குருநாகல் மாவட்டத்தில் எமது சமுகத்திற்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம் – றிஷாத் பதியுதீன்
ஊடகப் பிரிவு குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தமது அரசியல் அடைவுகளை அடைந்து கொள்ள முடியாது போனதனாலேயே நாம் இங்கு அதனை பெற்றுக் கொடுக்க வரவேண்டிய தேவையேற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் உங்களுக்கு அந்த அரசியல் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் எமது கட்சி முழுமையான பங்களிப்பினை செய்யும் என்று கூறினார். தெள்ளியகொன்னயில் ஆரம்பித்து வைக்கப்ட்ட குருநாகல் மாவட்ட யுவதிகளுக்கான இலவச தையல் பயிற்சி நெறியின்…
