Headlines

“முசம்மில் வழங்கும் ஒத்துழைப்பை விக்னேஸ்வரன் அரசுக்கு தருவதில்லை’

கொழும்பு மாநகர சபையில், மத்திய அரசாங்கத்தின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கூட அரசாங்கத்தின் நகர அபிவிருத்திப் பணிகளுக்கு கொழும்பு மாநகர மேயர் நன்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றபோதிலும் வட மாகாண முதலமைச்சர் அபிவிருத்திப் பணிகளில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விசனம் வெளியிட்டார். பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா. மனித  குடியிருப்பு செயல்திட்டத்தின் (யூ.என்.ஹபிடாட்) ஏற்பாட்டில் நடைபெற்ற “நகர…

Read More

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு பலப்படுத்த இணக்கம்

சீனாவும் இலங்கையும் ஒரு நாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது என்ற கொள்கையில் இணக்கம் கண்டுள்ளன. அத்துடன் இரண்டு நாடுகளிலும் அரசியல், சமூக கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு சமாதானமான தீர்வுகள் விடயத்திலும் ஏனைய நாடுகளின் அமைப்புக்களின் தலையீடுகளை எதிர்ப்பதில் இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. இதேவேளை இலங்கையின் ஒற்றுமை, சமாதானம் மற்றும் நல்லிணக்க விடயங்களில் சீனா ஆதரவை வழங்கும் என்று சீனாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read More

சீனாவும் இலங்கையும் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கையில் கைச்சாத்து

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் 28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி இலங்கைக்கு இன்று விஜயம் செய்துள்ளார். இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்த சீன ஜனாதிபதி ஷி ஜின் பின்ங் இற்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின்னர் சீன ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக முன்றலில் இன்று மாலை இடம்பெற்றது. அதனையடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது,…

Read More

சென்னையில் கைதான அருண் செல்வராசனிடம் ராஜிவ் காந்தி கொலை குறித்து விசாரணை

சென்னையில் பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை கடந்த புதன்கிழமை மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அருண் செல்வராசன் குறித்து நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே அருண் செல்வராசனை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி தேசிய புலனாய்வு அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நேற்று நீதிபதி மோனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. புழல் சிறையில் இருந்து அருண் செல்வராசன்…

Read More

உலகில் 9 இல் 1 நபர் பட்டினியால் வாடுகின்றனர்:ஐ.நா

உலக சனத்தொகையில் 9 இல் 1 நபருக்கு அன்றாடம் தேவையான உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர் என இன்று செவ்வாய்க்கிழமை ஐ.நா வெளியிட்ட வருடாந்த அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் உலகம் முழுதும் 805 மில்லியன் மக்கள் ‘chronic undernourishment’ எனும் வெகுநாள் பட்டினியால் அவதிப்பட்டு போசாக்குக் குறைபாடு உடையவர்களாக உள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. உணவுக் குறைபாடானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அனுமதிக்க முடியாத அளவு அதிகமாக உள்ளது என்றும் ஐ.நா இன் உணவு மற்றும் விவசாயத்துக்கான…

Read More

நியூயார்க்கில் பேசவுள்ள மோடியின் உரையை நேரலையில் ஒளிப்பரப்பத் திட்டம்?

விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். இந்த உரையை அந்த நகரமெங்கும் பெரிய திரை அமைத்து நேரலையில் ஒளிபரப்ப செய்ய தீவிரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது. வருகிற 25ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ள நரேந்திர மோடி, அங்கு ஐநா சபையில் உரை நிகழ்த்த உள்ளார். அடுத்த நாள் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நியூயார்க் டைம் சதுக்கத்தில் பேருரையாற்ற உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வரும் நிலையில், மோடியின்…

Read More

உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். புவி வெப்ப மயத்தால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை அளவு குறையும். அதன் மூலம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மழை பெய்யாமல் மிக கடும் வறட்சி ஏற்படும். குறிப்பாக அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி, தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி, இந்தியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சி…

Read More

2016-அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரி விருப்பம்!

