Headlines

பொது வேட்பாளர் யார்? விசேட அறிவிப்பு இன்று

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக களமிறங் கப்போகும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பான விசேட அறிவிப்பு இன்று விடுக்கப் படவுள்ளது. இதற்காக எதிர்க் கட்சிகள் மற்றும் சிவில் அமைப் புக்களின் முக்கிய புள்ளிகள் இன்று காலை தலைநகரில் சங் கமமாகவுள்ளனர். பல மாத காலமாக இழுபறியையும் – சர்ச்சையையும் ஏற்படுத்திவந்த பொது வேட்பாளர் விவகாரத் துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது. பிட்டகோட்டையிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறும் விசேட…

Read More

அமெரிக்கவின் தாக்குதலில் ஐ.எஸ்.தலைவர் காயம்

அமெரிக்க குண்டு வீச்சில் ஐ.எஸ். தலைவர் பக்தாதி காயம் அடைந்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை உள்ளடக்கி புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ உருவாக்கியுள்ளனர். அவர்களை அழிக்க அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஈராக்கில் மேற்கு இன்பர் மாகாணத்தில் குயாயிம் நகரில் ஐ.எஸ். தலைவர் அபுபகர் அல்–பக்தாதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட்டம் நடந்தது. அப்போது அவர்கள் கூடியிருந்த கட்டிடத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசின….

Read More

மகிந்தவின் கேள்விக்கு நீதிமன்றம் இன்று பதில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று தெரியவரும். மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா? மற்றும் இரண்டாம் தவணைக்காகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளில் போட்டியிட முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான பத்து பேர் அடங்கிய நீதியரசர்கள் குழு இது குறித்து…

Read More

மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்றவும் – மகிந்த

இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளதாகஇ பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர், அவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு, இலங்கை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,…

Read More

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆளும் கட்சி அமைச்சரா?

எதிர்க்கட்சிகளின் சில கட்சிகள் இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. ஆளும் கட்சியின் மிக முக்கியமான அமைச்சுப் பதவியை வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான இவர், ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் குறத்து அதிருப்தியடைந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு நெருக்கமானவர்கள் பலரும் இவரை பொது வேட்பாளராக நியமிக்க ஆதரவினை வெளியிட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக போட்டியிடாது இந்த அமைச்சர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளில் பல ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சிக்குள்…

Read More

மங்கள வீட்டுக்குச் சென்ற மஹிந்த- நாமல்

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, சிங்கபூருக்கு பயணிப்பதற்கு முன்னர், அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், கொழும்பிலுள்ள மங்களவின் வீட்டில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இது மங்களவை ஆளும் கட்சிக்குள் இழுப்பதற்கான பேச்சாக…

Read More

யாழில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பொன்னாலை சந்திக்கு அண்மித்த கடற்கரையை அண்டிய காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருக்கின்றமை நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது என்று வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர். மேற்படி சடலத்தை கண்ணுற்ற பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தந்தமைக்கமைய சடலத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் கூறினர். சடலம் அவ்விடத்திலேயே இருப்பதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மல்லாகம் மாவட்ட நீதவானுடன் சென்று சடலத்தை மீட்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சில வாரங்களுக்கு முன்னர் இறந்த ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என…

Read More

உலகின் முதல் `செல்பி’

`செல்பி’ புகைப்படம் 175 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகியுள்ளது. தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்ளும் ‘செல்பி’ முறை தற்போது பிரபலமாகி விட்டது. தொலைபேசி- கமெரா மூலம் அவரவர் தங்களை பலவித கோணத்தில் புடகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்த ‘செல்பி’ புகைப்படம் எடுக்கும் முறை கடந்த 175 ஆண்டுக்கு முன்பே அறிமுகமாகி விட்டது. அமெரிக்காவின் பிலாடெல்பியர் நகரில் ராபர்ட் கார்னெலியஸ் என்பவர் கடந்த 1839ஆம் ஆண்டில் முதல் ‘செல்பி’ புகைப்படத்தை எடுத்துள்ளார். இவர் தனது தந்தையின் கடையை…

Read More

மங்கள இணைந்தால் அமைச்சரவை மாற்றம்?

சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது விஜயத்தை முடித்து கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர், நாடு திரும்பியதன் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்டாராயின் அமைச்சரவையில் இன்று அல்லது நாளை திங்கட்கிழமை மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவருகின்றது. மங்கள சமரவீர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுக அமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம்…

Read More

வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு விஜயம் (படங்கள் இணைப்பு)

ஏ.எச்.எம். பூமுதீன் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு நேற்று (08/11/2014) விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் இவ் வைத்தியாசலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் சிற்றூளியர்களுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றிலும் பங்குபற்றினார். அத்துடன் இவர்களின் தேவைகள் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்ட ரிப்கான் பதியுதீன் அவற்றினை மிக விரைவில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி வழங்கினார்.

Read More

அ.இ.ம.கா. வின் பிரான்ஸ் கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு (படங்கள் இணைப்பு)

ஏ.எச்.எம். பூமுதீன் ஐரோப்பிய நாடான பிரான்ஸில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரான்ஸ் கிளைத்தலைவராக இஸ்ஸத் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அ.இ.ம.கா வின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் முன்னிலையில் இத் தெரிவு இடம்பெற்றது. அதே நேரம் பிரான்ஸ் கிளையின் செயலாளராக ரமழானும் பொருளாளராக ஜவாமித்தும் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவர்களாக லாஹீர், சுயீர் மற்றும் முகம்மட் ஆகியோர் தெரிவு செய்யப்ட்டனர்….

Read More

இலங்கை எப்படி ஆளப்படவேண்டும் என்பதை எந்தவொரு கட்சியாலும் நிர்ணயம் செய்ய முடியாது

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்ட இன்றைய ஆட்சியாளர்களால் எப்படிப்பட்ட மாற்றத்தையும் கொண்டுவந்து விடமுடியாது. தேர்தல் என்பது ஒரு நாடகம்.முதலாளித்துவத்தையும் தாராளமயமாக்கலையும் நிராகரித்துவிட்டு எந்தவொரு ஆட்சியாளராலும் இன்று அரசியல் கட்சி நடத்தமுடியாது என்பதை வைத்தே இதனைப் புரிந்துகொண்டு விடமுடியும். எந்தவொரு அடிப்படை மாற்றத்தையும் தேர்தல்கள் மூலம் கொண்டுவந்துவிடமுடியாது என்பதை நாம் உணரத்தான் வேண்டும். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி தொடங்கி சமீபத்தில் அரபுலக நாடுகளில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் வரை அனைத்துமே ஜனநாயகத்தை…

Read More