Headlines

நாட்டின் தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர்? – கலகொட அத்தே ஞானசார தேரர்

நாட்டின் தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பதை எதிர்வரும் 28 ஆம் திகதி அறிவிக்க போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும் மஹா சங்க மாநாட்டில் இதனை வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது நாட்டுக்கும் இனத்திற்கும் ஆதரவான தலைவர் ஒருவருக்கான கடும் தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மஹா சங்க மாநாட்டில் அது பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளோம். உண்மையான உணர்வுகளை…

Read More

ISIS க்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்த ஈரான் – அயதுல்லா கமேனி பச்சைக்கொடி…!

ஈராக்கின் வடபிராந்தியத்தில் ஐ.எஸ் க்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போரிடுவதற்கு ஈரான் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஈராக் மற்றும் குர்திஷ் படையினருக்கு ஒத்துழைக்குமாறு தமது உயர்மட்ட கட்டளைத் தளபதிகளுக்கு ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனி அதிகாரம் அளித்துள்ளார். ஈராக்கில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு பாரம்பரியமாக ஈரான் எதிர்ப்பையே வெளியிட்ட வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் அமெரிக்காவின் உதவியுடன் ஈரானுக்கு ஆதரவான சியா படையினர் மற்றும் குர்திஷ் படையினர் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து…

Read More

ISIS க்கு இலங்கையின் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் கண்டனம்

ISIS க்கு, இலங்கையின் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில்  கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் கவுன்சிலின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு மனித உயிர்கள் காவுகொள்ளப்படுவதை ஏற்க முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடனடியாக இவ்வாறான குற்ற செயல்களை நிறுத்துமாறு ஐ.எஸ். வாதிகளின் தலைவரான அபூ பக்ரால் பக்டாடியை சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

Read More

இமாம் சுதைஸ் இரத்த தானம் வழங்கினார்..!

இந்த வருட ஹஜ் புனித கடமைக்கு வரும் லட்சக்கணக்கான ஹாஜிகளின் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக ஐந்து நாள் இரத்த தான முகாம் நடந்தது. இந்த நிகழ்வில் புனித மெக்கா பள்ளியின் இமாம் சுதைஸ் அவர்கள் தனது இரத்தத்தையும் கொடுத்து நிகழ்வை தொடங்கி வைத்தார். இது போன்ற இரத்ததான முகாம்கள் ரியாத், ஜெத்தா, தம்மாம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டு தேவைக்கு அதிகமாகவே இரத்தம் சேமிக்கப்படுகிறது. இந்த முகாமை வருடாவருடம் ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ என்ற அமைப்பு வெற்றிகரமாக…

Read More

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் – கனடா பிரதமர்

 மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்போவதாக கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் கூறினார்.பிரித்தானியாவின் லண்டன் நகரில்,  உரை நிகழ்த்திய அவர், பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தால் மோசமாக நடத்தப்படுவதாக கூறினார்.ஐஎஸ் வாதிகளின் ஆட்சியில் இருக்கும் பிரதேசம், பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதற்கான பெரும் தளமாக மாறலாமென கூறிய அவர், அந்த நிலையில் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாதென தெரிவித்தார்.இதேவேளை, ஈராக்கிற்கு முற்கூட்டியே அறிவிக்கப்படாத பயணம் ஒன்றை மேற்கொண்ட கனேடிய வெளியுறவு அமைச்சர்…

Read More

கத்தாரில் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் இருவர் மாயம்

 நேபாள வம்சாவளி பிரிட்டிஷ் நாட்டவர்களான கிருஷ்ணா உபாத்யாயா(52), குன்டேவ் கிமிரே(36) ஆகியோர் கத்தாரில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆராய்ச்சி செய்துவந்தனர். நார்வேயைத் தலைமையகமாகக் கொண்ட உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான குளோபல் நெட்வொர்க் நிறுவனத்திற்காக கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் இவர்கள் அங்கு பணியாற்றி வந்துள்ளனர்.வரும் 2022ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்த உள்ளதால் அங்குள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவு வேலை வாங்கப்படுவதாக எழுந்த விமர்சனங்களைத்…

Read More