Headlines

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் : ஜனாதிபதி

இம்முறை நடைப்பெறவிருக்கும் மே தின ஊர்வலங்களுக்காக அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இது தொடர்பில் தமக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலும், காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள மே தினப் பேரணியில் கலந்து கொள்பவர்களை…

Read More

மஹிந்தவை மத்திய குழு கட்டுப்படுத்த முடியாது.!

ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் மத்­திய குழு எடுக்கும் தீர்­மா­னங்கள் கட்­சியின் சகல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்தும் தன்மை கொண்­டது. எனினும் மஹிந்த ராஜ­பக் ஷ இந்த நாட்டின் முன்னாள் ஜனா­தி­ப­தி­யாவார். எனவே ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வழி­ந­டத்­து­வது போன்று அவரை வழிநடத்த முடி­யாது. அவரை இரா­ஜ­தந்­திர ரீதியில் அணுகவேண்டும். ஆகவே அவ­ரது விடயத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிரத்­தி­யே­க­மான முறையில் கையாள்வார் என திறன் விருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று (18) காலை…

Read More

சு.கவின் மே தின கூட்டம் காலியில்

– வி.நிரோஷினி – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாக கனிய எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

கூக்குரல் இடுவதனால் கட்சியை வீழ்த்த முடியாது: பைசர் முஸ்தபா

கூக்குரல் இடுவதனால் கட்சியை வீழ்த்த முடியாது என உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (27) நடைபெற்ற செய்தியாளா சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்று கூக்குரல் இடுவதனால் கட்சியை தோற்கடித்துவிட முடியாது. சில திட்டமிட்டு இவ்வாறு கூக்குரல் இடுவதனால் கட்சியை உள ரீதியாக…

Read More

யாப்புக்கு அப்பால் எவருக்கும் முன்னுரிமை இல்லை

– எஸ்.ரவிசான் – கட்சியின்கொள்கைகள் உட்பட யாப்புக்கு அப்பால்சென்று எந்தவொறு தரப்பினருக்கும் முன்னுரிமை வழங்க கூடாது எனவும் கட்சியினை நேசிக்கும் ஒருவரே உண்மையான மக்கள் பிரதிநிதியாக போற்றப்படுவார் எனவும் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும் முன்னால் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

ஐ.ம.சு.முன்னணியை மகிந்த அமரவீர பலப்படுத்துவார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை சக்திமிக்க கட்சியாக மாற்றுவதற்கு செயலாளர் மகிந்த அமரவீர அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் மகிந்த அமரவீர, நேற்று (16) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்  தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எமது முன்னாள் செயலாளர் விஷ்வ வர்ணபால…

Read More

பேஸ்புக்கில் அவதூறு ஏற்படுத்தும் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும்

அரசியல்வாதிகள் தொடர்பில் பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பும் கும்பல் தொடர்பில் இன்னும் சில நாட்களில் தகவல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (16) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீர இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேஸ்புக் கும்பலில் 40 தொடக்கம் 50 வரையான நபர்கள் இருப்பதாகவும், இவர்களுக்கான பணம் வழங்குவதெற்கென சிலர் இருப்பதாகவும்…

Read More

“கூட்டு எதிர்க்கட்சியில் பங்கேற்க SLFP க்கு அனுமதி கிடையாது”

கூட்டு எதிர்க்டக்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அனுமதி கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் 17ம் திகதி கொழும்பில் பாரிய பேரணி ஒன்றையும் கூட்டமொன்றையும் நடாத்த உள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே துமிந்த திஸ்ஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த கூட்டத்திலும்…

Read More

எனது மகன் அரசியலில் ஈடுபட மாட்டார் – சந்திரிக்கா

தனது புதல்வரான விமுக்தி குமாரதுங்க எந்த காலத்திலும் இலங்கையில் அரசியலில் ஈடுபட மாட்டார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி, கட்சியின் தலைமையகத்தில் நேற்று (08) இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் யாரிடமும் பதவிகளை கேட்க மாட்டேன். எனது மகன் இங்கு அரசியலில் ஈடுபட வரமாட்டார். குடும்ப ஆட்சி நாட்டில் தொடர்ந்தும்…

Read More

“மஹிந்த தனிக்கட்சி அமைத்தால் பலவீனமடைவார்”

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மாற்றுத் தரப்பாக இயங்குவதே மஹிந்த ராஜபக் ஷவின் அரசியலுக்கு பலமாக இருக்கும். தனிக்கட்சி ஆரம்பித்தால் பலவீனமடைவார் எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 1977 இல் இந்திராகாந்தி இவ் வாறே செயற்பட்டு தனது அரசியல் பலத்தை பலப்படுத்தினாரென்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் காமினி திஸாநாயக, லலித் அத்துலத் முதலி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி…

Read More

26 மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 26 புதிய மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைப்பாளர்களுக்கு  நியமனம் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.

Read More

தனித்து செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக   பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்  மாகாணசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் எக்காரணத்தை கொண்டும் தனித்துவமாகவோ அல்லது சுயாதீனமாகவோ செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அதையும் மீறி தனித்துவமாக செயற்பட்டால்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற…

Read More