அமெரி்க்காவின் மாஜி அதிபர் பில் கிளிண்டனில் மனைவியும் மாஜி வெளியுறவு அமைச்சரும்ான ஹிலாரி. ஜனநயாக கட்சியில் முக்கிய தலைவராக இருக்கிறார். 2016ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரிக்கு ஆர்வம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து நேற்று அயோவா மாகாணத்தின் டெஸ் மோய்னஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சி பிரசார கூட்டத்தில் ஹிலாரி கலந்துகொண்டு பேசினார். அப்போது இது குறித்து கேட்டபோது அதிபர் தேர்தல் என்றாலே எனக்கு உற்சாகம் வந்துவிடுவதாக அவர் தெரிவித்தார். (TO)

Read More

சவூதியில் காணாமல்போன தமிழக பெண், இலங்கையரின் உதவியால் 16 வருடங்கனின் பின் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தமிழக பெண் ஒருவர் 16 வருடங்களாக வீட்டாருடன் தொடர்பின்றி இருந்த நிலையில் நேற்று தமது குடும்பத்தாருடன் இணைந்துள்ளார். நயிமுன் என்ற இந்த பெண் 1998 ஆம் ஆண்டு சவூதிக்கு பணிக்காக சென்றார். அங்கு சென்றவுடன் வீட்டாருடன் தொடர்புகளை இழந்த அவர், சவூதி எஜமானரின் வீட்டில் 16 வருடங்களாக சம்பளம் எதுவும் இன்றி பணியாற்றி வந்துள்ளார். 2002 ஆம் ஆண்டில் இருந்து அவரின் குடும்பத்தினர் நயிமுனை தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் சவூதியில்…

Read More

சீன ஜனாதிபதியே மீண்டும், மீண்டும் இலங்கைக்கு வாருங்கள்..!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்தை கெளரவப்படுத்தும் வகையில் நேற்றுமுதல் அமுலுக்குவரும் பொருட்டு மின்கட்டணத்தை 25 வீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அறிவித்தார். அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றருக்கான விலையை 20 ரூபாவாலும், பெற்றோல் விலையை 5 ரூபாவாலும், டீசல் விலையை 3 ரூபாவாலும் குறைப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் தேசிய கட்டமைப்புக்கு நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் 900 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இணைக்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே…

Read More

84 வயதான அப்துல் சமதுவின் வயிற்றிலிருந்து முருகை கற்பாறை வடிவிலான கல் அகற்றம்

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த  84 வயதான அப்துல் சமது என்பவரின் வயிற்றில் முருகை கற்பாறை வடிவிலான கல்லொன்று சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. கிண்ணியா தள வைத்தியசாலையில் 16-09-2014 குறித்த வயோதிபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, அவரின் வயிற்றில் முன்னீர்க்கும் சுரப்பியிலிருந்த 60 கிராம் நிறையுடைய கல்லே அகற்றப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் ரொஹான் குமாரவினால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வயோதிபர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று…

Read More

முஸ்லிம் அமைச்சர்களை புலனாய்வு பிரிவு கண்காணிக்க வேண்டும் – பொது பலசேனா

அமைச்சரவையில் உள்ள முஸ்லீம் அமைச்சர்களை புலனாய்வு பிரிவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருமாறு பொதுபலசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலான்தே விதானகே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கையில் முஸ்லீம் தீவிரவாதம் உள்ளதாக தாங்கள் விடுத்துவரும் எச்சரிக்கை உண்மையாக மாறிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை முஸ்லீம்கள் உளவாளிகளாக பயன்படுத்தப்படுவது குறித்த இந்திய தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இலங்கையிலிருந்து செயற்படும் முஸ்லீம் தீவிரவாதிகள் இந்தியாவையும் தென்னாசியாவையும் பலவீனப்படுத்த முயல்கின்றனர் என்பதே உண்மை என…

Read More