Headlines

அரசாங்கத்துடன் இணையவுள்ள நான்கு ஐ.ம.சு.மு. எம்.பி.க்கள்

தேசிய அர­சாங்­கத்தின் வரவு – செலவுத் திட்ட பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து அர­சாங்­கத்­துடன் இணைந்துகொள்­வ­தற்கு ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ள­னர். இந்த நான்கு பாரா­­­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான மலிக்­ ச­ம­ரவிக்கி­ர­ம­வுடன் இது­தொ­டர்­பாக இரண்டு சுற்று பேச்­சு­வார்த்தைகளை நடத்­தி­யுள்­ள­னர். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் இந்த நான்கு பாரா­­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது தீர்­மா­னம் குறித்து அமைச்சர் மலிக் சம­ர­விக்கி­ரம பிர­­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விடம் அறி­வித்­துள்­ளார்.ஜ­னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அனு­ம­தியின்…

Read More

வெளிநாட்டவர்களுக்கு தாராளமயமும் உள்நாட்டவர்களுக்கு நெருக்கடியும்

ஊழியர் சேம­லாப நிதியம் மற்றும் ஊழியர் நம்­பிக்கை நிதி­யத்தின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தோடு வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு தாரா­ள­ம­யமும் உள்­நாட்­ட­வர்­க­ளுக்கு நெருக்­க­டி­யையும் அரசின் வரவு செலவுத் திட்டம் தோற்­று­வித்­துள்­ள­தாக கொழும்பு மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறு ப்­பினர் தினேஷ் குணவர்த்­தன தெரி­வித்­துள்ளார். அரசின் வரவு செல­வுத்­திட்டம் தொடர்­பாக தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது. 2016ஆம் ஆண்டு நாடு மிக மோச­மான விளை­வு­களை சந்­திக்கும் விதத்­தி­லான வரவு செலவுத் திட்­டத்­தினை அரசு முன்­வைத்­துள்­ளது. இதன் மூலம் ஐ.தே.கட்­சியின்…

Read More

மீண்டும் அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன் – திஸ்ஸ

மீண்டும் அரசியலில் ஈடுபட எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரி விஹாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன். பல்வேறு அரசியல் தீர்மானங்கள் காரணமாக அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்குதல்களை எதிர்நோக்க நேரிட்டது. எனினும், அரசியலில் ஈடுபடவே விரும்புகின்றேன் என திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Read More

புளத்சிங்கள தொகுதியின் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கைது

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகுதியொன்றின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இன்று காலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புளத்சிங்கள தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் துசித குலரத்ன என்பவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இவரது மனைவிக்கு போக்குவரத்துப் பொலிசார் அபராதம் விதித்து, தண்டப்பணம் அறவிடுவதற்கான பத்திரமொன்றை வழங்கியிருந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் துசித குலரத்ன பொலிசாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது….

Read More

வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார். இந்த வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிப்பது என சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும். தேசிய ரீதியில் முக்கியமான தீர்மானங்களை…

Read More

வாக்குவாதம் செய்த தயாசிறி – வெல்கம

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ.சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் கடுமையாக வாக்குவாதப்பட்டுக் கொண்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. விமல் வீரன்ச, தினஸ் குணவர்தன உள்ளிட்டவர்கள் அண்மையில் குருணாகல் மாவட்ட சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற அரசியல்வாதிகளை சந்தித்து தனித்து போட்டியிடுவது குறித்து பேசியுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்….

Read More

நல்லாட்சிக்கமைய செயற்படுகின்றேன்: நிமல் சிறிபால

நல்லாட்சியில் எதுவும் மீதமில்லை என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் நல்லாட்சிக்கமைய செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். நேற்று போக்குவரத்து தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி பதுளை எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது தற்போது வரையில் நல்லாட்சியில் எதுவும் மீதமில்லை, நல்லாட்சி என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டது மட்டுமே நடந்துள்ளது. தனிக்கட்சி…

Read More

தென்­னா­பி­ரிக்கா பய­ண­மானார் சந்­தி­ரிகா

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ளார். “ஐக்­கிய நாடுகள் அமை­தியை கட்­டி­யெ­ழுப்பும் நிதியின் பொறுப்­புக்­கூறல்” என்ற தொனிப்­பொ­ருளில் தென்­னா­பி­ரிக்­காவில் நடை­பெ­றவுள்ள கருத்­த­ரங்கு ஒன்றில் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க உரை­யாற்­ற­வுள்ளார். சந்­தி­ரிகா குமா­ர­துங்க இலங்­கையின் சமா­தானம் நல்­லி­ணக்கம் மற்றும் நம்­பிக்­கை­யெ­ழுப்­பு­தலில் பெற்­றுள்ள அனு­ப­வங்கள் என்ற தலைப்பில் உரை­யாற்­ற­வுள்ளார். இதே­வேளை இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு தொடர்பில் சந்­தி­ரிகா குமா­ர­துங்க தென்­னா­பி­ரிக்க அர­சாங்­கத்தின் அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இலங்­கையில் எவ்­வாறு இந்த உண்­மையை கண்­ட­றியும்…

Read More

ஜனக பண்டார தென்னகோனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோனை நவம்பர் 11ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனக பண்டார தென்னக்கோன் 1999ல் நடந்த கொலை சம்பவம், தொடர்பில்,  அக்டோபர் 6ம் தேதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த வந்த ஜனக பண்டார தென்னக்கோன், இன்று நீதிமன்றில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.

Read More