Headlines

திஸ்ஸ அத்தநாயக்க மட்டுமல்ல, ரணில் விக்ரமசிங்கவே இங்கு வர தயாராகி விடுவார்!- கெஹலிய

ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. நேற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதையடுத்து அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கட்சி மற்றும் வர்ணத்தைப் பார்த்தல்ல. சாதகமானதும் நாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியதுமான பயணம் முக்கியம். இந்த நாட்டின் அரசியலில் திறமை படைத்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். மிக முக்கியமானதொன்று. திஸ்ஸ அத்த நாயக்க எனக்கு மிக நெருக்கமானவர் நாம் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்….

Read More

உயிர் இருக்கும்வரை ஐதேகவில் இருந்து விலக மாட்டேன் – சந்திராணி பண்டார

தான் உயிருடன் இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்தார். தான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகுவதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தை சிறந்த ஐதேக செயற்பாட்டாளர் என்பதால் கட்சியை விட்டு செல்லும் அவசியம் தனக்கு இல்லை என அவர் கூறினார். கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்…

Read More

சிறுவயதில் வீட்டை விட்டு வெளியேறியவர் 48 ஆண்டுக்குப்பின் திரும்பி வந்த மகனால் தாய் இன்ப அதிர்ச்சி!!

இந்தியாவில்பொன்னேரி என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் கைரூன்பீவி (84). இவருக்கு 5 மகன்கள். சொந்த ஊர் மதுராந்தகம் அடுத்த இரண்யசித்தி எனும் கிராமம். இதில், இளைய மகனான ஷேக் இஸ்மாயில், 16 வயதில் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கடந்த 48 ஆண்டுகளாக அவரை தேடி வந்தனர். ஆனால், அவரது தாய் மட்டும் மகன் கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைரூன்பீவி, தனது கணவர்…

Read More

பாதுகாப்பு அமைச்சில் முஸ்லிம் காங்கிரஸ் குழு சந்திப்பு -நீண்டகால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு

பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி, மீன்பிடி மற்றும் வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் குழுவினருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய அரசாங்க குழுவினருக்கும் இடையில் நேற்று (08) திங்கட்கிழமை பிற்பகல் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற முக்கிய பேச்சுவார்த்தையொன்றின்போது, அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக…

Read More

மலேசியாவி்ன் முன்னாள் பிரதமர் மஹதீா் முஹம்மத் இன்று இலங்கை வந்தடைந்தார்

அஸ்ரப் ஏ. சமத் மலேசியாவி்ன் முன்னாள் பிரதமரும் மலேசியாவை அபிவிருத்தியாக்கிய தலைவருமான மஹதீா் முஹம்மத் இன்று (09) இலங்கை வந்தடைந்துள்ளாா். இவா் இன்று பி.எம்.ஜ.சி.எச்.ல் வைத்து இலங்கை அபிவிருத்தி பற்றி உரையாடுவாா். அத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் புதிய நகரம், கட்டுநாயக்க பொருளாதார ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்து வைப்பாா். இக்காலகட்டத்தில் வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அழைப்புவிடுத்திருந்தாா். இவரது சகல ஏற்பாடுகளையும் நாமல் ராஜபக்ச செய்துள்ளாா். மேற்படி திட்டங்களுக்கு மலேசியா தனியாா் கம்பணிகள் முதலிடுகின்றன. அத்துடன்…

Read More

முஸ்லிம்களை கௌரவித்த ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செலயாளராக கடமையாற்றி வந்த திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளார். இந்த வெற்றிடத்திற்காக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக அக்கட்சியின் செயலாளர் பதவிக்கு ஒரு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுகின்றமை இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

வெட்கித் தலை குணிய நேரிட்டுள்ளது – சரத் பொன்சேகா

பணத்திற்காக கட்சி தாவுவோரின் நடவடிக்கைகளினால் வெட்கித் தலை குணிய நேரிட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்றைய தினம் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார். இது குறித்து இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சரத்பொன்சேகா கருத்து வெளிடியிட்டிருந்தார். பண ஆசை காரணமாக கட்சியின் சில உறுப்பினர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கட்சித் தலைவர்கள் என்ற ரீதியில் எம்மை வெட்கப்பட வகையில் அமைந்துள்ளது என அவர்…

Read More

மக்களுக்கு இடையிலான போராட்டமே இந்த தேர்தலாகும் – மைத்திரிபால

அகிம்சாவாத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். 08-12-2014 பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது. ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக நாம் எமது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடுகின்றோம். அரச ஊடகங்கள் தேர்தல் ஒன்றின் போது நடுநிலையாக செயற்பட வேண்டும். அந்த நிலைமையை மீறிய சந்தர்ப்பத்தையும் தேர்தல் சட்டத்தை மீறிய…

Read More

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் 4,279 நிலையங்களில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தமுறை சாதாரண தரப் பரீட்சையில் 370,739 பாடசாலை பரீட்சார்த்திகளும், 206,481 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர் இதேவேளை, பரீட்சை நிலையங்கள் மற்றும் இணைப்பு நிலையங்களுக்குள் அனுமதியற்ற எவரும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஒலிபெருக்கிகள்…

Read More

சர்வதேச மனித உரிமைகள் தினம்

பழுலுல்லாஹ் பர்ஹான் மார்கழி பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இவ்வாண்டின் கருப்பொருளாக ‘மனித உரிமைகள்-365′ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருடத்தில் சகல நாட்களும் மனித உரிமைகள்தான். ஒரு நாட்டில் அனைவர்களுக்கும் சமமான உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். மனித உரிமைகள் அரசாங்கங்கள் விரும்பியவாறு வழங்கும் கொடைகள் அல்ல. அரசாங்கங்கள் அவற்றை மறுக்கவோ ஒரு சிலர் விடயத்தில் பிரயோகித்து ஏனையோருக்கு மறுக்கவோ முடியாது. அவ்வாறு செய்தால் அதற்கு பொறுப்புக் கூறுதல் வேண்டும்….

Read More

மைத்திரி வேட்புமனுவை கையளித்தார்

பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை கையளித்துள்ளார். இாஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு இன்று காலை சென்ற இவர் தனது வேட்புமனுவை தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்தார். -Tamilmirror-

Read More

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறி விட்ட அ ரசாங்கம் – ராஜித

நாட்டில் மத சுதந்திரத்தை ஏற்படுத்தி புதிய கலாசார யுகமொன்றை உருவாக்கவே மஹிந்த ராஜபக்ஷ மீதான நட்பினை மறந்து கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அரசிலிருந்து வெளியேறினோம். எமக்கு நட்பை விடவும் கொள்கையே முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். யுத்தம் நிறைவடைந்து பின்பு நாட்டில் மத நல்லிணக்கத்தை இந்த அரசு ஏற்படுத்தவில்லை. ஆகவே, ஜனவரி 9 ஆம் திகதி இலட்சக்கான விருப்பு வாக்கு வித்தியாசத்தில் பொது வேட்பாளர் வெற்றி பெறுவார். குறித்த…

Read More