திஸ்ஸ அத்தநாயக்க மட்டுமல்ல, ரணில் விக்ரமசிங்கவே இங்கு வர தயாராகி விடுவார்!- கெஹலிய
ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. நேற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதையடுத்து அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கட்சி மற்றும் வர்ணத்தைப் பார்த்தல்ல. சாதகமானதும் நாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியதுமான பயணம் முக்கியம். இந்த நாட்டின் அரசியலில் திறமை படைத்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். மிக முக்கியமானதொன்று. திஸ்ஸ அத்த நாயக்க எனக்கு மிக நெருக்கமானவர் நாம் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்….
