Headlines

கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவின் ஆலோசகர்!




அஸ்ரப் ஏ சமத்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆலோசகராகவும் ஜாதிக்க சயித்திய அமைப்பின் முக்கியஸ்தருமான டொக்டர் வசந்த பண்டாரவை நேற்று பொலிசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் தேர்தல் காலத்தில் ஜ.தே.கட்சி தலைமைக் காரியாலயத்தில் முன் ஆர்பாட்டத்திற்காக ஆதரவாளர்களைக் கொண்டு வந்து காரியாலயத்தின் சொத்துக்களை சேதம் விளைவித்தார்.

ரணில் மற்றும் மைத்திரி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இரகசிய ஒப்பந்தம்; செய்துள்ளனர் என்ற போர்வையில் ஆர்பாட்டம் மொன்றை சிறிக்கொத்த முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜ.தே.கட்சியின் முறைப்பாட்டுக்கு அமைவாகவே இவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *