Headlines

எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட றிப்கான் பதியுதீன்

எருக்கலம்பிட்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களை சந்திப்பதற்கு நேற்று முன் தினம்(18) திடீர் விஜயமொன்றை மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மேற்கொண்டார். எதிர்வரும் 23ம் திகதி நடைபெற இருக்கும் நிகழ்வினை பற்றியும் அன்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைய இருக்கும் சகோதரர்கள் பற்றியும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காகவே இன்றைய விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.   

Read More

ஆசிரியர் விடுதிக்கான அடிகல் நாட்டு விழா

முசலி தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு தங்குமிட விடுதிக்கான அடிகல் நாட்டு விழா நேற்று (17) நடைப்பெற்றது.  இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முன்னாள் முசலி பிரதேசசபை உப தவிசாளர் பைரூஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

Read More

சித்தியடைந்த மாணவர்களுக்கு றிப்கான் பதியுதீன் வாழ்த்து

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் சிறந்த முறையியல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் தெரிவித்தார் அத்தோடு குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துமாறும் அவர்களுக்கான சிறந்த கல்வி வழிகாட்டல்களை உருவாக்கி வைக்குமாறும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிர்ப்பு

-பாறுக் ஷிஹான்- யாழ் பரச்சேரி முஸ்லீம் கிராமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான்  பதியுதீன் விஐயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு திடீர்   விஐயம் மேற்கொண்ட வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்  அக்கிராமத்தில்  மீள் குடியேறிய ,  மக்களிடம்  சென்று கலந்துரையாடினார் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(12)  ஜும்மா தொழுகையின் பின்னர் மிக பின்தங்கிய கிராமமான  உள்ள யாழ் பரச்சேரி கிராம மக்கள் எதிர் நோக்கும் வாழ்வாதார காணி நிரந்தரவீடு…

Read More

இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி என்னைப் பழிவாங்கும் நோக்குடையது –  றிப்கான் பதியுதீன்

தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார். தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த விடயம் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் கூறியதாவது, எவரோ ஒருவர் வேண்டுமென்று என்மீது கொடுத்த முறைப்பாட்டை ஆழ அகல விசாரிக்காமல், என்னைக் குற்றவாளியாக இனங்காட்ட சில பத்திரிகைகளும், இணையத்தளங்களும்…

Read More