Headlines

இன்று சந்திரகிரகணம்!

சந்திரகிரகணம் இன்று பிற்பகல் 1.46க்கு ஆரம்பித்து இரவு 7.04க்கு முடிவடையவுள்ளது. எனினும் இலங்கையில் உள்ளோர் இந்த கிரகணத்தின் இறுதிப் பகுதியை மாலை 6 மணிமுதல் 6.03 மணி வரையிலான காலப்பகுதியில் மாத்திரமே பார்க்கமுடியும். எனினும் முழுமையான சந்திரகிரகணத்தை வடஅமெரிக்கா, கனடா, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய மக்களால் பார்க்க முடியும். இதேவேளை எதிர்வரும் 24ஆம் திகதியன்று சூரியகிரகணம் பிற்பகல் 1.08 இலங்கை நேரப்படி தென்படத்தொடங்கும். எனினும் இந்த சூரியக்கிரகணம் இலங்கைக்கு தென்படாது. கனடா மற்றும் அமரிக்காவுக்கே இது முழுமையாக…

Read More

சிரியாவின் 3 மாவட்டங்களை IS கைப்பற்றி தமது கொடியை பறக்க விட்டுள்ளனர்

கடந்த 3 கிழமைகளாக சிரியாவின் முக்கிய எல்லை நகரமான கொபானே இனைக் கைப்பற்றும் நோக்கில் கடும் சண்டையில் ஈடுபட்டு வரும் IS போராளிகள் வசம் கொபானே நகர் வீழ்ந்து விடும் அபாயம் உள்ளதென   துருக்கி எச்சரித்துள்ளது. மேலும் கொபானே IS வசம் வீழ்ந்து விட்டால் அது IS களுக்கு ஒரு முக்கிய வெற்றியாக கருதப் படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.  செப்டம்பர் மத்தியில் இருந்து கொபானே நகரைக் கைப்பற்ற நடந்த கடுமையான மோதல்களில் இதுவரை 412…

Read More

த.தே.கூ குதர்க்கம் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றது: டக்ளஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குதர்க்கம் பேசியும், மக்களை ஏமாற்றியும் தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்நாட்டின் தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும். இதைவிடுத்து வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஒருபோதும்…

Read More

உலக குடியிருப்பு தின தேசிய மாநாடு!

அஸ்ரப் ஏ. சமத் உலக குடியிருப்பு தின தேசிய மாநாடு (06) கொழும்பு சுகாதாச விளையாட்டு உள்ளக அரங்கில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது தேசிய வீடமைப்பின் கொள்கைப் பிரகடணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அமைச்சர் விமல் வீரவன்ச கையளித்தார். அத்துடன் உலக குடியிருப்பு தினம் பற்றி பாடசாலை மாணவர்களுக்கிடையில் மும்மொழிகளிலும் நடாத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற முதலாம் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவாஸிற்கு நிந்தவூரில் மரியாதை

சுலைமான் றாபி மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஏ.எச்.டி.நவாஸிற்கு அவரது சொந்த ஊரான நிந்தவூரில் பாராட்டி கௌரவிக்கும் “மண்ணிண் மகுடம்” எனும் கௌரவிப்பு விழா இன்று (07.10.2014) செவ்வாய்க்கிழமை பி.ப. 4.00 மணிக்கு நிந்தவூர் ஜும்ஆபள்ளிவாசல் சதுக்கத்தில் இடம்பெற்றது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.எம். அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி. ஹசன் அலி, பைசால் காசிம், மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்…

Read More

டெங்குக் காய்ச்சலால் 22 வயது முஸ்லிம் பெண் வபாத்(கம்பளை)

எம்.எம்.எம்.  ரம்ஸீன் கம்பளையில் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் முஸ்லிம் குடும்பப் பெண்னொருவர் நேற்று 07.10.2014 உயிரிழந்துள்ளார். உடுநுவர வட்டதெனியவை சேர்ந்த இவர் கம்பளை ஆண்டியாகடவத்தை பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்துள்ளார். கம்பளை போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட பாத்திமா நஸ்லூன் என்ற (22 வயது) இப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை கம்பளை பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்த நிலையில் மீண்டும்…

