Headlines

டுபாயில் இலங்கைப் பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல்




தமது பணி வழங்குநர் உரியமுறையில் சம்பளம் வழங்காமையால் அவருடைய தங்கநகைகளை திருடியமையை இலங்கை பணிப்பெண் ஒருவர் டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பத்திரிகை விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் தமது வீட்டுக்கு பணியாளாக வந்த இலங்கை பெண், இரண்டொரு நாட்களில் தமது பெருமளவு நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக பணிவழங்குநர் பெண் மன்றில் முறையிட்டிருந்தார்.

எனினும் தாம் பணியில் இணைந்து நான்கு நாட்களாகியும் பணி வழங்குநர் உறுதியளித்தப்படி நாட் சம்பளத்தை வழங்காமை காரணமாக பழி தீர்க்கும் வகையில் அவரின் நகைகளை கொள்ளையிட்டதாக இலங்கை பணிப்பெண் மன்றில் தெரிவித்தார்.

இந்தநிலையில் நீதிமன்றம் அவரை செப்டம்பர் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *