Headlines

முஸ்லிம் கூட்டமைப்பின் வெற்றிதான் இந்த சமுகத்தின் வெற்றி 20இலட்ச முஸ்லிம்களின் வெற்றி – ரிசாத் பதியுதீன் ஆவேசம்

பொதுபலசேனாவையும் ஞானசாரரையும் அடக்கி ஒடுக்காததன் விளைவுதான் இந்த பதுளை மாவட்ட முஸ்லிம்களின் ஒற்றுமை என்பதை அரசுக்கு உணர்த்துவதென்றால் இத்தேர்தலில் பதுளை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு  முஸ்லிம் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் பதுளை நகரில் சூடு வைத்துள்ளார். அமைச்சர் ரிசாத் பதியுதீனும் அமைச்சர் ரவூப் ஹக்கீமும்; ஒரு மேடை ஏறிய தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் பதுளை நகரில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிசாத்…

Read More

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.றோட்டறிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள சைக்கிளோட்டம், வீதி விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் கிளிநொச்சி,  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.இதன்படி இந் நிகழ்வுகள் இன்று கிளிநொச்சி பொதுச் சந்தையிலும், யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையம் முன்பாக நாளையும், முல்லைத்தீவு பேருந்து நிலையம் முன்பாக நாளை மறுதினமும் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.இந் நிகழ்வுக்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதுடன் பிரசார நடவடிக்கைகளில் பங்கேற்று தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும்…

Read More

நீதிமன்றுக்கு துப்பாக்கியுடன் நுழைவு

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிக்கு அனுமதிப் பத்தரம் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் சந்தேகநபர் ஏன் துப்பாக்கியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது தொடர்பில் வாழைத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை அண்மையில் ஹல்ஸ்டப் நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு இருவர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

உயிருடன் புதைக்கப்பட்ட 7 வயது சிறுமி மீட்பு

உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட, 7 வயது சிறுமியை, ஒருவர் மீட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் இந்தியாவின், உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியையே குறித்த நபர் மீட்டுள்ளார். கரும்பு தோட்டத்திற்குள் சிறுமி ஒருவரின் அழுகுரல் கேட்டதாகவும், இதனையடுத்து விரைந்து செயற்பட்டு உயிருடன் புதைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். விசாரணையில், சிறுமியின் பெயர், தனு என்பது தெரிய வந்துள்ளது, சில…

Read More

அளுத்கமவில் முறுகல் நிலை 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது

பிக்குகளின் வற்புறுத்தலை அடுத்து தர்ஹா நகர், வெல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் இளைஞர் களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்தே இவர்கள் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ள னர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்ட போட்டியயான்றில் கலந்து கொண்டுவிட்டு தமது பிரதேசத்தை நோக்கி வந்துள்ளனர். இவர்களுடன் அண்மையில் அளுத்கமவில் நடந்த கலவரத்தில் காலை இழந்த அஸ்கர் என்பவரும் இருந்துள்ளார்….

Read More

அமைச்சர்கள் றிசாத் பதீயுதீன், றவுப் ஹக்கீம் ஒரே மேடையில்; மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

பதுளை மாவட்டத்தில் இரட்டை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லீம் காங்கிரஸ், அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் றிசாத் பதீயுதீன்,  றவுப் ஹக்கீம் ஒரே மேடையில் உரையாற்றினார்கள். இப் பிரச்சாரக்கூட்டத்திற்கு பல பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

வறட்சி, வெள்ளப் பெருக்கினை நிறுத்த அரசாங்கத்தினால் முடியாது: நாமல் ராஜபக்ச

மழை, வெள்ளம் ஏற்படும் போது மழையை நிறுத்தவும் வறட்சிக் காலத்தில் வெயிலை நிறுத்தவும் அரசாங்கத்தினால் முடியாது. எனினும், மக்கள் வாழ்க்கையை எடுத்துச் செல்ல நிவாரணங்கள் வழங்க முடியும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மக்கள் நம்ப வேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டில் நிலவி வரும் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்கப்படும். நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முயற்சி எடுக்கப்படும். தொடர்ச்சியாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரம் கனேவல்பொலவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு…

Read More

மக்களின் வாழும் உரிமையை ஜனாதிபதியே உறுதி செய்தார்!– பசில் ராஜபக்ச

நாட்டின் அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழக் கூடிய பின்னணியை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தியது. நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்பாக மாறியுள்ளது. வெளிநாட்டு சக்திகளிடமிருந்தும், உள்நாட்டு சதிகாரர்களிடமிருந்தும் நாட்டை காக்க வேண்டியது அவசியமானது. ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வரும் உலக நாடுகளில் இலங்கையின் சுதந்திரக் கட்சி முக்கிய இடத்தை வகித்து வருவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து தின்ற 5 பேர் பலி

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். அங்குள்ள நார்த் கிராஸ் மாநிலத்தின் ஓடரேக்கோ- உச்சென்யிம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம், நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தது. பக்கத்து வீட்டு கோழிகள் இடும் முட்டையை தினந்தோறும் உடைத்து குடிக்கும் பழக்கம் கொண்ட அந்த நாயின் தொல்லை தாங்க முடியாத கோழிகளின் உரிமையாளர் முட்டைகளில் விஷம் வைத்து அந்த நாயை கொல்ல முயன்றுள்ளார். விஷம் கலந்த முட்டைகளை சாப்பிட்ட நாயின்…

Read More

பலஸ்தீனத்தை மீண்டும் ஆக்கிரமித்தது இஸ்ரேல்

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் நான்கு சதுர கிலோமீற்றர் பலஸ்தீன நிலப்பகுதியை கையகப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெற்கு பெத்லஹாமில் இருக்கும் நிலப்பகுதியே இஸ்ரேலினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலினால் கைப்பற் றப்படும் பலஸ்தீனத்தின் பாரிய நிலப்பகுதி இதுவென கருதப்படுகிறது. கடந்த ஜன் மாதத்தில் மூன்று யுத இளைஞர்கள் குறித்த பகுதியில் கடத்திக் கொல் லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இஸ்ரேல் இராணு வத்தால் நிர்வகிக்கப்படும் உள்ளுர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேலின் இந்த…

Read More

புதிய மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஹுசைனுடன் இணைந்து பணியாற்ற தயார் – இலங்கை

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் இளவரசர் சையத் அல் ஹுசைனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. கண்டியில் 1-9-2014  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், புதிய ஆணையாளரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக முடிவுகளை எடுத்திருப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர், புதிய…

Read More

இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு, நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது – மஹிந்த

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் நான்கு சதுர கிலோமீற்றர் பலஸ்தீன நிலப்பகுதியை கையகப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெற்கு பெத்லஹாமில் இருக்கும் நிலப்பகுதியே இஸ்ரேலினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலினால் கைப்பற் றப்படும் பலஸ்தீனத்தின் பாரிய நிலப்பகுதி இதுவென கருதப்படுகிறது. கடந்த ஜ{ன் மாதத்தில் மூன்று யு+த இளைஞர்கள் குறித்த பகுதியில் கடத்;திக் கொல் லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இஸ்ரேல் இராணு வத்தால் நிர்வகிக்கப்படும் உள்ளுர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேலின் இந்த…

Read More