிக்­குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமி­ழ­ருக்­கெ­தி­ரான மனோ­நிலை இருந்­த­தில்லை, என்று ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவரும் பாராளு­மன்ற உறுப்­பினருமான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார். யாழ்.வீர­சிங்கம் மண்­ட­பத்தில்  இடம்­பெற்ற சிங்­கள பௌத்த கலா­சார விழாவில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர்…

Read More

கோத்­த­பாய சுப்பர் மேன் இல்லை

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மட்­டுமே ‘சுப்பர் மான்’ என்­றில்லை என்­பதை நாம் நிரூபித்­துள்ளோம் என தெரி­வித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், தனது அமைச்சில் நடை­பெற்ற ஊழல் மோச­டிகள் குறித்து உள்­ளக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். உலக குடிநீர் தினத்தை முன்­னிட்டு நடை­பெ­ற­வுள்ள தேசிய நிகழ்வு குறித்த ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நகர அபி­வி­ருத்தி மற்றும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சின் ஏற்­பாட்டில் நேற்­றைய தினம் அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது….

Read More

சிவனொளிபாத மலை ஏறி மரணமடைந்த சிங்கபூர்காரர்

சிவனொளிபாத மலையில் ஏறிய, 55 வயதான சிங்கபூர் பிரஜையொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சிங்கபூர் பிரஜைகள் அடங்கிய குழுவுடன் சிவனொளிபாதமலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏறியபோதே இந்திகட்டுபான பகுதியில் வைத்தே அவர் மரணடைந்துள்ளார். இதுதொடர்பில் சிங்கபூர் தூதுவராலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More