Headlines

நாட்டைப் பாதுகாப்பதற்காகவே பொது எதிரணியாக ஒன்றிணைந்துள்ளோம்: சோபித தேரர்

நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகவே பொது எதிரணியாக எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்துள்ளதாக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும், கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டில் பயங்கரவாதத்தினை வளர்க்கவோ, இனவாதத்தினை தூண்டவோ சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கவில்லை. அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தினை மாற்றியமைக்கவே நாம் கைகோர்த்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பொது எதிரணி தனி நிபந்தனைகளுடன் உடன்படிக்கை செய்துள்ளதாக பொது பல சேனா…

Read More

5 இந்திய மீனவர்கள் விடுதலை

போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் 2011ம் ஆண்டில் இலங்கைக்கு போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , கொழும்பு உயர்நீதிமன்றத்தால், அக்டோபர் 30ந்தேதியன்று மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் மேல்முறையீட்டுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று…

Read More

அடையாளத்தை இழக்க கூடாது – பொதுபல சேனா

ஐக்கிய தேசியகட்சி தமது அடையாளத்தை இழக்கக்கூடாது என்று பொதுபலசேனா தெரிவித்துள்ளது கொழும்பு செய்தியாளர் சந்திப்பின்போது இன்று கருத்துரைத்த பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு தலைவரை உறுதிப்பட தெரிவுசெய்யவேண்டும். இதனை விடுத்து பல்வேறுப்பட்ட இடங்களில் பணியாற்றிய பலர் இன்று பொதுவேட்பாளர் பதவிக்காக தடுமாறுகின்றனர் எனவே நாட்டில் கொள்கை ரீதியாக செயற்படக்கூடியவர் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக முன்வரவேண்டும் என்று கோருவதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஜனாஸா: காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) வபாத்

கட்டாரில் இருந்து பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) காத்தான்குடி-1ம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) (வயது 55) நேற்று புதன்கிழமை காத்தான்குடியில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். ஒரு ஜனாஸா தொழுகைக்காக அவர் சென்ற போதே இம்மரணம் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய இவர், கட்டார் கொழும்பு ரெஸ்டுரண்டில் பல வருடங்களாக பணிபுரிந்தது மட்டுமல்லாமல் பல்வேரு சமூக சேவைகளில் ஈடுபட்டும் வந்துள்ளார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி இதுவரை எவ்வித…

Read More

கூடவிருந்து கொல்லும் நீரிழிவு நோய்

டாக்டர். ILM. றிபாஸ் MBBS, MSc, MD (Reading at PGIM Colombo): நவம்பர் மாதம்  நீரிழிவு நோய்க்குரிய மாதமாக அந்த நோய் பற்றிய விளிப்புனர்வுக்குரிய மாதமாக உலகில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 14 ம் திகதியை  உலக நீரிழிவு வியாதிக்கான தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உலக நாடுகளின் சுகாதார திணைக்களங்களும் வைத்திய துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் இந்த தினத்தில்  நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வினை தூண்டி வருவதுடன் இவ்வியாதியினை கட்டுப்படுத்துவதற்கான  பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு…

Read More

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு, இன்று பிற்பகல்

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு, இன்று வியாழக்கிழமை (20) பிற்பகலில் உள்ள நல்ல நேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், நேற்று இரவு இடம்பெற்ற போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவே போட்டியிடுவதற்கான கட்சியின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதிக்கு ஆதரவில்லை சனி மாற்றமும் நல்லதுக்கில்லை

ஜனாதிபதித் தேர்தலில் அரச தரப்புக்கு ஆதரவ ளிக்கப்போவதில்லை என்றும், மஹிந்த ராஜபக்­வின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளர் அத்துரெலிய ரத்தன தேரர் கூறினார். தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். “அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசுக்கு தெளிவானதொரு பதில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் அரசமைப்பு மாற்றப்பட வேண்டும். நிறைவேற்று ஜனாதி பதி முறைமையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்….

Read More

பூனைக்கு மணி கட்டிவிட்டோம் எலிகள் விழிப்பாக இருந்தால் சரி

“பூனையிடம் இருந்து தப்பிப்பதற்கு அதன் கழுத்தில் மணிகட்டுவதே சிறந்த வழியயன எலிகள் முடிவெடுத்தன. இதன்படி, மணியைக் கட்டுவதற்கு அவை தயாராகின. இந்த திட்டத்துக்கு அமைய ஒரு எலி பூனையில் கழுத்தில் மணி கட்டியது. ஆனால், பூனை ” மீயா’ என்றதும் ஏனைய எலிகள் ஓடிவிட்டன. இந்நிலைமையே இன்று ஹெல உறுமயவுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், நாம் பின்வாங்கமாட்டோம். கொள்கைத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக போராடுவோம். வெளியில் இருந்தாவது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு தெரிவித்தார் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிப்…

Read More

இனி எம்மை கொலைகாரர் என்பார்கள்; எதற்கும் தயங்கோம்

ஹெல உறுமய உறுப்பினர்களுக்கு எதிராக இனி பல கோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் படலாம். கொலைகாரர்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும்கூட குறிப்பிடலாம். ஆனால், நாம் ஒருபோதும் வளைந்து கொடுக்க மாட்டோம்.பிரபாகரனுக்கே அடி பணியாத நாம் இவ்வாறான அழுத்தங்களைக்கண்டு அஞ்சப்போவதில்லை . சிங்கள மக்களுக்காக நாம்தான் குரல் எழுப்பிவரு கின்றோம். மாவிலாறு முதல் அளுத்கமவரை எமது குரல் ஓங்கி ஒலித்தது. இன்று இந்த அரசிலுள்ள சிலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அதிகாரிகள் சிலர் தான்தோன்றித்தனமாகச் செயற் படுகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை…

Read More

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகிறது

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை ஒழுங்குப்படுத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். உயர் தரப் பரீட்சையில் 2,34,197 பாடசாலை பரீட்சார்த்திகளும், 62,134 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

அவசரமாகக் கூடும் அமைச்சரவை!

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று நள்ளிரவு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகக்…

Read More

உதய கமன்பிலவின் டுவிட்…….!

ஹெல உறுமயவின் மேல்மாகாண சபை உறுப்பினர் உதயகமன்பில  தனது ராஜினாமா கடிதத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். தனது ராஜினாமாவை ஊடகங்களுக்கு அறிவித்த கமன்பில அக் கடிதத்தை டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.ன்றமை குறிப்பிடத்தக்கது.

Read More