கொழும்பு வாழ் முஸ்லிம்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் அதீத அக்கறை செலுத்த வேண்டும்! – அமைச்சர் றிஷாத்
ஆசிரியர் தொழில் புனிதமானது. மகிமையானதும் கூட. இந்தக் கண்ணியமான ஆசிரியர் தொழிலை புனிதமாக மதித்து, மாணவர்களின் கல்விக்கு அர்ப்பணிப்புடன், ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். கொழும்பு, கன்ஸா சர்வதேச பாடசாலையில் அதிபர் அன்வர்தீன் தலைமையில் இன்று காலை (06/10/2016) இடம்பெற்ற, ஆசிரியர் தின விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, ஆசிரியர்கள் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் சரிவர மேற்கொள்ள வேண்டும். கற்பித்தலில் தமது பிள்ளைகளைப் போன்று, மாற்றார் பிள்ளைகளையும்…
