Headlines

நளினி மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உட்பட நால்வர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி மத்திய பெண்கள் தனிச்சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி கணவன் – மனைவி இருவரும் 15 தினங்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசிக்கொள்வார்கள். இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் நளினி அப்பா இறந்ததை தொடர்ந்து 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டு இறுதி அஞ்சலிக்கு சென்று வந்தார்….

Read More

இலங்கை வர முற்பட்ட அகதி கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமாக தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை வர முற்பட்ட நபர் ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) ஆவார். குறித்த நபர் கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தங்கியிருந்ததோடு, கூலித் தொழில் செய்து வந்தார் என தமிழன ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. மீனவர்களின் தகவலின்படி தனுஷ்கோடி பொலிஸார், நடராஜனை பிடித்து மேலதிக விசாரனை…

Read More

தவ்ஹீத் ஜமாஅத்திடம் நாங்கள், படிப்பினை பெற வேண்டும் – வை.கோ.

குறிப்பிட்ட சமூகம் மட்டுமே குப்பைகளை அள்ள வேண்டும் என்ற நிலையை உடைத்து அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பணி பாராட்டுக்குரியது. நாங்கள் படிப்பினை பெறுகிறோம். – வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக

Read More

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டவர் இந்தியாவில் உயிருடன் இருக்கின்றார்

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னை டாக்ஸி சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், 41 வயதான குறித்த சாரதி உயிருடன் இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த நபர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் இராமேஸ்வரத்தில் உயிரிழந்த நபரின் சடலம், இலங்கைக் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்…

Read More

சென்னையில் மீண்டும் கச்சேரியை தொடங்கிய மழை

சென்னையில் நேற்று பின்னிரவில் இருந்து லேசாக வெளுக்கத் தொடங்கிய வானம், இன்று பிற்பகலில் இருந்து மேகப்போர்வையை போர்த்திக் கொண்டது. சுமார் ஒருவாரத்துக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருவதையும், பஸ், ரெயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து ஆங்காங்கே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, எழும்பூர், மைலாப்பூர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடர்த்தியான…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி அனுதாபம்

இந்தியா தமிழக தலைநகர் சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தனது டுவிட்டர் பக்கத்தினூடாக தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம் – மைத்ரி” என தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சென்னை தமிழ்நாட்டில் பெய்து வரும் கடும் மழை வெள்ள அனர்த்தத்தினால் இதுவரையில் 269 பேர் உயிரிழந்ததுடன் இலட்சக் கணக்காணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தமது…

Read More

அன்று முஸ்லிம்களுக்கு வீடு இல்லை என்றேன், இன்று கண்கள் கலங்குகிறேன்..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இஸ்லாமியர்கள் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டு காப்பாற்றினர். பின்னர் அவர்களை பள்ளிவாசலில் தங்க வைத்து உணவு வழங்கினர். அப்போது ஒரு முதியவர் இதே இஸ்லாமியர்களுக்கு அன்று நான் வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டேன் என்றேன், ஆனால் இன்று அதே இஸ்லாமியர்கள் என்னையும், என் குடும்பத்தையும் மீட்டு பள்ளிவாசலில் தங்க வைத்து உணவு கொடுக்கிறீர்கள் என்று கண்களில் கண்ணீர் மல்க கூறினார். இன்று என் குடும்பம் உயிர் பிழைக்க அல்லா தான் உங்களை…

Read More

தமிழகத்தில் வெள்ள பாதிப்பால் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு

சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்யும் கனமழையால் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசெம் கூறியுள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக ஒருங்கிணைந்த கூட்டமைப்பு (அசோசெம்) அறிக்கையில், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இந்த சூழ்நிலை வர்த்தகம், தொழிற்சாலைகள் மற்றும் பல வணிக நடவடிக்கைகளுக்கு அச்சத்தையும், ஸ்திரமற்றதன்மையையும் உருவாக்கியுள்ளது. சாதாரண குடிமகனும் சொத்துகள் சேதமடைவதன் மூலம் இழப்பை…

Read More

இந்தியாவின் முதல் திருநங்கை பொலிஸ் அதிகாரி நியமனம்!

காவல் துறை அதிகாரியாக சேலத்தை சேர்ந்த கே.பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. காவல்துறை அதிகாரியாக சேலத்தை சேர்ந்த கே.பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நியமன உத்தரவு நிறைவேற்றப்பட்டால், இந்தியாவிலேயே, ஒரு திருநங்கை காவல்துறையின் துணை ஆய்வாளர் என்ற பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும். தமிழக காவல்துறையின் துணை ஆய்வாளராக அவரை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…

Read More