Headlines

சர்வதேச விசாரணை நிறைவு- இலங்கை மீது அழுத்தங்கள் அதிகரிக்குமா?

இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா விசாரணைக் குழு, எழுத்துமூல சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்துள்ளதாக சட்டத்தரணி கலாநிதி பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் முக்கியத்துவம் வாய்ந்த, பொதுமக்களின் சாட்சியங்களை பெற்றுக்கொள்ள பல்வேறு அமைப்புக்கள் உதவி புரிந்துள்ளதால், இந்த விடயத்தில் அதிகளவிலான அழுத்தங்கள் நாட்டிற்கு ஏற்படக்கூடும். எழுத்துமூல மற்றும் வாய்மூல சாட்சியங்கள் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, பெப்ரவரி மாத இறுதியில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் மனித உரிமைகள் பேரவை இறுதித்…

Read More

மீனவர்களே அவதானம்: அனர்த்த முகாமைத்துவம் அறிவுறுத்தல்

யாழ்.மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் கூடிய காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால் மீனவர்கள் அவதானமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை மீனவர் சமாசங்கள் ஊடாக விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மரண தண்டனை கைதிகள் பரிமாற்றம் – இன்று விசாரணை

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு அழைக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்த மனு நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி எஸ் எம் ஆனந்த முருகன் தாக்கல் செய்த இந்த மனுவில் இரண்டு நாடுகளும் செய்து கொண்டுள்ள கைதி பரிமாற்ற உடன்படிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த ஐந்து மீனவர்களும் இந்தியாவின் கரையில் இருந்து 12 கிலோ மீற்றருக்குள்…

Read More

பிரான்ஸ் நிறுவனம் கண்டுபிடித்த டெங்கு மருந்து வெற்றி!

பிரான்ஸில் உள்ள மருந்து நிறுவனம் கண்டுபிடித்த டெங்கு காய்ச்சலுக்கான மருந்து வெற்றியடைந்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு எந்தவித மருந்துமின்றி உயிரிழப்பு அதிகம் நேர்ந்து கொண்டிருக்கிறது.  இந்நிலையில்தான் உலகம் முழுக்க கொசுக்களால் உண்டாகும் டெங்கு காய்ச்சலுக்கு ஃபிரான்ஸ் மருந்து நிறுவனம் ஒன்று டெங்கு மருந்து கண்டுப்பிடித்து உள்ளது. இந்த நிறுவனம் கண்டுப்பிடித்த மருந்து சக்சஸ் ஆகியதைத் தொடர்ந்து 18 வயது முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்துப் பார்த்ததில் அவர்கள்…

Read More

கிழக்கு உக்ரைனில் சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் ரஷ்ய ஆதரவாளர் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை கிழக்கு உக்ரைனின் சர்ச்சைக்குரிய டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நகரங்களில் பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கிளர்ச்சியாளர்களால் நடத்தப் பட்ட தேர்தலில் ரஷ்ய ஆதரவாளரும் அவர்களால் நியமிக்கப் பட்ட தற்போதைய பிரதமருமான அலெக்ஸாண்டர் ஜகார்சென்கோ வெற்றி பெற்றிருப்பதாகத் சுயமாகத் தன்னை டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு எனப் பிரகடனப் படுத்தியிருக்கும் பகுதியின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்ய ஆதரவாளர்களால் சுயமாக லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு எனப் பிரகடனப் படுத்தப் பட்டிருக்கும் பிரதேசத்தின் மத்திய தேர்தல் கமிசனின்…

Read More

ISIS இற்கு எதிரான யுத்தத்தில் சிங்கப்பூர்!

திங்கட்கிழமை சிங்கப்பூர் அரசு ஈராக் மற்றும் சிரியாவில் ISIS இற்கு எதிரான போரில் தனது பங்களிப்பையும் நல்கப் போவதாக அறிவித்துள்ளது.ஏற்கனவே ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முக்கிய சில நாடுகளும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு அரபு தேசங்களும் ISIS மீது வான் தாக்குதல்களைத் தீவிரப் படுத்தி வருகின்றன. தரை வழியாக ஈராக்கின் குர்து பேஷ்மெர்கா படையும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இந்நிலையில் மத்திய கிழக்கில் ISIS உடன் போராடி வரும் சர்வதேச கூட்டணி நாடுகளுக்கு ஆலோசகர்கள் அளித்தல்…

Read More

தேர்தல் என்றாலும் பாப்பரசர் இலங்கை வருவார்: திருகோணமலை ஆயர்

வத்திக்கானில் இருந்து பாப்பரசரின் விஜயம் தொடர்பில் வந்துள்ள குழுவினருக்கும், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கை படைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பின்போது தேர்தல் ஒன்று தொடர்பில் பேசப்படவில்லை, ஏனெனில் தேர்தல் திகதி ஒன்று இன்னும் அறிவிக்கப்படாமையாலாகும். இந்தநிலையில் பாப்பரசர் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடைபெறுமானால் நாடு இயல்புக்கு திரும்ப அந்த நாட்கள் போதுமானதாக இருக்கும்…

Read More

கப்பல் மூழ்கியதில் 24 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பலொன்று மூழ்கியதால்  குறைந்தபட்சம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் கரையோரத்துக்கு அப்பாலான கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை  இக்கப்பல் மூழ்கியுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படைக் கப்பல்களின் உதவியுடன் சுழியோடிகள் 06 பேரை காப்பாற்றியுள்ளனர். இதன்போது, எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தொடர்பில் தெரியவரவில்லை. இக்கப்பலில் சுமார் 40 பேர் இருந்துள்ளதுடன், இவர்களில் அதிகளவான சிறுவர்கள் இருந்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது

Read More

3 வயது தங்கையை சுட்டதற்காக மன்னிப்பு கேட்ட 4 வயது சிறுவன்

ஓகியோவில் உள்ள லோரைன் பகுதியில் 4 வயது சிறுவன் தனது 3 வயது தங்கையை துப்பாக்கியால் தலையில் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளீவ்லாந்தில் இருந்து 48 கி.மீ மேற்கில் உள்ள லோரைன் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் 4 வயது சிறுவனும் அவரது 3 வயது தங்கையும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது. தன்னிடம் இருந்த .40 கேலிபர் கைத்துப்பாக்கியை கொண்டு தங்கையை விளையாட்டாக மிரட்டிய சிறுவன் எதிர்பாராத விதமாக சிறுமியின்…

Read More

110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி, வபாத்தான அப்துல் ரஹ்மான்

மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் 110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான் என்பவர் பஸ் சாரதியாக பணியாற்றி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பஸ் சுமார் 110 பயணிகளுடன் நேற்று காலை உதகமண்டலம் நோக்கி மலைப்பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. பஸ்ஸினை அப்துல் ரஹ்மானே செலுத்தியுள்ளார். ஊட்டியை…

Read More

”அலுத்கம சம்பவம் ஒரு நல்ல பாடம் ” பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரான்கீன், கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் மத ஐக்கியம் மற்றும் இலங்கையின் ஏனைய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் மத நல்லிணக்கம் அவசியமானது என்ற பிரித்தானிய  அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளும் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அலுத்கமவில் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்தை…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளா் யார்? (சிறப்பு நேர்காணல்)

(நேர்காணல் – எம்.ரீ.எம்.பாரிஸ்) ஓட்டமாவடி பிரதேச சபையின்  43வது சபை அமர்வு கடந்த ஓக்டோபர் 30.2014ந்திகதி நடை பெற இருத்த நிலையில் சபை உறுப்பினர்களால் பகிஷ்கரிக்கப்பட்டது இது தொடர்பிலும் அடுத்த தவிசாளர் யார்? என்ற கேள்விக்கு பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் இவ்வாறு ஊடகங்களுக்கு பதில் அளித்தார் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்கள் மீது பிரதேச சபை உறுப்பினர்களால் பல்வேறு  குற்றங்கள் சுமர்தப்பட்ட இந்நிலையில் தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரோரனையினை கொண்டு வருவதன் மூலம் தவிசாளரை மாற்றி புதிய தவிசாளர்…

Read More