Headlines

மஹிந்தவின் இறுதி நடவடிக்கை மரண தண்டனைக்குரிய பாரிய குற்றம் -வாசுதேவ

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்க கையளிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள தீர்மானம் மரண தண்டனைக்குரிய பாரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார இந்த கருத்தை வெளியிட்டடுள்ளார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு இணங்க இந்த தலைமை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

Read More

மஹிநதவினால் நியமிக்கப்பட்ட 62 தூதுவர் உடனடியாக மீண்டும் நாட்டுக்கு அழைப்பு -வெளிநாட்டு அமைச்சர் அதிரடி

அஸ்ரப் ஏ சமத் முன்னைய ராஜபக்ச அரசில் வெளிநாட்டு தூதுரகங்களில் அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட 62 தூதுவர்கள் 32 தூதுவராலயங்களில் கடமையாற்றும் சகலரையும் இந்த வாரத்திற்குள் நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்டு நாட்டுக்கு வரவழைக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளார் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர. இவற்றில் 1 மாதத்திற்கு முன் நியமிக்கப்பட்ட ஹுசைன் முஹம்மத் ஜித்தாவில் உள்ள டொக்டர் உதுமாலெப்பையும் அடங்குகின்றனர். இதில் அனேகமான தூதுவர்கள் கடந்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக இலங்கை வந்து தேர்தலில் ஈடுபட்டு விட்டு…

Read More

20அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் இன்று கடமைகளை பொறுப்பேற்பு

அஸ்ரப் ஏ சமத் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட 20அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சுகளுக்குச் சென்று கடமைகளை பொறுப்பேற்கின்றனர். அமைச்சர்களான சஜித் பிரேமதாச செத்சிரிபாய, வீடமைப்பு அமைச்சு, பைசர் முஸ்தபா – செத்சிரிபாய, கபீர் ஹாசீம், வேல் ரேட் சென்டர், ரவுப் ஹக்கீம் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள நீர்விநியோக வடிகாலாமைப்புச் அமைச்சு, றிஷாத் பதியுதீன் – கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது பழைய அமைச்சு, ஜோன் அமரதுங்க கொழும்பு 7 அனர்த்த முகாமைத்துவ அமைச்சு லக்ஸ்மன் கிரியெல்ல பத்தரமுல்ல…

Read More

தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை துறந்தார் பஸில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து முன் னாள் பொரு ளாதார அபி விருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்­ஷ விலகியுள்ளார். ஜனா திபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்­ வின் தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்று அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார். ஜனவரி 15ஆம் திகதியுடன் (நேற்றுடன்) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பஸில் ராஜபக்ஷ­ அறிவித்துள்ளார் என அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

Read More

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சை பாரமெடுத்தார்

அஸ்ரப் ஏ சமத் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சை பாரமெடுத்தவுடன் முதன் முதலாக அவரது விசேட வேலைத்திட்டத்தில் கையெழுத்திட்டு 65 கைதிகளை விடுதலை செய்தார். நேற்று இலங்கைக்கு வருகைதந்திருந்த பாப்பரசின் வருகைக்காக சிரைச்சாலைகள் சிறிய குற்றங்கள் இழைத்த தண்டப்பணம் செலுத்த பணம்இல்லாமால் சிறையில் இருந்தவர்களும் இவர்கள் 75 வயதை தாண்டிய 65 கைதிகளுக்கு விடுதலையாக்கினார். கடந்த காலங்களில் இந்த அமைச்சு இரண்டாகப் பிரிந்திருந்தது. நீதி அமைச்சாகவும் மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்புக்கு…

Read More

மைத்திரி ஆட்சியின் மீதான சவால்கள் ஒரு பார்வை

எம்.ஏ.எம்.பௌசர் விரிவூரையாளார் அரசறிவியல் துறை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒலுவில். மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் முடிவடைந்துள்ள இலங்கையின் ஏழாவது ஜனாதிபதித் தேர் தல் தேசிய சர்வதேச மட்டத்தில் அதீத கவனஈர்ப்பினைப் பெற்றுள்ளது. தேர்தல் நடாத்தப்பட்ட பின்புலம் போட்டியாளகள் தேர்தல் முடிவுகள் தேர்தலுக்குப் பிந்திய அரசியல் என சுவாரஷ்யமான பல விடயங்களில் அதன் முக்கியத்துவத்தினைப் பரீசீலிக்க முடியும். எனினும் இக்கட்டுரை ஜனாதிபதித் தேர்தல் பற்றிய சிறு அறிமுகத்துடன் தேர்தலுக்கு பிந்திய அரசியலில் புதிய ஆட்சியின் மீதுள்ள சில சவால்களைக் குறித்துக் காட்டுகின்றது….

