Headlines

பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு கடத்துவேன்: ஞானசார தேரர்




பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் நான்கு பேரைத் தவிர மற்ற எல்லோரையும் நாடு கடத்துவேன் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்று நடாத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு தேவையில்லை எனக் கருதும் அமைச்சர்களை நாடு கடத்துவதற்கு தங்களுக்கு ஒர் அவகாசம் கிடைக்கப் பெற்றால் நீங்கள் எந்த அமைச்சரை முதலில் நாடு கடத்துவீர்கள் எனக் கேட்கப்பட்டதற்கே தேரர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும், தூர உள்ள நாடொன்றுக்கே நாடு கடத்துவேன். சகல வசதிகளையும் அங்கே அவர்களுக்கு வழங்குவேன் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *