Headlines

 சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

கடந்த வருடம் காலமான, மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தலைமையிலான ஐவரடங்கிய குழு, கொழும்பு பிரதான நீதவானினால் நியமிக்கப்பட்டுள்ளது. டொக்டர் அஜித் தென்னகோன், டொக்டர் குமுதினி ரணதுங்க, டொக்டர் நிமாலி பெர்னாண்டோ மற்றும் டொக்டர் இரேஷ் விஜயமன்ன ஆகியோரே ஏனைய உறுப்பினர்களாவர்.

Read More

சோபித தேரரின் பதவிக்கு தம்பர அமில தேரர்

நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மாதுளுவாவே சோபித தேரர் அண்மையில் காலமானதை அடுத்து, அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. மாதுளுவாவே சோபித்த தேரரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவ்வாறே முன்னெடுக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் நிறைவேற்று குழு, தம்மர அமில தேரரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், நிறைவேற்றுக் குழுவிற்கும்…

Read More

சோபிததேரரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் : பிரதமர்

சங்கைக்குரிய அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மறைந்த சங்கைக்குரிய மாதுலுவாவே சோபிததேரரின் இறுதி நிகழ்வுகள் நேற்று (வியாழக்கிழமை) இலங்கை நாடாளுமன்றத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கள் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சாதாரண பிரஜை ஒருவருக்காக அரச மரியாதையுடன் கூடிய இறுதிக் கிரியைகள் நடத்தப்படுகின்றது. சோபிததேரர் ஏதேனும் ஓர்…

Read More

சோபித்த தேரரின் இறுதி ஊர்வலத்தில் முஸ்லிம்களின் பணிஸ் தன்சல்..

மறைந்த மரியாதைக்குரிய  மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடலுக்கு இன்று இன, மத பேதமின்றி பலரும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தோருக்கு முஸ்லிம் சகோதரர்கள் தானசாலையொன்றை அமைத்து ‘பணிஸ்’ வழங்கியிருந்த நிகழ்வை சிங்கள ஊடகங்களும், இன- மத நல்லுறவுக்கு இலங்கை முஸ்லிம் உதாரணமாக வாழ்கிறார்கள் என குறிப்பிட்டு இருந்தது காணக்கூடியதாக இருந்தது. இன, மத நல்லுறவுக்கு உதாரணமாக அமைந்த இந்நிகழ்வின் படங்கள் சில..

Read More

சோபித தேரரின் இறுதி கிரியைகள் : நேரடி ஒளிபரப்பு

மறைந்த சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ளரும் கோட்டே ஸ்ரீ நாகவிகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு ­வாவே சோபித தேரரின் இறுதிக்கிரி­யைகள் பூரண அரச மரி­யா­தை­யுடன் தற்போது பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன.

Read More

நாகவிஹாரையிலிருந்து கண்ணீர் வெள்ளத்துடன் பயணிக்கும் மாதுலுவாவே

இறையடி எய்திய மாதுலுவாவே சோபித்த தேரரின் தேகம், கோட்டே ஸ்ரீ நாகவிஹாரையிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது. பெருந்திரளான மக்களின் துயர கண்ணீருடன் அன்னாரை சுமந்த பேழை விஹாரையிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாகவிஹாரைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அன்னாரது தேகம், பாராளுமன்ற கட்டட மைதானத்தை நோக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றது.

Read More

சோபித தேரருக்கு காத்தான்குடியில் முஸ்லிம்களால் அஞ்சலி

– ஜவ்பர்கான் – மறைந்த சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரருக்கு காத்தான்குடி பிரதேச முஸ்லிம் மக்களால் அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழ் முஸ்லிம் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சங்கைக்குரிய சோபித தேரர் ஞாபகார்த் உரை சிங்களத்திலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்டது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு பிரதேசமெங்கும் துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் அவரது ஞாபகார்த்தமாக பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.

Read More

தாக்குதல்களின் போதும் சளைக்காதவர் சோபித தேரர்: மஹிந்த

நல்லாட்சியையும் சகவாழ்வையும் இலக்காக கொண்டு போராடி இன்னுயிர் நீத்த கோட்டே ஸ்ரீ நாகவிகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரருக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாதுலுவாவே சோபித தேரருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். கடந்த காலங்களில் மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த வீரரின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு என அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது குறிபபிட்டார்….

Read More

மாதுலுவாவே சோபித தேரரின் கடைசி ஆசை?

காலம் சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் கடைசி விருப்பம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நான் மரணித்த பின்னர் பெறுமதிமிக்க சவப்பெட்டி, வீதி ஊர்வலம், கொடிகள், பெறுமதிமிக்க சுடலை போன்றன இருக்கக் கூடாது. உயிரிழந்து 24 மணித்தியாலத்திற்குள் என்னை தகனம் செய்ய வேண்டும் என காலம் சென்ற சோபித தேரர் சிங்கள ஊடகமொன்றுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நேர்காணல் வழங்கியிருந்தார். 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் திகதி பிரசுரமான வார இறுதிப் பத்திரிகையில் இந்த…

Read More

சோபித தேரரின் உடலுக்கு மக்கள் அஞ்சலி

மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித தேரரின் உடல் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதன்படி இன்று காலை 09.00 மணிமுதல் 12ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை கோட்டை நாக விகாரையில் அன்னாரின் உடலுக்கு பொது மக்கள் இறுதி மரியாதை செலுத்த முடியும்.

Read More

சோபித தேரர் மறைவு: அமைச்சர் றிஷாத்  இரங்கல்

இலங்கையின் அரசியலில் மாற்றமொன்று ஏற்படுவதன் மூலம் சிறுபான்மை சமூகங்கள் தமது அரசியல் அந்தஸ்த்தையும், பாதுகாப்பினையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் செயற்பட்டு வந்த சோபித தேரரின் இறப்பு, இலங்கையில் தற்போதைய சூழலில் ஈடுசெய்யப்பட முடியாததொன்று என்று அகில .இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மாதுலுவாவ சோபித்த தேரரின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது – ஜனவரி 8 ஆம்…

Read More

சோபித தேரர் காலமானார்

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – சிறந்த சமயத் தலைவர் சோபித தேரரர் காலமானார். இலங்கை மக்களுக்கு பாரிய இழப்பு இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்னின்றவர்களில் முக்கியமானவராக கருதப்பட்ட மாதுருவாவே சோபித தேரர் இன்று (08) காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் இன்று அதிகாலையில் சிங்கப்பூர் வைத்திய சாலையில் இறையடி சேர்ந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல காலமாக  இலங்கையில் சர்வாதிகார ஆட்சி முழ நாட்டு மக்களையும் அதாளபதாளத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருந்த நிலையில்…

Read More