Read More

தனது நண்பன் வசீம் தாஜுதீனை கொன்றதாக யசாராவினால் யோஷித்தவிற்க்கு எதிராக முறைப்பாடு

தனது நண்பனை கொன்றதாக யசாராவினால் முன்னால் ஜனாதிபதியின் மகன் யோஷித்தவிற்க்கு எதிராக முறைப்பாடு செய்யபப்ட்டுள்ளதாக லங்கா நிவ்ஸ் வெப் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. யசாராவும் யோஷித்தவும் காதலர்களாக இருந்தபோது தனக்கும் தனது முஸ்லிம் நண்பானான் வசீம் தாஜுதீனிற்கும் இடையில் தொடர்பிருப்பதாக கருதிய யோஷித்த இந்த கொலையை செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் . யோசித்த அதிக கோபக்காரன் என்றும் வசீம் தாஜுதீனிற்கும் இடையில் ஏற்ப்பட்ட முறுகளில் வசீம் யோஷித்தவின் காதலி யசரா பற்றி சில விடங்களை வசீம் குறிப்பிட்டதாகவும்…

Read More

பொன்சேகாவின் “ஜம்பரை” மைத்ரிக்கு அணிவிப்பதாக சூளுரைத்த முஸ்லிம் தலைவர்கள் இன்று ஜனாதிபதி மைத்ரி காலில் விழ முயற்சி…

-அஷ்ரப் ஏ சமத்  – பொன்சேகாவின் “ஜம்பரை” மைத்ரிக்கு அணிவிப்பதாக சூளுரைத்த முஸ்லிம் தலைவர்கள் இன்று ஜனாதிபதி மைத்ரி காலில் விழ முயற்சி…. முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா சிறையில் அணிந்த ஜம்பரை மைத்ரிக்கு தயாராக வைத்திருப்பதாக கூறி மேடைகளில் வீரவசனம் பேசிய கார்ட்போர்ட் அரசியல்முஸ்லிம்  தலைவர்கள் இன்று ஜனாதிபதி மைத்ரியின் காலடியில் விழ முயற்சி செய்துவருவதாக ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகாண சபை  உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான  பைரூஸ் ஹாஜியார் குற்றம் சுமத்தியுள்ளார்….

Read More

ஒரு மா நகர சபை உறுப்பினரை விட வலுவிழந்தவர்களா சம்மாந்துறை அரசியல் வாதிகள்..??

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை பொருளாதாராத்தில் நெல் விவசாயச் செய்கையே பிரதானமாக  கொண்ட ஒரு ஊராகும்.அண்மையின் கிழக்கு மாகாணமே வெள்ளத்தில் மூழ்கி நிவாரணம் கொடுக்கும் அளவு மழையினால் பாதிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக விவசாயக் காணிகள் சிலவும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது.அன்று மழை நீரினால் பாதிக்கப்பட்ட காணிகள் வெள்ளம் வடிந்து இரண்டு கிழமைக்குள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இது அதிகாரிகளின் அசமந்தப் போக்கில்லாமல் நீர்த் தட்டுப்பாடு போன்ற நொண்டிக் காரணங்களை கூற இயலாது. கல்முனை மா நகர சபை…

Read More

மைத்திரிக்கும், ரணிலுக்கும் பலம் கிடைத்தது

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வ கட்சி அரசாங்கத்துக்கு தற்பொழுது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க சார்பு உறுப்பினர்கள் 113 ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும், ஜனநாயக தேசியக் கட்சியின் 6 உறுப்பினர்களும், தேர்தல் காலத்தில் எதிரணியில் இணைந்து கொண்ட 25 உறுப்பினர்களும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 21 உறுப்பினர்களும் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினர். இதன்…

Read More

சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை, மைத்திரிற்கு விட்டுக்கொடுக்க மஹிந்த இணக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விட்டுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More

றிஷாத் பதியுதீன் நாளை அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கிறார்

ஊடகப் பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,புதிய அரசாங்கத்தில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் றிசாத் பதியுதீன் நாளை வெள்ளிக்கிழமை(2015.01;.16)  தமது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். கொழும்பு 3 காலி வீதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு இந்த வைபவம் இடம் பெறவுள்ளதாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் தெரிவித்தார். முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் இதே பதவியினை வகித்து வந்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு…

Read More