Headlines

களனி ஆற்றில் குப்பை : 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது!

களனி கங்கையை மாசுபடுத்திய குற்றச்சாட்டில் 7 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் 4 பெண்கள் மற்றும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸ் கடற்படை பிரிவினர், கைது செய்யப்பட்டவர்கள் பேலியகொட மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது!

களனி கங்கையில் குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேலியகொட மற்றும் வத்தளை பொலிஸாரும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஹேகித்த மற்றும் ஹெமில்டன் பகுதிகளிலும் நீர்நிலைகளில் குப்பை கொட்டிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக குறித்த பிரதேசங்களின் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை…

Read More

வத்தளையில் இரண்டு சடலங்கள் மீட்பு

வத்தளைப் பிரதேசத்திலிருந்து இரண்டு சடலங்களை இன்று (18) மீட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இவ்விரு சடலங்ளும் 16 மற்றும் 09 வயதுடைய சிறுவர்களுடையது என்றும், வெள்ளத்தினால் சிக்குண்டே இவ்விருவரும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Read More

மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி

வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Read More

வத்தளை நடைபாதை விவகாரம் – ஐவர் விளக்கமறியலில்

வத்தளை பகுதியில் இருந்த நடைபாதை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள்; நேற்று (3) மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து இவர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More

மாபோல நடைபாதையை நான் உடைக்கவில்லை – ஜோன் அமரதுங்க

வத்தளை, மாபோல உடற்பயிற்சி நடைபாதையை தாம் உடைக்கவில்லை என கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த பாதையை உடைத்தவர்களை நானும் தேடி வருகின்றேன். பாதையை உடைத்தவர்கள் பிடிபட்டால் அவர்களைக் கொண்டே பாதையை மீளவு அமைத்துக் கொடுப்பேன். பாதையை உடைக்குமாறு நான் கூறவில்லை. உண்மையில் அந்தப் பகுதியில் பாதையொன்றை அமைக்க நான் திட்டமிட்டிருந்தேன். எனினும், நடைபாதையை…

Read More

வத்தளையில் கடலுக்கு நீராட சென்ற இருவர் பலி

வத்தளை – பிரிதிபுர கடலில் நீராட சென்ற இருவர் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தலவாக்கலை – லிந்துலை – பரகம் பிரதேசத்தை சேர்ந்தவர்களே பலியாகியுள்ளனர். குறித்த இருவரும், மேலும் சில நபர்களுடன் நீராட சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள், ராகம போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு கடிதம் கொண்டு வந்த புறாக்கள்

அனுராதபுரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில் கடிதங்களை புறாக்கள் கொண்டு வந்துள்ளன. பண்டைய கடிதப் பரிமாற்று மற்றும் தொடர்பாடல் முறைமையின் ஊடாக நேற்று அனுராதபுரத்திலிருந்து இரண்டேகால் மணித்தியாலங்களில் கொழும்பிற்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுதாரபுரம் டி.எஸ். சேனாநாயக்க ஆரம்ப கல்லூரியில், கடிதப் பரிமாற்றத்திற்கு பறவைகளைப் பயன்படுத்தியமை தொடர்பிலான நிகழ்ச்சியொன்று நேற்று நடத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர் மாணவியருக்கு பறவைகளை கொண்டு கடிதப் பரிமாற்றம் செய்வது தொடர்பில் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது. 12 பறவைகள் இதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தன. பாடசாலை…

Read More