Headlines

வாக்குரிமை உள்ளவரா?; பரிசோதித்துப் பாருங்கள் இணையத்தில்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான  தகுதியைப் பெற்றுள்ளீர்களா என்பதை http://www.slelections.gov.lk/ID/index.aspx என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா? உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை இலகுவாக அறிந்துகொள்ள தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக அஷ்டொன் கார்ட்டெரை அறிவிக்கவுள்ள ஒபாமா

இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னால் பிரதித் தலைவரான அஷ்டொன் கார்ட்டெர் என்பவரைத் தமது புதிய பாதுகாப்புச் செயலாளராக அறிவிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி உறுதியாகும் பட்சத்தில் கடந்த மாதம் பதவி விலகியிருந்த சக் ஹாகெலின் இடத்தை இவர் நிரப்புவார் என எதிர்பார்க்கப் படுகின்றது. அஷ்டொன் கார்ட்டெர் ஏற்கனவே ஆக்டோபர் 2011 முதல் டிசம்பர் 2013 வரை லெயொன் பனெட்டாவின் கீழ் பிரதிப் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றி இருந்தார்…

Read More

இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு!

டிசம்பர் 6ம் திகதியான இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரணமாகவே பாபர் மசூதி இடிப்பு தினம் என்றால் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்புக்களும் தீவிரப்படுத்தப் பட்டிருக்கும். இப்போது ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தலில் உள்ள பிரதமராக நரேந்திர மோடி உள்ளதால், டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத வகையில் அதிகப்படுத்தப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியின் முக்கிய…

Read More

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையருக்கு மன்னிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் சாரதியாக பணியாற்றி வந்த இந்த இலங்கை பிரஜைகளின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி அந்நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை இலங்கை பிரஜையிடம் இழப்பீட்டை பெற்றுக்கு மன்னிப்பு வழங்கினார். இதனையடுத்து அவர் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். உயிரிழந்தவரின் தந்தைக்கு மூன்று லட்சம் ரியால்களை இழப்பீடாக வழங்குமாறு இலங்கை பிரஜைக்கு…

Read More

முஸ்லிம்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர் – மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசிக்கான பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், தமிழர்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை என்றும் அதேவேளை முஸ்லிம்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் கூறி, இந்த சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான பொதுவேட்பாளரின் திட்டம் என்ன…

Read More

அ.இ.ம.கா உயர்பீடக் கூட்டம் 10 மணிக்கு! ஜனாதிபதியுடனான சந்திப்பு நண்பகல் 12க்கு!!

ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்குமிடையிலான விஷேட சந்திப்பு நாளை நன்பகல் 12 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி;த் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும்  நிலையில் இது முக்கியத்துவமான சந்திப்பு என தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் இருப்பு ,கௌரவம் மற்றும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பின்போது விரிவாக ஆராயப்படவுள்ளது. ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்பதாக ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அவசர உயர்பீட கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அமைச்சர் ரிசாத்…

Read More

தண்ணீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கலாம்: விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வாயுக்கள் ஒன்று சேர்ந்து உருவானதுதான் தண்ணீர். எனவே தண்ணீரில் ஏராளமான ஹைட்ரஜன் உள்ளது. ஹைட்ரஜன் சக்தி வாய்ந்த எரிபொருள் ஆகும். ஆனால் தண்ணீரில் இருந்து அதை பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஆனால் தண்ணீரில் இருந்து எளிதாக ஹைட்ரஜனை உருவாக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் உள்ள தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த கஸ்தூரி கிங்கோரனி உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு இது சம்மந்தமாக ஆய்வு மேற்கொண்டது. அதில் தாவரங்களில் ஒளிச்சேர்க்கை…

Read More

பூமிக்கடியில் புதைந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகை: லண்டன் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு

தெற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்காத அளவில் மிகப்பெரிய மாளிகையை லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்ககோட்டைக்குள் கண்டுபிடித்துள்ளனர்.கோட்டையின் புல் தளத்திற்கு கீழே காணப்பட்ட இந்த மாளிகை 700 வருடத்துக்கும் மேலாக மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும், வலுவான இந்த மாளிகையின் உள் மற்றும் வெளித்தோற்றம் ரோமானிய அரசின் உலோகக் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும் தொல்லியல் துறையினர் கருத்து தெரிவித்தனர் பிரதேசவியல் மற்றும் புவிஇயற்பியல் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அந்த மாளிகையின் உட்புற மற்றும் வெளிப்புற முற்றங்களை தொல்லியல்துறையினர்ஆராய்ந்தனர்….

Read More

இஸ்ரேலில் மார்ச் 17-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல்

இஸ்ரேலில் வரும் மார்ச் 17-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இஸ்ரேலில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கிடையே மோதல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என்ற செய்தி வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சரவைக் கூட்டத்திலும் தனது அதிருப்தியை பிரதமர் வெளிப்படுத்தினார். இதுதவிர இரண்டு அமைச்சர்கள், பிரதமரின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்து வந்தனர். ஆட்சியில் இருந்துகொண்டே இவ்வாறு விமர்சிப்பதால் பிரதமர் கடும் அதிருப்தி அடைந்தார்….

Read More

மாதம் 2 கோடி சம்பளம் பெறும் ஏழை முஸ்லிம் தொழிலாளியின் மகன்

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் போரூர் கிராமத்தை சேர்ந்தவர் சேக் ஜமாலுதீன். இவரது மனைவி ரகீமா பேகம். இவர்களுக்கு 2 மகள்களும், நசீர்பாபா என்ற மகனும் உள்ளனர். சேக் ஜமாலுதீன் கிரானைட் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மாதம் ரூபாய் 5 ஆயிரம் தான் வருமானம் பெற்றார். குடும்பத்தை காப்பாற்ற இந்த வருமானம் பற்றாக்குறையாக இருந்ததால் மனைவி தையல் வேலையில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களது மகன் நசீர்பாபாவுக்கு படிப்பு மீது மிகுந்த ஆர்வம்…

Read More

மஹிந்தவை ஜனாதிபதியாக ஆமோதிப்பதற்கு எனக்குத்தான் முதலில் சர்ந்தப்பம் வழங்கப்பட்டது: சிரேஸ்ட அமைச்சர் பௌசி

அஸ்ரப் ஏ. சமத் ‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இம்முறை ஜனாதிபதியாக வருவதற்கு வேற்பாளராக ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி சார்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரேரித்தார். நான் அதனை ஆமோதித்தேன். அதற்காக முஸ்லீம்கள் சந்தோசப்படல் வேண்டும். நான் ஓரு முஸ்லீம். மஹிந்தவை கட்சியில் ஆமோதிப்பதற்கு எனக்குத்தான் முதலில் சர்ந்தப்பம் வழங்கப்பட்டது’ என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார். நேற்று மருதானை சங்கராஜமாவத்தையில் உள்ள தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை 850 இலட்சம் ரூபா செலவில் நவீனமயப்படுத்தி திறந்து வைக்கும்…

Read More

திருட்டுப்போன ராஜிதவின் கோப்புக்கள்

பேருவளை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளதாகத் தெரியவருகிறது. போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு திருட்டுக் கும்பல் இந்த திருட்டை மேற்கொண்டிருக்கலாம் எனவும், அவர்கள் 5 கோப்புகள், 5 குறுந்தகடுகள், ஐ.பேட் கணிப்பொறி, மடிகணணி என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த வீட்டில் ராஜித சேனரத்ன அவ்வப்போது வந்து தங்கிசெல்வதாகவும், இதனை நன்கு அவதானித்த இந்த திருட்டு கும்பல் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்நுளைந்துள்ளதாக…

Read More