Headlines

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வேலை வாய்ப்புக்களை பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிலவுகின்ற தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் அமல் சேனாதிலங்கார ஆகியோருக்கு இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலா கவர்ச்சிமிக்க மற்றும் தொழில் வாய்ப்புகள் பரவலாக காணப்படுகின்ற நாடு என்ற வகையில் ஐக்கிய அரபு…

Read More

” காஸா இஸ்ரேலின் கைகளை முறித்து விட்டது “

இஸ்மாஈல் ஹனிய்யாவின் பேச்சிலிருந்து … ” எமது போராட்டமும், மக்களது உறுதியும் சேர்ந்து தான் காஸாவின் வெற்றியை உருவாக்கியது” ” எட்டு வருட முற்றுகைக்குள் இருந்தாலும் காஸா மக்கள் உண்மையில் வீரர்கள்.” ” காஸா இஸ்ரேலின் கைகளை முறித்து விட்டது “ ” இந்த உறுதிக்கு சுவனமும், உலகில் வெற்றியும் , மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழக் கிடைப்பதும் தான் கூலி” “இந்தப் போராட்டம் எங்களின் விவகாரத்தைப் பற்றி கவனம் செலுத்தும் படியாக முழு உலகையும் மாற்றி இருக்கிறது…

Read More

எமக்குத் துரோகம் இழைத்த அரபு நாடுகள் – ஹமாஸ்

Abusheik Muhammed ஹமாஸ் வெளியிட்டுள்ள செய்திகள் : 1.- பலஸ்தீன் முஜாஹித்களுடன் இணைந்து மக்களும் வெளிப்படுத்திய உறுதி எதிரிகளை தோற்கச் செய்துள்ளது. 2- இஸ்ரேல், 51 நாட்களாக சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட ஆயுதங்களை பாலஸ்தீன் மக்களுக்கு எதிராக செயல்படுத்தியது பாடசாலைகள், பள்ளிவாயல்கள், விளைச்சல் நிலங்கள், வீடுகள், குடியிருப்புக் கட்டிடங்கள் … போன்ற அனைத்தின் மீதும் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியது. 2100 பேருக்கும் அதிகமானவர்கள் இறை பாதையில் கொல்லப்பட்டனர். 11000 பேர் வரை காயப்பட்டனர். இவர்களுள்…

Read More

கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்

(அகமட் எஸ். முகைடீன்) கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் மெற்றொபொலிடென் கல்லூரியுடன் ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டது. கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெற்றொபொலிடென் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஒரு வார கால துருக்கி நாட்டிற்கான விஜயத்தின்போது மேற்படி ஒப்பந்தம் கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சேர்ஹாட் அக்பினர் மற்றும் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்…

Read More

காத்தான்குடியில் குரங்குகளை சுட்டுக் கொல்லத் திட்டம்

(BBC) வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் நாளாந்தம் அதிகரித்து வரும் இத்தொல்லையை கட்டுப்படுத்த குரங்குகளை சுடுவதற்கு காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதி நகர சபை நிர்வாகத்தினால், பாதுகாப்பு அமைச்சிடம் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நெரிசல் மிகுந்த காத்தான்குடி பிரதேசத்திற்குள் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகளை கலைப்பதற்கு வனவிலங்குத்துறை அதிகாரிகளின் உதவி கோரப்பட்டபோது, அவர்கள் ஆட்கள் பற்றக்குறை…

Read More

ஹமாசுடன் நீண்ட கால போர் நிறுத்த ஒப்பந்தம்: எல்லையில் உள்ள இஸ்ரேல் படைகள் வாபஸ்

இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற தொடர் சண்டையால் காசா அமைதியிழந்து காணப்பட்டது. இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எகிப்து அரசு கேட்டுக்கொண்டது. அந்நாட்டு அரசின் தீவிர முயற்சியால் முதலில் சில மணி நேரங்களும், அதன்பின்னர் சில நாட்களுக்கும் போர் நிறுத்தம் அமுலில் இருந்தது. இதனால், எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் என்ற அச்ச உணர்வு மக்களிடையே இருந்தது….

Read More

வாகனேரி கட்டாக்காட்டுப் பகுதியில் திருடப்பட்ட எருமை மாடுகள் கைப்பற்றப்பட்டன

(வாழைச்சேனை நிருபர்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் எருமை மாடுகள் திருடப்பட்ட நிலையில் பொதுமக்களின் முயற்சியால் தடுக்கப்பட்ட சம்பவம் நேற்று (26) இரவு இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாகனேரி கட்டாக்காட்டுப் பிரதேசத்தில் மாடுகளை வளர்க்கும் மாட்டுப்பட்டியில் இருந்து 102 எருமை மாடுகளை திருடர்கள் திருடி நேற்று இரவு 12.00 மணியளவில் கொண்டு வரும் வழியில் ஆளம்குளம் பிரதேசத்தை அன்மித்த போது இரவில் மாடுகளை சாய்த்து வருவதால் இது திருடப்பட்ட மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில்…

Read More

யாழ். துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (27) இடம்பெற்றது. முன்பதாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா ஆகியோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றதைத் தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கின் பிரதான வாயிலில் அதிதிகள் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து நினைவுக்கல்லினை இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா திரைநீக்கம் செய்து வைத்தார். 145 மில்லியன் ரூபா செலவில்…

Read More

(Video) ஏறாவூர் விபத்து: நேரடிக் காட்சி!

ஏறாவூர் பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு முன் நேற்று இரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற விபத்துக் காட்சி பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது. இதோ அந்த காணொளி: (Video: Mohamed Mihlar)

Read More

இளைஞரை தாக்கிய வாரியபொல யுவதி கைது!

குருநாகல் வாரியபொலவில் யுவதி ஒருவரால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த திலினி அமல்கா என்ற யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். வாரியாபொல பொலிஸ் நிலையத்திற்கு வாய்மொழி வழங்குவதற்காக வந்திருந்த சந்தர்ப்பத்தில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை வருகிறார்

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சிப் மார்ஷல் தாஹிர் ஹபீக் பட்  இலங்கைக்கு இன்று வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (OU)

Read More

இலங்கையில் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வு

இலங்கை மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பல பிட்டிய தெரிவித்துள்ளார்.2005 இல் இலங்கை மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு 4 வீதமாக காணப்பட்டதாகவும் அது தற்போது 46 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (OU)

Read More