Headlines

பிரதமர் ஆத்திரம் – பாராளுமன்றத்திலிருந்தும் வெளிநடப்பு!

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு பேர­வை­யி­னரால் இலங்­கைக்கு எதி­ராக விசா­ர­ணை­களை மேற் கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட சர்­வ­தேச விசா­ரணைக் குழுவை எதிர்த்து ஆளுந் தரப்­பி­னரால் பாரா­ளு­மன்­றத்தின் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை மீதான விவா­தத்தில் தமது உரையை நிகழ்த்தப் போவ­தில்லை என்று தனது எதிர்ப்பை சபையில் வெளி­யிட்ட பிர­த மர் டி.எம். ஜய­ரத்ன தனது ஆச­னத்­தி­லி­ருந்து வெளி­யேறிச் சென்றார். விவா­தத்தில் தமக்­கு­ரிய நேர­மா­னது தலைமை ஆச­னத்தால் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவுக்கு வழங்­கப்­பட்டு விட்­ட­தாக ஆத்­தி­ர­ம­டைந்தே பிர­தமர் ஜய­ரத்ன இவ்வாறு சபையை விட்டு…

Read More

பல்டி அடித்தால் 50 மில்லியன் – முழு குடும்பத்திற்கும் ஐரோப்பாவில் பிரஜாவுரிமை

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளும் கட்சிக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பில் 11-11-2014 நேற்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார். இதன்முதல் கட்டமாக தம்மை 50 மில்லியன் ரூபாய்களுக்கு விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்தாக மேல் மாகாண சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் நடிகருமான நளின் பிரதீப் உடவல குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் தமது முழுக்குடும்பத்துக்கும் கனேடிய, அவுஸ்திரேலிய அல்லது நெதர்லாந்து பிரஜாவுரிமையை பெற்றுக்…

Read More

மஹிந்த மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிட முடியும்

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுவது உறுதியாகியுள்ளது. தேர்தலுக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஒவ்வொரு மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர்களுக்கும் தேர்தல் திணைக்களத்தினால் நேற்று அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அனேகமாக ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கு முன்பாக தேர்தல் இடம்பெறலாம் என…

Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு (photos)

ஏ.எச்.எம்.பூமுதீன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.

Read More

தமது கொள்கைகளை மக்களுக்கு திணிக்கும் அதிகாரிகளாக அரச உத்தியோகத்தர்கள் இருக்கக் கூடாது – அமைச்சர் றிஷாத்

முகம்மட் ரிபாக் தமது கொள்கைகளை மக்களுக்கு திணிக்கும் அதிகாரிகளாக அரச உத்தியோகத்தர்கள் இருக்கக் கூடாது. மாறாக அரசின்,  கொள்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான ரிசாத் பதியுதீன், கடந்த ஐந்து வருடங்களில் முல்லைத்தீவு மாவட்டம் பாரிய அபிவிருத்தி அடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பணிபுரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு மானிய விலையில் மோட்டர் சைக்கில் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்;கிழமை இடம்பெற்ற போது…

Read More

வாகன விபத்தில் 50 பேர் பலி

பாகிஸ்தானில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில்  50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைர்பூர் நகருக்கு அருகில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று  எதிரே வந்த டிரக் வண்டியொன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த விபத்தில் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மாலகவிற்கு இன்றும் பிணை மறுப்பு

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமையும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம் சஹாப்தீன், அதுதொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆராய்ந்து பார்ப்பதாக தெரிவித்தார். அண்மையில் கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் ஸ்கொட்லாந்து பிரஜைகளை மாலக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

மகிந்தவிற்கு முடியுமா? முடியாதா? : நீதிமன்றம் கூறிய பதில் விரைவில் வெளியாகும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, உச்ச நீதிமன்றினால் அளிக்கப்பட்ட சட்ட விளக்கம் அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? பதவிப் பிரமாணம் செய்து நான்கு ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு சட்ட விளக்கம் அளிக்கமாறு ஜனாதிபதி உச்ச நீதிமன்றிடம் கோரியிருந்தார். உச்ச நீதிமன்றம் நேற்று நள்ளிரவு இந்த சட்ட விளக்க அறிக்கையை அலரி மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ள…

Read More

மோடி – மகிந்தவுடன் பேசியது உண்மையா? ஜவாஹிருல்லா

கொழும்பு நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, தமிழக மீனவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை மீட்க தமிழக அரசு செலவு செய்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேசியதாகவும், 5 மீனவர்கள் விரைவில் இந்தியா திரும்ப உள்ளனர் எனவும், எந்த பொறுப்பும் இல்லாத சுப்பிரமணியசுவாமி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளதாக இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-…

Read More

மூன்றாவது தடவையும் போட்டியிட முடியுமா? உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பிவைப்பு

18வது அரசியலமைப்பு திருத்தத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி அபேட்சகராக போட்டியிட முடியுமா? இரண்டாவது பதவிக் காலத்தில் நான்கு வருடத்தின் பின் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியுமா? போன்ற விவகாரங்கள் தொடர்பில் நேற்று உச்ச நீதிமன்றம் தமது முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது. அரசியலமைப்பின் 129 (1) சரத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டதற்கமைய பத்துப் பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் அவ்விவகாரம் கவனத்திற்கெடுத்துக்கொள்ளப் பட்டதற்கிணங்க அதன்…

Read More

மங்களவும் பொன்சேகாவும் சிங்கப்பூரில் பேசியது என்ன?

அஸ்ரப் ஏ சமத் சரத்பொண்சேகா மங்கள சமரவீரவுக்கு அரசில் சேரவேண்டாம் என ஆலோசனை வழங்கியதாக நேற்று அனைத்து எதிர்க்கட்சிககளின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அதே வைத்தியசாலையில் மங்கள சமரவீரவும் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு நாளை நாடு திரும்புகின்றார். நாடு திரும்பியதும் அரசில் சேருவதாக மங்கள சமரவீர தெரியப்படுத்தியிருந்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையே சரத்பொன்சேகா நாடு திரும்புகின்றார். அது மட்டும் நாம் ஒன்று சேர்ந்து பேசுவோம் அவசரப்பட்டு அரசில் சேர வேண்டாம். எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்….

Read More

மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்..?

மெரிக்க நாடு உருவானதிலிருந்து அது பீதிவயப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் உலகின் பல பாகங்களிலிருந்தும் அமெரிக்காவில் புகுந்த மக்கள் ஐரோப்பியர்கள் அங்குள்ள செவ்விந்தியர்களைப் படுகொலை செய்தார்கள். அந்த மக்களைக் கடுமையான வேலைகளுக்கு உட்படுத்தினார்கள். குறைந்த அளவே கூலி கொடுத்தார்கள். அந்த மக்களைச் சுரண்டி, சுட்டுக் கொன்று அச்சுறுத்தித்தான் அங்கே தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினார்கள். தங்கள் ஆதிக்கத்தை அங்கே நிலைநாட்டினாலும் ஒரு பெரும் பீதியுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காரணம் அந்த அமெரிக்காவின் பூர்வகுடி மக்கள் எப்போதும்…

Read More