Headlines

ஆசிய பசுபிக் வீடமைப்பு அமைச்சர்களின் மாநாடு

இந்தியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் வீடமைப்பு அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கை சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர் ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்களின் நாட்டில் அமுல்படுத்தப்படவிருக்கும், வீடமைப்பு மற்றும் குடியிருப்பு செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. வீடமைப்பு, குடியிருப்பு அபிவிருத்தி, நகரமயமாதல், போன்ற…

Read More

தேசிய வீடமைப்புத்தின் முதலாவது கொடி ஜனாதிபதிக்கு!

யூன் 23 ஆம் திகதி இடம்பெறும் தேசிய வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொடி வாரத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அணிவிக்கும் நிகழ்வு நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கொடிகள் அணிவிக்கப்பட்டன. காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஸ்தாபகர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் பிறந்த தினத்தை குறிக்கு…

Read More

வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகள்

அரநாயக்க மற்றும் புலத்கொஹூபிடிய ஆகிய பகுதிகளில் மண்சரிவினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டம் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Read More

பாதித்தோரை நல்லாட்சி கைவிடாது

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும், தாய்நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரையும், நல்லாட்சி அரசாங்கம் கைவிடாது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை காலவரையரையின்றிக் கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவும், பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். அதுமட்டுமன்றி, உட்கட்டமைப்பு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட சகல வசதிகளும் ஏற்படுத்தி…

Read More

மழையால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள்

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ‘இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் கோரிக்கைக்கு அமைய, அந்த அமைச்சால் பெற்றுக்கொடுக்கப்படும் தகவல்களை கொண்டு, முற்றாக சேதமடைந்த வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படும்’ என சஜீத் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளார். அவரது அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைச் சொன்னார்.

Read More

மஹிந்தவின் பெயரிலும் வீட்டுத் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அனைத்து நாட்டு தலைவர்களின் பெயரிலும் வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு புதிய கிராமங்கள் உருவாக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Read More

மயானமாக இருந்த மத்தள விமானநிலையம் இயங்கப்போகின்றது

சீனாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட விஜயமானது  வெளிப்படைத்தன்மை மற்றும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான  நோக்கமாக  அமைந்திருந்தது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசியல் மயானத்திற்குள் தள்ளிவிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையத்தை இயங்கச் செய்வதற்கும் இவ்விஜயம் உந்து சக்தியாக அமைந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வெலிஓயாவில்  நடைபெற்ற “இசுறுபுர” கிராம வீடமைப்பு திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும்   நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ…

Read More

பிரதமருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: சஜித்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளும் முயற்சிக்கு சகலரது ஒத்துழைப்புகளும் அவசியம் என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு ஆதரவான பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மக்களின் நிலைப்பாடுகளை மதித்து நாட்டை அபிவிருத்தி செய்ய இடமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். ராஜபக்சவினரும், அவரை சுற்றியிருப்பவர்களும் தற்போதை அரசாங்கம் நாட்டில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி…

Read More

மைத்திரியை ஐ.தே.க பாதுகாக்கும்

– எம்.எம் மின்ஹாஜ் – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் முட்டாள்கள் அல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர்களினால் பாதுகாக்க முடியாவிடின் ஐக்கிய தேசியக் கட்சியினரான நாம் அவரை பாதுாப்போம் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டப்ளியூ.ஆர் .டீ.  பண்டாரநாயக்க ஆரம்பித்தது ஒரு குடும்பத்தினருக்கு சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல. மைத்திரிபால சிறிசேன விவசாயி என்பதனால்  அவரின் தலைமையின் கீழ் செயற்பட…

Read More

உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுங்கள்- மஹிந்தவுக்கு அறிவுரை

தமது மகன் கைது செய்யப்பட்டமை காரணமாக மஹிந்த ராஜபக்ச தம்மீது அவதூறான குற்றங்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகளும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உங்களது மகன், யோசித்த ராஜபக்ச குற்றவாளியா? குற்றமற்றவரா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். எனினும் மகன் கைது செய்யப்பட்டமைக்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை தம்மீது சுமத்த வேண்டாம் என்று துலாஞ்சலி…

Read More

திஸ்ஸமகாரம  குடிநீா்த்திட்டத்திற்கு 3930 மில்லியன் நிதி ஒதுக்கீடு

– அஷ்ரப். ஏ. சமத் – “நேற்று அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும்போது திஸ்ஸ மகராம மக்கள் பருகும்  அசுத்த நீர் குப்பிகளைக் கொண்டு சென்று  முழு அமைச்சரவைக்கும்  காட்டினேன். இப்பிரதேசத்தில் சிறுநீா் நோய்க்குள்ளாக்கப்பட்டுளள மக்கள் பற்றியும் உரையாற்றினேன்.   அதன் நிமிா்த்தம்  அமைச்சரவை உடனடியாக 3930 மில்லியன் ரூபாவை திஸ்ஸமகாரம  குடிநீா்த்திட்டத்திற்கு நிதி ஓதுக்கித் தந்தது”. என அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா். சஜித் பிரேமதாச இன்று(19) பத்தரமுல்லை செத்சிரிபாயவில் உள்ள அவரது  அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா்…

Read More

மக்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளனர்: மஹிந்த

மக்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேகமாக வாழ்க்கை செலவு உயர்கின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில் தற்போதைய அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணித்து செயற்படுவதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராமை, மஹேன்புர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்த வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சில அமைச்சர்கள் கூறுவதனை…

Read More