Read More

ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாட தயார் – ஞானசார

ஜனாதிபதி பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உறுதியாக அறிவிக்கும் பட்சத்தில், ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாட தயார் என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்புடன் கலந்துரையாட தயார் என ஐக்கிய தேசிய கட்சியினால் வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இனத்தை நோக்காக கொண்ட அரசியல் கட்சிகள் நாட்டினுள் இருப்பதன் காரணமாக, சிங்கள…

Read More

ஆர்.எஸ்.எஸ். – பொது பலசேனா; ஆகிய தீவிரவாத அமைப்புகள் பேச்சு!

இந்தியாவின் கடும்போக்கு இந்து ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து தென்னாசியாவில் பௌத்த இந்து சமாதான வலயத்தை அமைக்கும் வகையில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக பொதுபலசேனா அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் மூலம் பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கமுடியும் என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இந்தியாவில் உள்ள பௌத்த அமைப்புக்களுடனும் தமது அமைப்பு பேச்சு நடத்துவதாக தேரர் தெரிவித்துள்ளார். ராஸ்ரிய சுவாயமசேவான் சங்க் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்புடன் கூட்டணி அமைக்க தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தேரர்…

Read More

இலங்கையிலிருந்து எவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இணையவில்லை – ரிஸ்க் ஏசியா!

பொதுபலசேனாவிற்க்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பகைமை உணர்வை ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய அமைப்புகள் பயன் படுத்துவதற்க்கு அனுமதிக்ககூடாது இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுடில்லியை சேர்ந்த செக்கியுரிட்டி ரிஸ்க் ஏசியா என்ற அமைப்பை சேர்ந்த பிரிகேடியர் பொன்ஸ்லே இதனை தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவிற்க்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான பகைமை உணர்வை பயன்படுத்தி  முஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாத மயப்படுத்தப்படுவதை தடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இதனை தடுக்காவிட்டால் அது ஐ.எஸ்.ஐ.எஸ் இலங்கைக்குள் ஊருடுவ வழிவகுக்கும். பொதுபல…

Read More

A/L பரீட்சையில் சித்தியடைந்த 50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க தீர்மானம்

க. பொ. த. உயர்தரத்தில் சித்தியடைந்த 50,000 மாணவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக வேண்டியே ஆசிரிய உதவியாளர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். இதற்கான ஆகக்கூடிய வயதெல்லை 35 ஆகும். பின்தங்கிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரைக்கமைய கல்வியமைச்சர் பந்துல குணவர்தன இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்திருந்தார். வேலையில்லாப்…

Read More

இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு ராஜ்ஜிய தூதரகத்தின் புதிய வீசா நிலையம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு ராஜ்ஜிய தூதரகத்தின்   புதிய வீசா நிலையம் கொழும்பு-03, ரீட் அவனியு, இல. 112 இல் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல்.பிரீஸினால் உத்தியோக பூர்வமாக நேற்று (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தின் தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே. அல்-முல்லா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அமைச்சர்களான றவுப் ஹக்கீம், அதாவுட செனிவிரத்ன, டிலான் பெரோ, ஐக்கிய அரபு இராட்சியத்தின் (யு.ஏ.இ) வெளிநாட்டு அமைச்சின் செயலாளர்…

Read More

கல்முனையில் ஹஜ் பெருநாள் தொழுகை

எஸ்.அஷ்ரப்கான் கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் மற்றும் ஹூதா பள்ளிவாயல் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜூப் பெருநாள்;  நபி வழி திடல் தொழுகை நேற்று திங்கட் கிழமை (06) காலை 6.45 மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்றது. கல்முனையில் வழமைபோன்று பெருந்திரளான ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்ட இத்தொழுகையை மௌலவி முஹம்மட் பிர்னாஸ் நடாத்திவைத்தார்.

Read More