Headlines

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு மேஜர்ஜெனரல் கமால் புகழாரம்

சிறிலங்காவின் முதன்மையான புலனாய்வுச் சேவையான இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் வீழ்ச்சியைத் தடுக்காவிடின், நாடு கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன. தெரண தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், ‘உயர்மட்ட வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு லெப்.கேணல் அதிகாரிகள் உள்ளிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தீவிரமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. மரபு ரீதியான இராணுவ அச்சுறுத்தலை…

Read More

இராணுவ அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்காக

திருகோணமலை காலனித்துவம் மற்றும் அண்மைய இராணுவத்தின் வரலாறு  தொடர்பான அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டள்ளது. இலங்கை இராணுவம் திறந்தவெளி அருங்காட்சியகம் ஒன்றை திருகோணமலை உவர் மலை பகுதியில் அமைத்துள்ளது. நேற்று முன்தினம்  (19) 22ம் பிரிவு தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதனை திறந்து வைத்தார். இன்று முதல் பொதுமக்கள் இதனை பார்வையிட முடியும். காலாற்படை ஆயுதங்கள்,கவச வாகனங்கள், பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ஆடியோ காட்சி  போன்றவை இதில்…

Read More

இழிவான நபர் நானல்ல! மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன

போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நான் அல்ல என மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கமல் குணரட்ன போர் இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… அண்மையில் வெளியிடப்பட்ட நூலின் ஊடாக எந்தவொரு போர் இரகசியங்களும் அம்பலப்படுத்தப்படவில்லை. நான் போர் இரகசியங்ளை வெளியிடும் படைவீரனல்ல. போர் இரகசியங்கள் இருந்தால் அது…

Read More

மாலி நாட்டை பாதுகாக்க தயாராகும் இலங்கை இராணுவத்தினர்

இலங்கை இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் அமைதி பணிகளுக்காக விரைவில் மாலிக்கு அனுப்பப்படவுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார் இந்தநிலையில் இலங்கை படையினருக்கு நவீன ரக ஆயுத பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் விடுத்த வேண்டுகோளை, ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு பாதுகாப்பு அமைச்சர் மட்டக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. லண்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்தக்கோரிக்கையும் இணக்கமும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் இது இலங்கைக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்று ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மேஜர் ஜெனரல் குணரத்ன ஓய்வு

மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து -05- நேற்றுடன் ஓய்வுபெற்றார். இறுதிக்கட்டப் போரில், மேஜர் ஜெனரல் குணரத்ன 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார். கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குணரத்ன, 2001 ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், 523, 551 ஆவது பிரிகேட்களினதும், வான்வழி தாக்குதல் படைப்பிரிவினதும் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். பின்னர், 55ஆவது, 53ஆவது டிவிசன்களி்ன் கட்டளை அதிகாரியாக இருந்தார். 35 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய…

Read More

2763 படையினர் சேவை நீக்கம்

பொது மன்னிப்பின் கீழ் 2763 படையினர் சட்டரீதியாக பதவியிலிருந்துநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் உத்தியோகபூர்வமாக விலகுவதற்குகடந்த திங்கட்கிழமை முதல் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய கடந்த 3 நாட்களில் 2574 இராணுவ சிப்பாய்கள் சட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகுவதற்கு முன்வந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். அத்துடன் விமானப்படை சிப்பாய்கள் 118 பேரும், கடற்படை சிப்பாய்கள் 71பேரும் குறித்த இந்தக் காலப் பகுதியில் சட்டரீதியாக விலகுவதற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்….

Read More

படைகளிலிருந்து தப்பியவர்களுக்கு பொதுமன்னிப்பு

பாதுகாப்பு படைகளில் இருந்து தப்பிச்சென்ற, முறையான விடுமுறை எடுக்காமல் வீடுகளுக்குச் சென்று சேவைக்கு திரும்பாத வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 21ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளும் அறிவித்துள்ளன. பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து முப்படைகளின் உயரதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

Read More

விசாரிக்க இராணுவ நீதிமன்றம்

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு, அடிப்படை விசாரணை இராணுவ நீதிமன்றத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைதிரிபால சிறிசேன தலைமையில், நேற்று திங்கட்கிழமை அவசரமாக கூடிய, தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு அமைவாக, அடிப்படை விசாரணை இராணுவ நீதிமன்றத்தை நிறுவுமாறு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஸாந்த டி.சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார். அதனடிப்படையில், அடிப்படை விசாரணை  இராணுவ நீதிமன்றம் நிறுவப்படும்…

Read More

நிவாரண – மீட்பு பணிகளில் முப்படையினர்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலுக்கமைய பாதிக்கப்பட்ட பகுதிகளில் மே மாதம் 15 ஆம் திகதியிலிருந்து இராணுவத்தினர் பல்வேறு நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட கொடூரமான மண்சரிவில் சிக்கியவர்களை நிவாரண மற்றும் மீட்கும் பணிகளில் 58 ஆவது படைப்பிரிவின் 300 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் (இலங்கை சிங்க ரெஜிமண்ட் மற்றும் 8 விஜயபாகு)…

Read More

ரணவிரு ஞாபகார்த்த விழா ஜனாதிபதி தலைமையில்!

தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் எதிர்வரும் 18 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள படைவீரர்கள் ஞாபகார்த்த திடலில் இடம்பெறவுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். மேற்படி நிகழ்வானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ள கலாச்சார நிகழ்வுகளையடுத்து நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) இடம்பெற்ற தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து…

Read More

தேசிய இராணுவ மாத கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

தேசிய இராணுவ வீரர்கள் மாதம் 2016 அறிவிக்கப்பட்டு அதன் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கும் நிகழ்வு நேற்று (05) ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இராணுவ சேவை அதிகாரசபையின் தலைவர் அனோமா பொன்சேக்கா கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். மூன்று தசாப்தகால கொடிய யுத்தத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் தேசிய இராணு வீரர்கள் மாதத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் கொடி விற்பனையினூடாக பெறப்பட்ட நிதியும்…

Read More

தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு இடமில்லை

தேசியப்  பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். முன்னைய அரசாங்கம் செய்யாததை நாம் செய்கின்றோம் என்பதற்காக தேசியப்  பாதுகாப்பில் சந்தேகம் கொள்ளத் தேவையும் இல்லை. தேசியப்  பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க போவதில்லை. அதேபோல் இப்போதிருக்கும் நிலைமையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு, எந்த சந்தர்பத்திலும் சர்வதேச நீதிமன்றத்தின் மூலமாக எமது இராணுவத்தை…

Read More