Headlines

வல்லரசு நாடுகளை பின்தள்ளிய இலங்கை!

உலகில் மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் எவை என்ற பட்டியலை Happy Planet Index வெளியிட்டுள்ளது. 140 நாடுகள் இதன்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப்பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சீனா, இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் முதல் 30 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. ஆனால் இலங்கை 28வது இடத்தில் இருக்கிறது. முதல் 30 இடங்களிலுள்ள நாடுகளின் பட்டியல் வருமாறு, 1 Costa Rica 2 Mexico…

Read More

திறைச்சேரி உண்டியலில் இருந்து பண உதவிகள் இனி இல்லை

எதிர்வரும் காலத்தில் நகர்புற குடியிருப்புக்கள் மற்றும் கிராம புற குடியிருப்புக்கள் உருவாக்கும் திட்டம் தொடர்பாக அரச திறைச்சேரி உண்டியலில் இருந்து பண உதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று அரசு தீர்மானித்துள்ளது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகளினால் மட்டுமே நகர மற்றும் கிராமிய குடியிருப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. குடியிருப்புக்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டும் நிலங்கள் அரசின் மூலம் வழங்கப்படுவதுடன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் முதலீட்டாளர்கள் மூலம் வழங்குவதற்கு அரசு தீர்தானித்துள்ளது. இப்புதிய திட்டத்தின் மூலம் கொழும்பில்…

Read More

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டவர் இந்தியாவில் உயிருடன் இருக்கின்றார்

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னை டாக்ஸி சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், 41 வயதான குறித்த சாரதி உயிருடன் இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த நபர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் இராமேஸ்வரத்தில் உயிரிழந்த நபரின் சடலம், இலங்கைக் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்…

Read More

இளமையும், துடிப்பும் கொண்ட தலைவராக றிஷாதை காணுகிறேன் – காசி சபருள்ளா

இளமையும், துடிப்பும் கொண்ட ஒரு அரசியல் தலைவராக அமைச்சர் றிஷாத் பதியுதீனை காணுவதாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ள பங்களாதேஷின் அவாமி லீக் ஆளும் கட்சியின் தலைமைத்துவ சிரேஷ்ட உறுப்பினர் காசி சபருள்ளா கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீனை நேற்று (03) வியாழக்கிழமை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் சூழல் இந்த நாட்டின் உண்மையான ஜனநாயகத்தினை எடுத்தியம்பும் ஒன்றாக காணமுடிந்ததாக…

Read More

இலங்கை அதிக வருமானம் பெறும் நாடாக மாறிவிடும்: ரணில்

பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாக ஆக்குவது கடினமான பணி. எனினும், அது சாத்தியமற்றது அல்ல என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பங்குச் சந்தையின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், அதனை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு காரணம் 2030ஆம் ஆண்டளவில் இலங்கை அதிக வருமானம் பெறும் நாடாக மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சியை 6.5…

Read More

சவூதி அரேபிய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

சவூதி அரேபிய தூதரகம் முன்பாக தேசிய சங்க சம்மேளனம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையொருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டம் சவூதி அரேபியா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. சவூதி அரேபிய உயர்ஸ்தானிகர் இல்லாத காரணத்தினால் கோரிக்கை அடங்கிய மனுவொன்றை அங்கிருந்த பொறுப்பதிகாரியிடம் தேசிய சங்க சம்மேளனம் கையளித்துள்ளது. அத்துடன், இந்த விடயம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்வு…

Read More

இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படுவதனை எதிர்க்கின்றோம்: கூட்டு எதிர்க்கட்சி

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் நிறுவப்படுவதனை எதிர்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சயிட் சாகீல் ஹுசெய்னிடம் தெரிவித்துள்ளது. அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளனர். இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவதனை நம் எதிர்க்கின்றோம் என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து நாம் வருத்தமடைகின்றோம். எமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனம் சுயாதீனமான நாடாக இயங்குவதனை விரும்பி செயற்பட்டோம். பலஸ்தீன மக்களின் கனவுகளை மெய்படச் செய்ய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த…

Read More

இலங்கையில் முதலீடு செய்ய முனைப்புடன் களத்தில் இஸ்ரேல்!

