Headlines

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் மீண்டும் ஒருமனதாக தேர்வு

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக வங்கியின் தலைவர்களை அவ்வங்கியில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் அமெரிக்காதான் தொடர்ந்து அறிவித்தும் நியமித்தும் வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இப்பதவிக்கான போட்டியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ந்கோஸி ஓக்கோஞோ-ல்வேலா என்பவர் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட தலைவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவராக தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜிம் யாங்…

Read More

முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் – உலக வங்கி

இலங்கைக்கு தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் இலங்கை பொருளாதார சவால்களை வெற்றிக்கொண்டு வெற்றிகரமாக முன்னோக்கி பயணித்து கொண்டிருப்பதாகவும் உலகவங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி நியமித்துள்ள இலங்கைக்கான புதிய பணிப்பாளர் கலாநிதி அய்டா ரிட்டிஹச், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார். உலக வங்கி இலங்கை மீது வைத்துள்ள நம்பிக்கையானது எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மிகவும் பக்கபலத்தை கொடுத்துள்ளது என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். உலக வங்கியின் இலங்கைக்கான புதிய பணிப்பாளர்…

Read More

விவசாயத்துறைக்கு உலகவங்கி நிதியுதவி

நாட்டில் விவசாய அபிவிருத்தியை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியினால் 125 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி கழகத்திடமிருந்து ஒதுக்கப்பட்ட இந்த தொகையானது வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்ய பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விவசாய அமைச்சு மற்றும் முதல்நிலை கைத்தொழில் அமைச்சு ஆகியன ஒன்றிணைந்தே இந்த திட்டத்தினை செயற்படுத்துகின்றன. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்துறையில் அபிவிருத்தி, வர்த்தக அபிவிருத்தி, ஏற்றுமதி மைய…

Read More

நகரங்களின் அபிவிருத்திக்காக 55 மில்லியன் டொலர்கள்

இலங்கையிலுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக 55 மில்லியன் டொலர்களை உலக வங்கி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற அபிவிருத்தி, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்களுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம், காலி, கண்டி ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு குறித்த நிதி பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகவங்கியால் வழங்கப்படவுள்ள குறித்த நிதியானது குறைந்த வட்டியுடன் 5 வருடஇடைவெளியில் 25 வருடங்களில் மீள் செலுத்துவதற்கு ஏதுவாக வழங்கப்படவுள்ளதாக உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்….

Read More

இலங்கை குறித்து உலக வங்கி மகிழ்ச்சி!

இலங்கையில் நடைபெற்ற அதிகார மாற்றத்தின் பின்னர் நல்லதோர் அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் குறித்து ஆராய்வதற்காக உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இந்த குழுவினர் இலங்கையில் இருந்து திரும்பும் முன்னர் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து புதிய அரசியல் கலாசாரம் மற்றும் பொருளாதார வளர்சிக்கான சாத்தியங்கள் குறித்து தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். இதேவேளை, இலங்கையின்…

Read More