Headlines

ஊடக அமைச்சா் கயான் ஜயதிலக்க தனது அமைச்சில் கடமைகளை பாரமேற்றார்

அஸ்ரப் ஏ சமத் புதிய ஊடக அமைச்சா் கயான் ஜயதிலக்க தனது அமைச்சில் கடமைகளை நேற்று பாரமேற்ற போது எடுக்கப்பட்ட படம்.

Read More

வெளிவிவகார அமைச்சர் இந்தியா செல்கிறார்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று இரவு இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி நாளைய தினம் அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்திக்கவுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் இந்திய மற்றும் இலங்கைக்கு இடையில் முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும்.இதேவேளை நாளை மறுதினம் அமைச்சர் மங்கள சமரவீர இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் பாகுபாடின்றி சேவை செய்துவருகின்றார் -நானாட்டான் பிரதேச சபை தலைவர்

இர்ஷாத் றஹ்மத்துல்லா வடக்கில் முதன் முதலாக அமைச்சர் றிசாத் பதியுதீனுடன்  இணைந்து இந்த தேர்தலில் ஒரே நோக்கத்திற்கான ஜனாதிபதி ஒருவரை வெற்றிக் கொள்ள பணியாற்ற கிடைத்தமை குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் இந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக போட்டியிட்ட போதும் அந்த உணர்வுகளை கடந்து எமது சகோதரர் ஓருவர் களமிறங்கிய உணர்வே மேலீட்டுக்காணப்பட்டதாகவும் கூறினார். நடை பெற்று முடிந்த ஜனாதிபதித்…

Read More

மஹிந்தவின் புதையல் அம்பலம்!

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதயில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் இருந்த பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அலரி மாளிகைக்குள் புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டமையும் தெரியவந்துள்ளது. புதிய அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று தனது கடமைகளை அலரி மாளிகையில் ஆரம்பித்தார். அதன்பின்னர் மாலையில் தனது கட்சி அமைச்சர்கள்.பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.அதற்கு ஊடவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கலந்துரையாடலின் முடிவில் அலரி மாளிகையைச்…

Read More

கிழக்கு முதலமைச்சர் மக்கள் விருப்பப்படியே – றிஷாத் பதியுதீன்

ஏ.எச்.எம்.பூமுதீன் -நியாயமான தீர்வுக்கு தமிழ் தலைமைகளை அழைக்கிறேன். -100 நாட்களுக்குள் கைத்தொழில் புரட்சி – அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிழக்கு மக்கள் எந்த முதலமைச்சரை விரும்புகின்றார்களோ அவருக்கு நாம் ஆதரவளிப்போம். யார் முதலமைச்சர் என்பதை கட்சித் தலைவர்கள் கூடி 20 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். தமிழ் தேசிய நாளிதழ்களின் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடும் போதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஊடகவியாலாளர்களுக்கும் அமைச்சருக்குமான சந்திப்பு…

Read More

றிஷாத் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.. (படங்கள் இணைப்பு)

ஏ.எஸ்.எம்.ஜாவித் புதிய அரசாங்கத்தின் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக றிஷாத் பதியுதீன் இன்று (16) பிற்பகல் தனது அமைச்சுப் பொறுப்பை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார். கொள்ளுப் பிட்டியில் உள்ள அமைச்சுக் காரியாலயத்தில் அவர் பொறுப்பேற்றபோது பிரதி அமைச்சர் பிரேமதாஸ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய அமைச்சரவை இன்று கூடுகிறது

புதிய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது. அமைச்சரவை அமைக்கப்பட்டதன் பின்னர் கூடும் முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராகிறார்

அஸ்ரப் ஏ சமத் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற பதவியை எடுத்துக் கொண்டு கடந்த ஜனாதிபதித் தோ்தல் காலத்தில் மகிந்த பக்கம் சென்ற ஜயந்த கனகொட அந்தப் பதவியை சரத்பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு முன் வந்துள்ளாா். அடுத்த 19ஆம் திகதி பாரளுமன்றத்தில் சரத் பொண்சேகா மீள பாராளுமன்றம் சென்றதும் அவருக்கு பொருப்பு வாய்ந்த அமைச்சு வழங்கப்படும்.

Read More

புதுக்கடையில் பள்ளிவாசலினுள் படுகொலை: நடந்தது என்ன?

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுக்கடை, அப்துல் ஹமீத் வீதியில்  உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  குறித்த பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான  மொஹம்மட் ரவூப் மொஹம்மட் ருஷ்கி என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை தேடி விசாரணைகள் தொடர்வதாகவும் வாழைத்தோட்டம் பொலிஸார் விடிவெள்ளிக்கு குறிப்பிட்டனர். நேற்று அதிகாலை 4.20 மணியளவில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய…

Read More

தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியும் பிரதமரும் உத்தரவாதம்

இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள தோட்டத் தொழிலாளர்களின் இரு நூறு ஆண்டு கால பழைமை வாய்ந்த லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உத்தரவாதம் அளித்துள்ளார்கள் என துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம் நேற்று அட்டனில் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய…

Read More

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இந்த தீர்மானத்தை இன்று கூடவுள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து அறிவிக்கவிருப்பதாக, முன்னாள் ஜனாதிபதியின் பேச்சாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.சிறிலங்கா சுதந்திர கட்சி பிளவடைவதை தடுக்கும் நோக்கில் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன், இலங்கை மக்களின் நலன்கள் மற்றும் நாட்டின் நிலையான தன்மையை பாதுகாக்கவும் இந்த தீர்மானம்…

Read More

பதவி விலகப் போவதில்லை – சரத் ஏக்கநாயக்க

சத்தியக் கடதாசிகள் கையளிக்கப்பட்டதால் மாத்திரம் தாம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பல்லேகல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனக் கூறியுள்ளார்.எவ்வாறாயினும், மத்திய மாகாண சபையில் உள்ள 58 உறுப்பினர்களுள் 34 உறுப்பினர்கள் இணைந்து, மத்திய மாகாண புதிய முதலமைச்சராக திலினபண்டார தென்னகோனை நியமிக்குமாறு கோரி சத்தியகடதாசியை கையளித்திருந்தனர். இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் செயற்படவிருப்பதாக, மத்திய மாகாண ஆளுனர்…

Read More