இலங்கையில் இஸ்ரேல் நட்புறவு மன்றம் நிறுவப்பட்டதை தொடர்ந்து… இலங்கையில் முதலீடு செய்வதில் இஸ்ரேல் முதலீட்டார்கள் கடும் முனைப்பு காட்டிவருவதை  அவதானிக்க முடிகிறது.மிக அண்மைக்காலத்தில் இலங்கை அமைச்சுகள் சிலவற்றுக்கு விஜயம் செய்தபோது அமைச்சின் அமைச்சர்கள் இஸ்ரேலிய நாட்டு முதலீட்டார்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதாக தகவல் வழங்கப்பட்டது.அண்மையில் தேசிய வன அமைச்சுக்குக்கு விஜயம் செய்த போது  யால மற்றும் வில்பத்து வனங்களில் கேபள் கார் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் இஸ்ரேலிய நாட்டு முதலீட்டாலர்களுடன் அமைச்சர் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டது. இது…

Read More

இலங்கையுடன் உறவு தொடரும்: அவுஸ்திரேலியா

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் அவுஸ்திரேலியாவும் புரிந்துணர்வுடன் கூடிய உறவைக் கொண்டிருக்கின்றன. அவுஸ்திரேலியாவில் சுமார் 130, 000 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவின் அபிவிருத்திக்கு உறுதுணையாக செயற்பட்டு வருகின்றனர் என்றும் பிஸப் குறிப்பிட்டுள்ளார்’

Read More

அமெரிக்கா உடனான இருதரப்பு வர்த்தகத்தில் 13% அதிகரிப்பு!

“2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உடனான இருதரப்பு வர்த்தகத்தில் எமது தரப்பில் 13% அதிகரிப்பை காணக்கூடியதாக இருந்தது” என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பு, கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2015 (US Trade Show 2015) ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், எனக்கு கீழ் உள்ள வர்த்தக திணைக்களத்தின் படி அமெரிக்காவுக்கான, இலங்கையின் இன்றைய வருடாந்த தேசிய…

Read More

உறவை பலப்படுத்திக்கொள்ள இலங்கையும் பூட்டானும் இணக்கம்

இலங்கையும் பூட்டானும் தமக்கிடையே உறவுகளை பலப்படுத்திக்கொள்ள இணங்கியுள்ளன. இரண்டு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெளிநாட்டு அலுவலக கலந்துரையாடல் நேற்று கொழும்பில் நிறைவுபெற்றது இதன்போது பூட்டானின் குழுவுக்கு அந்த நாட்டின் வெளியுறவு செயலாளர் சேரிங் டொர்ஜி தலைமை தாங்கினார். இலங்கை குழுவுக்கு வெளியுறவு அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகிஸ்வரா தலைமை தாங்கினார். கலந்துரையாடல்களின்போது கல்வி, சுகாதாரம், சுற்றுலா, பொருளாதார ஒத்துழைப்பு உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. இதேவேளை இலங்கையில் தற்போது மருத்துவப்பட்டப்படிப்பு உட்பட்ட பல துறைகளிலும் சுமார்…

Read More

ஐ.எஸ். தாக்குதல்கள் விரைவில் இலங்கையில்  இடம்பெறலாம் BBS

– க.கமலநாதன் – தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்கள் விரைவில் இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார். மதத்தீவிரவாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்களுக்கு போதிக்கப்பட்டு அவர்களை தீவிரவாதிகளாக்குவதன் பின் விளைவுகளை முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்கொள்ள நேரிடும் எனவும் குர்ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகள் தற்போதைய நடைமுறைக்கு சாத்தியமற்றது…

Read More