Headlines

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ; பாடசாலைகள் மூடப்படும் விபரம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம்தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரைமேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 27 பாடசாலைகள்பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அதில் 6 பாடசாலைகள் முழுமையாகவும் 21பாடசாலைகள் பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு இராஜகிரிய வித்தியாலயம்,நாலந்தா வித்தியாலயம், கண்டி விஹாரமஹாதேவி பெண்கள் மகாவித்தியாலயம், கண்டி சுவர்ணமாலி பெண்கள் பாடசாலை,…

Read More

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரசுடன் இணைந்து செயற்படும் தனியார் பாடசாலைகளின் இந்த ஆண்டுக்காக இரண்டாம் தவணைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி மீண்டும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணைக் காலம் ஆரம்பமாகவுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 02ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் இடம்பெற உள்ளது. தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இடம்பெற இருப்பதால் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் தினம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Read More

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Read More

முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு 7, 8 ஆம் திக­தி­களில் விடு­முறை

நோன்புப் பெரு­நா­ளை­யொட்டி, நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு எதிர்­வரும் 7 ஆம், 8 ஆம் திகதி களில் விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சின் முஸ்லிம் பாட­சா­லைகள் அபி­வி­ருத்திப் பிரிவின் பணிப்­பாளர் இஸட்.தாஜூடீன் தெரி­வித்தார். குறித்த இரு விடு­முறை தினங்­க­ளுக்­கு­மான பதில் பாட­சாலை ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் திக­தி­களில் நடாத்­தப்­பட வேண்டும் எனவும் அமைச்சு கேட்­டுள்­ளது. இது ­கு­றித்து, கல்­வி­ய­மைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் கல்விப் பணிப்­பா­ளர்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ள­தா­கவும் பணிப்­பாளர் தாஜூடீன் மேலும் தெரி­வித்தார்….

Read More

வடமேல், சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பாடசாலைகளுக்கு இன்று (17) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமேல் மாகாண பாடசாலைகள் நாளை வியாழக்கிழமை தொடக்கம் வழமை போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மண்சரிவின் பாதிப்பு அதிகமாகவுள்ள நிலையில் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையே கொழும்பு மாவட்டத்திலும்…

Read More

26 பாடசாலைகள் மூடப்பட்டன

மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியமையை அடுத்து, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 26 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தளை மாவட்டத்தில் தொடங்தெனிய வித்தியாலயலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் 25 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புத்தளம், நிக்கரவெட்டிய, சிலாபம், கிரிஉல்ல ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Read More

‘தற்காலிக விடுமுறை வழங்கலாம்’

நாட்டில் நிலவுகின்ற மோசமான வானிலை காரணமாகப் பாடசாலைகளைக் கொண்டு நடத்துவதில் இடையூறுகள் ஏற்படுமாயின், அவைதொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், சகல வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளார். பாடசாலையைக் கொண்டுநடத்துவதற்கு இயலாத நிலைமையொன்று ஏற்பட்டால், அவ்வாறான பாடசாலைகளுக்குத் தற்காலிகமாக விடுமுறை வழங்குவதற்கோ அல்லது தற்காலிகமாக மூடிவிடுவதற்கோ அனுமதி உண்டு என்றும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

கொழும்பு பிரிட்ஜெட் கான்வென்ட்டுக்கு பூட்டு

கொழும்பு – 7 இல் அமைந்துள்ள எஸ்.ரி பிரிட்ஜெட் கான்வென்ட்டுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் என அந்தப் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

Read More

அனைத்து முன்பள்ளிகளையும் மூடத் தீர்மானம்

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு கிழக்குமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கிழக்குப் பாடசாலைகள் 12.00 மணியுடன் பூட்டு!

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் அனைத்தும் பகல் 12.00 மணியுடன் நிறைவடையுமென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சகல அரச பாடசாலைகளையும் இன்று முதல் (03) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை காலை 7.30 தொடக்கம் பகல் 12.00 மணிவரை பாடசாலையை நடாத்துமாறு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

கடும் வெப்பம்: பாடசாலைகளுக்கு பூட்டு

வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் அனைத்தும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நண்பகல் 12 மணியுடன் நிறைவடையுமென வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை,மறு அறிவித்தல் வரை நண்பகல் 12 மணியுடன் பாடசாலைகள் மூடப்படுமென வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்  மேலும் தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாணத்தில் நிலவி வரும்  கடும் வெப்பமான காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளும் நண்பகல் 12 மணியுடன் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 8 ஆம் திகதி விடுமுறை

இவ்வாண்டின் முதலாம் தவணை பாடசாலை விடுமுறைக்காக சகல முஸ்லிம் பாடசாலைகளையும் இம் மாதம் 8ஆம் திகதி மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் ஒரே தினத்தில் விடு முறை வழங்க வேண்டும் என்ற முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் விடுத்த விஷேட வேண்டு கோளின் பிரகாரம்,…

Read More