எவற்றை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்: கூறுகின்றார் மஹிந்த
எங்களுடைய வாழ்க்கையில் மறக்கவேண்டிய விடயங்களைப் போன்று நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயங்களும் இருக்கின்றன. மறக்க வேண்டிய விடயங்களை மரணத்தறுவாய் வரைக்கும் கொண்டு செல்ல முயற்சிக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். அங்கொடை கொஹிலவத்த கங்காதிலக்க விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், முப்பது வருட யுத்தம் இன்று சிலருக்கு மறந்திருக்கின்றது. யுத்தத்தில் முன்னின்று போராடிய இராணுவத்தினரை…
